...

12 views

அவள் எடுத்த முடிவு
அத்தியாயம் -02

சந்தேகத்தீ

ஜன்னலிலிருந்து இவர்களுடைய உரையாடலைப் பார்த்துக்கொண்டிருந்த குமாருக்குப் பொறுக்கவில்லை. கோபம் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. செல்வி வீட்டிற்குள் நுழைந்ததும் திட்ட ஆரம்பித்தான் குமார். மாறி மாறி ஒருவருக்கொருவர் கத்திக்கொள்ள சண்டை மெல்ல மெல்ல பெரிசாகி...தெருவில் போவோரையும் வருவோரையும் அது முகம் சுளிக்க வைத்துக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்துக்கு மேல் பேசமுடியாமல் போக அவமானம் தாங்காத செல்வி அழுதுகொண்டே பெட்ரூமுக்குள் சென்று கட்டிலில் 'பொத்'தென்று விழுந்தாள். திருமணமான சில நாட்களிலேயே குமாருடையை சந்தேகப்புத்தி அவளுக்குத் தெரிந்துவிட்டதென்றாலும் இதுவரையிலும் பொறுத்துக்கொண்டுதானிருந்தாள். தன் பெற்றோரிடம்கூட ஒரு வார்த்தை இது பற்றிக் கூறியதில்லை. என்னதான் இவள் பொறுத்துபோனாலும் அவன் மாறியதாகத் தெரியவில்லை.
அழுது கொண்டிருந்த செல்வி எழுந்து அமர்ந்தாள். நீண்ட நேரமாக எதையெதையோ சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
'பேசாம இவர பத்தி அம்மாகிட்ட சொல்லிரலாமா... வேண்டாம்... அவங்களுக்கு எதுக்கு தேவையில்லாம மனக்கஷ்டத்த கொடுக்கணும்... அப்படியே அவங்களுக்குத் தெரிஞ்சானாப்ல... என்ன ஆயிடப்போகுது. வேற என்ன செய்யலாம்... இந்த மனுஷனோட பேச்ச கேட்டு தினம் தினம் சாகுறதுக்கு ஒரேடியா செத்து தொலைஞ்சிருவோமா... நல்ல வேளையா குழந்தைன்னு ஒன்னு இல்ல. இல்லைனா... ரொம்ப கஷ்டம்... வேண்டாம்... சாகக் கூடாது. நான் என்ன தப்பு செஞ்சேன் சாகுறதுக்கு...' என்று பலவாறாகக் குழம்பியவள்
முகத்தில் கடைசியில் ஒரு தெளிவு தெரிந்தது. அந்த தெளிவுக்குக் காரணம் அவள் எடுத்த முடிவுதான்.

-தொடரும்

@tamilthoorika
#tamilththoorikaa
#தமிழ்த்தூரிகா2023
#அவள்எடுத்தமுடிவு
#சந்தேகத்தீ
#02jan143
#WritcoQuote
#writco
© தமிழ்த்தூரிகா