...

10 views

அவள் எடுத்த முடிவு
அத்தியாயம் -04

வெறுப்பு

அடுத்த நாளும் வந்தது. எப்போதுமே சண்டை போட்டால் ஒரு வாரம் இரண்டு வாரம் கூட குமார் வீட்டில் சாப்பிடாமலிருப்பான். அதனால் செல்விக்கு அன்று அதிக வேலை இல்லை. இரண்டு தோசை மட்டும் சாப்பிட்டு முடித்துவிட்டு செல் போனை எடுத்து கலாவைக் கூப்பிட்டாள்.
அந்தப் பக்கம் கலாவின் குரலைக் கேட்டதும்,
"கலா... அவரு காலைல 9மணிக்கே கிளம்பி வெளிய போய்ட்டாருடி.... நான் ரெடியா தான் இருக்கேன். வீட்டு வேலைக்கெல்லாம் இன்னைக்கு நான் லீவு விட்டுட்டேன். நீ வந்ததும் கிளம்ப வேண்டியது மட்டும் தான் பாக்கி. நீ ரெடியா தான இருக்க", என்றதும்... மறுபக்கம் இருந்த கலா,
"ஆமாடி... நான் ரெடியா தான் இருக்கேன். உன்னோட போன் call க்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இன்னும் 10நிமிஷத்துல அங்க இருப்பேன். நீ வீட்டைப் பூட்டிட்டு வெளிய வா... நானும் வந்துருவேன்", என்று சொன்னதும்,
" சரிடி... late பண்ணாம வந்து சேரு" என்று சொல்லி செல் போனைத் துண்டித்துவிட்டு வீட்டைப் பூட்டினாள்.
கலாவின் வீடு இரண்டு தெரு தள்ளிதான் இருந்தது. அதனால் அவளும் சீக்கிரம் வந்து செல்வியைப் பிக்கப் செய்து கொண்டாள். வண்டி மெயின் ரோட்டை அடைந்து சீரான வேகத்தில் வக்கீல் ஆபீஸை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
அப்போது, "செல்வி... நல்லா யோசிச்சியாடி "என்று கலா கேட்க,
"இங்க பாருடி... உனக்குத் தெரியாதது இல்ல... நான் எவ்ளோ தான் தாங்குறது.. சொல்லு.. வேற என்னன்னா கூட சரின்னு போகலாம்... ஆனா.. இப்படி எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படுறவர்கிட்ட என்னால இனி வாழ முடியாதுடி. மனசுக்குள்ள ரணமா அறுக்குதுடி அவரோட பேச்சு. இத்தனை வருஷமா பொறுத்துட்டேன்.. இனி முடியாதுடி. அவர் மேல அப்படியொரு வெறுப்பு தீயா எரியுதுடி" என்று செல்வி சொல்லிக் கொண்டிருக்கும்போதே 'டமால்' என்று ஒரு சத்தம் கேட்டது. உடனே வண்டியை நிறுத்தினாள் கலா.

-தொடரும்

@tamilthoorika
#tamilththoorikaa
#தமிழ்த்தூரிகா2023
#அவள்எடுத்தமுடிவு
#வெறுப்பு
#04jun148

© தமிழ்த்தூரிகா