...

10 views

வாண்டுகள் உலகம்
ப்ரெண்ட்ஸ் பட, விஜய்யும், சூரியாவும் , இவங்க தான் என/தெரிந்தவர்கள் எல்லோருமே கேலி பேசுவர்...
ஆனாலும் தங்கள் நட்பை விட்டு தராத...

சூரியும் - பாரியும்...

இந்த கதையில் நாயகர்கள்...


தெரு கோடியில் உள்ள மரத்தடியில் கூடி இவ்வாறு பேசினர்....

சூரி: நண்பா,

பார்ட்டிக்கு போகலாமா?

பாரி:என்னடா விசேஷம்?

சூரி:எங்கள் வீட்டில் டீ பார்ட்டிடா நண்பா..

பாரி:அப்படியா? இன்றா?ஏன்டா? முன்னமே சொல்லல?இப்பவே கிளம்பனுமா?

சூரி:ஆமாடா.போகலாம்,. போகும் வழியில் மற்ற நண்பர்களையும்
கூப்பிட்டுக்கலாம்....வா...!

பாரி:இன்றைக்கு சந்தோஷமான விஷயத்தை சொல்லி இருக்க நண்பா..
என்று சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் பாரி... பின்...ஏதோ..நினைவுக்கு வந்தது போல....
.டேய்...சூரி... உங்கள் வீட்டில் நல்ல டீ போடுவாங்களாடா....

சூரி:குடித்து பார்த்தால் உனக்கே தெரியும்...ஆமாம்....
இதுவரைக்கும் நான்,,உன்னை டீ பார்ட்டிக்கு அழைத்ததில்லை ...
இதுவே முதல்முறை இல்லையா?

பாரி:ம்ம்....ம்.....என்றான் வேகமாக தலையாட்டியபடி...

சூரி:சரி.....வா....வண்டியில் ஏறு ... நேரமாச்சு...கிளம்புவோம்...

பாரி:நண்பா....நான்தான் வண்டியை ஓட்டுவேன்...

சூரி:சரி...நண்பா...ஆனால்....இந்த தடவை மட்டும்தான் சரியா?

பாரி:சரிடா...புரியுது...
போவோமா....

சூரி.போகலாம்...ஆனால், யார்மீதும் இடித்திடாமல் ஓட்டு....

பாரி:அதெல்லாம் எனக்கு நன்றாக தெரியும்....நீ...பயப்படாதே ...

சூரி:சரிடா ...உனக்கு எல்லாம் தெரியும்...என்று
சலித்துக்கொண்டே.நீ...எடு....வண்டியை ....என்றான்.

பாரி : கெட்டியாக...
பிடிச்சுக்கடா..என்றபடி...
வாகனத்தை உதைத்து ஸ்டார்ட் செய்து -... கிளப்பினான்...

சூரி:என்ன நண்பா...
புல்லட் ஸ்டார்ட்- ஆன சத்தமே இல்லை....

பாரி:டேய்....இது புல்லட்டாடா....என கேட்டுவிட்டு...சூரியின் பதிலை எதிர்பார்க்காமல், ரஜினி ஸ்டைலில் இப்ப....இப்ப....இப்ப.. புல்லட் சவுண்ட் கேட்கும் பாரு...என்றான் உற்சாகமாக.... பின்னர்.....

டுபு...டுபு... டுபு....டுபு என ....
சொல்லிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக, அவ்விடத்தை விட்டு,நகரத் தொடங்கினான்....

கதை முடிஞ்சிடுச்சி...
சந்தோஷமாயிருங்க ...
ப்ரண்ட்ஸ்....
பாய்....🙋.

போவதற்கு முன்பாக , கதை புரிந்திருந்தால் லைக் பண்ணிடுங்க... மறக்காமல்
கமென்ட் பண்ணிடுங்க...
© s lucas