என் பிழைகளின் அழகான தண்டனை....
ஒரு சில தவறுகளின் பிடியில் சிக்கி பல கஷ்டங்களுக்கு பலியாகி பாதையின் குறுக்கே தடம் பதித்து காலத்தை கரைத்து கடந்து கொண்டிருந்த அந்த தருணத்தில், இத்தனை நாளும் நான் கடந்த நாட்களுக்கு இடையே இல்லாத ஒரு புதுவித சுவாரஸ்யமான நாள் ஒன்று என்னை கடக்க நேரிட்டது. அந்த நாள் மீண்டும் ஒரு முறை பூலோகத்தில் பிறப்பெடுத்த மகிழ்ச்சி. என்னை எனக்கு அடையாளம் காட்டிய நாள்........என்னவனை அடையாளம் கண்ட நாள்....... என்னை மறந்து என் வேலை செய்து கொண்டிருந்த போது என் வேலையையும் மறக்க வைத்த மணாளன் அவன்....பார்த்ததும் பிடிக்கும் அழகன், அவன்.பார்த்ததும் பல எண்ணங்கள் தோன்றினாலும் மறைத்து வைத்து பாதுகாத்து கொண்டேன், என்னவனின் ரகசியங்களை. இரசிப்பவை அனைத்தையும் சொந்தம் கொண்டாட முடியாதே என்ற முரண்பட்ட எண்ணம் ஒரு பக்கம் வைத்து கொண்டு சுவாரஸ்யமாக காலம் கடந்து கொண்டிருந்தேன். அவனின் தரிசனம் மீண்டும் ஒரு முறை கிடைத்தது. ஆனால் நான் முற்றிலும் தொலைந்தேன் அவனில். அவன் பெயரறியாமல் என் அடையாளத்தை அவனில் தேடி கொண்டிருந்தேன். அவன் வருகை எதிர்பார்த்து அவனிற்கே தெரியாமல் அவனுடன் ஒரு சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன். என் வாழ்வில் இப்படியும் நாட்கள் நகருமா என்று திளைத்தேன். நான் தேடிய ஒன்று என்னையும் தேடி திளைத்திருக்கிறது. உண்மை என்னவனும் என்னை கண்டிருக்கிறான். பல சுவாரஸ்யமான வருகைகக்கும் உரையாடல்களுக்கும் நடுவில் நெடிய தேடலுடன் கூடிய காதலும் எங்களை அறியாமல் ஆட்கொண்டிருந்தது. இத்தனை கனவுகளுக்கும் ஆசைகளுக்கும் இடையில் நான் எதிர்பார்த்த என்னவனின் நவ நாகரீக அழைப்பேசி குறுஞ்செய்தி. கடவுள் தந்த என் மொத்த வாழ்வின் விலைமதிப்பற்ற பரிசாய் வந்தான். என் ஒவ்வொரு கனவும் கண் முன்னே வந்து காட்சிகளாய் கவர்ந்தன. என் பிழைகளின் தண்டனைகளாய் என்னவனின் பாதங்களின் காதலை இரசித்து கொண்டே சுவாரஸ்யமாக வாழ்கிறேன். கொஞ்சல் களுடன்,
© Geevagaindhu
© Geevagaindhu
Related Stories