...

18 views

உதிரும் பூக்கும் உறவுகள்
யாரிதழை யார் கொய்கிறார் என்ற ஆராய்ச்சிக்கு இடம் தாராமல் மென்மையிலொரு வன்மையும் வன்மையிலொரு மென் முத்தத்ததை இதழுக்குள் கடத்திக் கொண்டிருந்தனர் இருவரும்..

வளியின் தீண்டலுக்கு தேகம் சிலிர்த்து போகும் மென் பூக்களைப் போல அவளது தேகம் சிலிர்ந்தேழுந்தது அவன் முத்தத்தீண்டலில்.

"கல்யாணம் பண்ணிக்கலாமா???"என அப்பூக்களை சாட்சியாக வைத்துக் கொண்டு கேட்டான். அவளும் இதழ்களைப் பிரித்து தன் சம்மதத்தை சொல்ல, பூக்களுக்குள் மத்தியில் ஒரு வைபோகம் நிகழ்ந்தது.

*****

முன்பைப் போல வேகம் குறைந்த இதழ் தீண்டலில் சட்டென அவள் நிலையறிந்து விலகினான். வாடிய இதழ்களுக்குள் மீண்டுமொரு சிலிர்ப்பு..

"நான் போனதுக்கு அப்றம் இவங்கள நீ பார்த்துப்பா தானே!"என்றாள்.

"இவங்கள நான் பார்த்துப்பேன். என்னை யார் பார்த்துப்பா, என்னை பார்த்துக்க நீ வேணும்டி"என்றான் கண்ணீருடன்.  அவள் இதழை போல தேகத்தையும்  மென்மையாக அணைத்தான் அந்த பிணியுற்ற மலரை.

******

தனியாக பூக்களுக்கு மத்தியில் அமர்ந்தவன் அருகே  மலர்ந்த பூவிதழை கண்டு மனைவியின் இதழை  நினைவு கூர்ந்து கண்ணீர் சிந்தனான்.

மென் கரம் ஒன்று அவன் கண்ணீரை துடைத்து நெற்றி கன்னம் என தன் மென்மைக்கும் மென்மையான இதழை பதித்து இதழை விரித்து சிரித்தது.

"நான் இருக்கேன்ப்பா உனக்கு  அழாத..."என்ற மகளை
வாஞ்சையுடன் பார்த்தவன் அவள் நெற்றியில் தன் முத்தத்தை வைத்து அணைத்துக் கொண்டான்.

உதிரும் பூக்களுக்கு பதில் வேறு சில  பூக்களும் பூப்பது போல நம் வாழ்விலும் உதிரும் பூக்கும் உறவுகள்.


© All Rights Reserved