...

5 views

சேற்றில் தானே பூக்குது தாமரை?
இரு மாடுகளை வளர்த்து வந்த,
மதி என்பவனுக்கு துணையாக இரதி என்பவளை முடிவு செய்தார்கள் ....

ஜாதி வழக்க படி எளிமையாக திருமணம் செய்யும் திட்டமிருந்தது....

இதற்கிடையே, ஆடுகளுக்கு தழை வெட்டி வர கழனி பக்கமாக சென்ற....
இரதியை....அவள் முறைமாமன் இரகு : வழிமறித்து...என்ன இரதி...?

யாரோ...பையன் ரொம்ப நல்லா மாடு மேய்க்கிறானாமே?
ஊர்ல பேசிகிட்டாங்க என வம்பிழுத்தான்....

ஆமா, மாமா, அவன் கூட தான் முடிச்சி போடபோறாங்க....
நீ வந்து மனசுக்கு நிறைவா வாழ்த்திட்டு போ...என்றாள்... காட்டமாக....

நல்லாயிரு ...போகிற இடத்துலயாவது வாய குறைச்சிக்கோ ...
மாமனா...இருந்தாலும்...தாய்மாமனா இருக்கனும் சீறுக்காவது மதிப்பீங்க ஊர்ல....என்றபடி மூடிய வாயை திறவாமல்... நடையை கட்டினான் ...

ஹோய்.... மாமா...நீ என்ன கலெக்டராவா இருக்க....?
கோழி பண்ணைக்காரன்தான... உனக்கு ஏன் இவ்வளவு கிண்டல்...?
என குத்தி காட்டினாள் இரதி....

சும்மா போன மாமனுக்கு சுருக்கென இருக்குமா? இல்லையா?

கடுப்பில் இப்படி கேட்டான்...
ஏன் என்னை சோதிக்கிற இரதி ?
உன்னை கிண்டல் செய்யும் உரிமை எனக்கில்லையா?
எனக்கு அப்புறம் தான் மாடு மேய்க்கிறவன் என்றான்...

இதை கேட்டதும் ஜென்மத்தில் ஏதோ சுள்ளென்றுரைக்க...
அப்படினா.. எங்கப்பங்கிட்ட கேட்க வேண்டியதுதானே?
என்று கேட்டு முறைத்தாள்....இரதி....

இதைத்தான் எதிர்பார்த்தேன்...
இப்பவே ....சம்மதம் "னு சொல்லு......உன் வீட்டுக்கு
போய்...பொண்ணு கேட்கிறேன்....?
என கண்ணடித்து சிரித்த மாமனிடம்....

ஈயென பல்லை சுழித்து காட்டி
பழித்த ....இரதி...

நான் ஆட்டுக்கு தழை வெட்டத் தான் வந்தேன்..
உன்னோட...
வீண் அரட்டையடிக்க இல்லையென்றபடி...
வெட்டறிவாளை உயர்த்தி காட்டி....எச்சரித்தாள்..

தன்னிலை மாமன் மண்டைக்கு உரைக்கும்படி..சொன்ன - திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தாள்...

........
நீங்கள் இன்னுமா இந்த கதையை படித்து கொண்டிருக்கிறீர்கள்?

ஒரு லைக்கு போட்டிடுங்க...கமெண்ட் பண்ணிடுங்க...
🙋🙋🙋...
© s lucas