...

16 views

என் காதலி-3
என் மொபைல் பார்த்து உறைந்து போய் நிற்கிறேன்
அவள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறாள் என்றும்
குறுஞ்செய்தி வந்தது
மனது பதட்டமாய் நிதனமற்று நிற்கிறது
எப்படி என்ன ஏதோதோ என் மனதில் அவளை பற்றிய ‌நினைவுகள்‌ ஓடிக்கொண்டிருந்தது
அவளை காண அந்த மருத்துவமனைக்கு சென்றேன்
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள்
அவள் முகம் முழுவதும் கட்டுகள்
உடல் முழுவதும் தழும்புகள் என்று ஆக்ஸிஜன் மாஸ்க் போடப்பட்டு மயக்க நிலையில் இருந்தாள்
அவளை கண்டு விழிகள் கலங்குகிறது அவளின் நிலை பார்த்த பின்
அவர்கள் உறவினர்கள் என்னை யார் என்று வினாவினார்கள்
நீ யார்? எதற்கு இப்படி அழுகிறாய் ?
என்று அவளின் கல்லூரி நண்பர் என்றேன்
சரி என்று கூறினார்கள்
அவளுக்கு இப்படி எவ்வாறு நிகழ்ந்தது என்று கேட்டேன்
அவள் தன் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று வீணாக செலவு செய்யாமல் பிறந்தநாளில் இருந்து மூன்று நாட்கள் உணவு வழங்குவாள் ஏழை சாலையோர ஆதரவற்ற வர்களுக்கு
அவளின் பிறந்தநாள்
அடுத்த நாள் இரவு எப்போதும் ஏழைகளுக்கு உணவு கொடுத்து கொண்டு
வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தாள்
மதுபோதையில் இருந்த ஒரு பணக்காரன் காரை அதி வேகத்தில் இயக்கி இவளின் வண்டி மீது மோதி தூக்கி வீசபபட்டுவிட்டாள்
அந்த வழியில் ‌சென்ற சிலர் மருத்துவமனையில் சேர்த்தனர்
அவளின் மொபைல் போன் மூலமாக தான் எங்களுக்கு தகவல் கிடைத்து வந்தோம் என்றார்கள்
அங்கு இருக்க மனம் ஏங்குகிறது
ஆனால் பணிக்கு நேரமாகி விட்டது
விடுமுறை பெற்று அவளுடன் இருக்கலாம் ஆனால் அவள் சுயநினைவில் கூட இல்லை
என்று நினைத்து அவர்களிடம் இருந்து விடைப்பெற்று வந்தேன்
அலுவலகத்தில் எனது வேலைகள் முழுமையாக மனநிலையில் இல்லை அவளின் நினைவுகள் என்னை வாட்டி கொண்டிருந்தது விழிகள் கலங்கி கொண்டே இருந்தது 😔😔😔😭😭😭.....!!????

தொடரும்.....!!!!!
© All Rights Reserved