...

9 views

இணைந்த கைகள்


மழை மேகங்கள் மெல்ல கூடிக்கொண்டே வந்தது. பேருந்தில்இருந்த பயணிகள் தங்களின்மேல் மழை நீர் விழாமல்இருக்க கண்ணாடிச்சட்டங்களை மூடிக்கொண்டுஇருந்தனர். “நல்லவேலை என்அருகில் யாரும் இல்லை” என எண்ணியவாறே கவிதா மழைச் சாரலை அனுபவித்தாள்.

 

செங்கனல் கிராமத்தில் ஆசிரியையாக வேலைக்கு சேர இருக்கும் கவிதா அளவு கடந்த ஆனந்தத்துடன் அந்த பயணத்தை மேற்கொண்டிருந்தாள். சிறு வயது முதலே ஆசிரியை பணி அவள் கனவாக இருந்தது. இன்று அந்த கனவு மெய்ப்பட்ட மகிழ்ச்சி ஒரு பக்கம், இன்னொரு புறம் தனது பூர்விகமான செங்கனல் கிராமத்திலேயே முதலில் பணி அமர்த்தப் பட்டது.

 

மழையின் காரணமாக மண்ணின் ஈரமும், வாசனையும் ரசித்தவாறே மெதுவாக ஊருக்குள் நுழைந்தாள் கவிதா. தந்தை கூறிய அடையாளத்தை வைத்து ஊரின் பொதுவில் உள்ள முத்தாளம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கியவள்  அங்கிருந்த பூசாரியிடம் ஊர் தலைவரின் முகவரி பற்றி கேட்டறிந்தாள்.

 

கொஞ்சம் நாகரிகமாகவே இருந்தது தலைவரின் வீடு. மெல்ல கதவை தட்டியவளின் குரலுக்கு மதிப்பளித்து வந்து எட்டி பார்த்த நபருக்கு ஒரு எழுபது வயதிருக்கும். யார் வேண்டும், என்ற கேள்விக்கு மரியாதையோடு பதிலிரைத்தாள் கவிதா. அங்கிருந்த நாற்காலியில் அவளை அமர செய்துவிட்டு சென்றவர் சற்று நேரத்தில் தண்ணீரும் மிதமான சூட்டில் பாலும் எடுத்து வந்தார்.

 

கவிதா மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.  வயதில் மூத்தவர் செய்யும் சேவை அவளை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த ஊர்த் தலைவர் கொஞ்சம் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்குமே என இஷ்ட தெய்வத்தை வேண்டியவாறு இருந்தாள்.. சற்று நேரத்தில் கரும்பச்சை நிற யமஹா வண்டியில் வந்து இறங்கிய நபருக்கு ஒரு முப்பது வயதுக்குள் இருக்கும். இவளை வரவேற்கும் வகையில் தலையை அசைத்தவன் பெரியவரிடம் திரும்பி “ஏதாவது சாப்பிட்டாங்களா” என அக்கரையோடு விசாரித்தான்.

 

 

கவிதா கொஞ்சம் குழம்பிப் போனாள். தலைவரை பார்க்க வந்தால் யரோ ஒரு இளைஞன் தலைவர் தோரனையில் பேசுவது அவளுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவளின் முக மாற்றத்தை கவனித்தபடி அவள் பக்கம் திரும்பியவன். “பயணம் எல்லாம் சுகம் தானே” எனக் கேட்டான். அவன் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு பதில் கவிதா “நீங்கள்’ என கேள்வி எழுப்பினாள். சின்ன புன்முறுவலோடு “நீங்கள் தேடி வந்த கார்மேகம்” என்றான்.

 

சில வினாடிகள் அங்கே ஒரு அமைதி நிலவியது. மன்னிப்பு கேட்கும் தோரனையில் பேச ஆரம்பித்த கவிதாவை தன் கை அசைவால் நிறுத்தி “இதில் உங்கள் தவறேதும் இல்லை. ஊர் தலைவர் என்றதும் நீங்கள் கொஞ்சம் சினிமா பண்ணையார் போல நினைத்து இருப்பீர்கள்.” அவன் பேசிய தோரனை சிரிப்பை வரவழைத்தாலும் தன்னை கிண்டல் செய்வது போல் இருந்ததால் ஒன்றும் சொல்லாமல் தனக்கு வந்த வேலைக்கான உத்தரவை அவனிடம் நீட்டினாள். அவள் கண்களில் தெரிந்தது சிரிப்பா, கோபமா எனப் புரியாமல் அந்த கடிதத்தை  வாங்கி படித்தவன் அவளைப் பார்த்து “நாளை காலை ஒன்பது மணிக்கு பள்ளிக்கு வந்துவிடுங்கள்” என்றான்.

கிளம்ப யத்தனித்தவளிடம்நீங்கள் தங்கப்போகும்இடத்தை இவர் காட்டுவார்.மேற்கொண்டு ஏதாவதுதேவை என்றால் அங்கே என்அத்தை இருக்கிறார்கள்அவரிடம் சொல்லுங்கள்என்றான். தன் தலையசைவில்ஒப்புதலை தெரிவித்து விட்டுபெரியவரின் பின் புறப்பட்டாள்கவிதா.

 

 

செங்கனல் கிராமம் தன் பெயரை போல அல்லாமல் கொஞ்சம் குளிர்ச்சியாகவே இருந்தது. கவிதா அந்த சின்ன கிராமத்தின் அழகை தன் பெரிய விழிகளால் பருகியவாறே பள்ளியை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

 

ஒடுகள் வேய்ந்த கூரை கொண்ட பள்ளியில் மொத்தம் ஐந்து அறைகள், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தான் செங்கனல் கிராமத்தில் உள்ளது. அதற்கு மேல் படிக்க அங்கிருந்து பதிமூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள அரசு மேல் நிலை பள்ளிக்கு செல்ல வேண்டும். தங்கி இருந்த வீட்டின் பெரியம்மா சொன்னதை வைத்துப் பார்க்கும் போது இந்த பள்ளிகூடத்தில் அதிகபட்சம் 50 பிள்ளைகளுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை என எண்ணியவாரே உள்ளே நுழைந்தாள்.

 

தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழையும் போதே உள்ளிருந்து வந்த குரல் எங்கோ கேட்ட குரல் போல இருந்தது. அனுமதி பெற்று உள்ளே நுழைந்தவள் கண்களுக்கு தலைமை ஆசிரியருடன் கார்மேகமும் காட்சி அளித்தான். இவளை கண்டதும் அவன் பார்வை கடிகாரத்தை கண்டது, யரோ தன்னை அறைந்தது போல் உணர்ந்தாள் அவள். தாமதமாக வந்ததுக்கு மன்னிப்பு தெரிவித்த போது, தலைமை ஆசிரியர் இராமகிருஷ்ணன். ‘இதில் என்னம்மா இருக்கு நீங்க வந்ததே மகிழ்ச்சி’ என சொல்லியது மேலும் அவளை சங்கடத்தில் ஆழ்தியது.

 

அவளுக்கான வகுப்புகள் மற்றும் பாடம் எடுக்கும் நேரங்கள் குறித்து விவாதிக்கப் பட்டது. தலைமை ஆசிரியர், அனைத்திற்கும் கார்மேகத்திடம் கருத்து கேட்டது அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

 

தனக்கான வகுப்பறைக்கு வந்தவள் அங்கே மொத்தமே 12 பிள்ளைகள் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனாள். இந்த பிள்ளைகளுக்கே பாடம் எடுக்க ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை என்ற குரல் அவள் பின்னிருந்து கேட்டது. தலைமை ஆசிரியருடன் அவனும் வகுப்பறை வாயில் அருகில் நின்றிருந்தான்.

 

இங்கிருந்து அவன் போனால் போதும் என்ற எரிச்சல் மேலோங்கியது அவளிடம்.  அந்த வாரம் முழுவதும் அவனை மீண்டும் அவள் பார்க்கவில்லை.

 

பள்ளியில் வேலைச் சரியாக இருந்தது. தமிழ் ஆசிரியை வந்து நான்கு நாட்கள் ஆகின்றன. தமிழ் வகுப்பின் போது பிள்ளைகளின் சத்தம் அதிகமாக இருப்பதை உணர்ந்த கவிதா தனது வகுப்பறையிலேயே அந்த மாணவர்களை அமர்த்தி வகுப்பெடுத்தாள்.

 

வார இறுதி நாள். பெரியம்மாவின் கைவண்ணத்தில் எண்ணெய் குளியல் முடித்து, மல்லிகை பூ போன்ற இட்லியை மணக்கும் சாம்பருடன் உண்டு விட்டு திண்னையில் அமர்ந்து அடுத்த வாரம் பிள்ளைகளுக்கு தர வேண்டிய பரிட்சைக்கு குறிப்பெடுத்து கொண்டிருந்தவள் பக்கத்து வீட்டு பிள்ளைகளின் அழைப்பை ஏற்று அவர்களுடன் வயலுக்கு புறப்பட்டாள். அங்கே ஒரு பெரிய மரத்தின் அடியில் கார்மேகம் பிள்ளைகளுக்கு மத்தியில் அமர்ந்து தன் கையில் வைத்திருந்த ஒரு பயிரை பற்றி விளக்கி கொண்டிருந்தான். அப்படியே திரும்பி விடலாம் என நினைத்து அவனை காணாதது போல நடக்க ஆரம்பித்தவளை “டீச்சர்” என்ற பிள்ளைகளின் குரல் தடுத்து நிறுத்தியது. வேறு வழி இன்றி அவன் இருந்த இடம் சென்றாள்.

 

அவளுக்கு இளநீர் தந்து உபசரித்தவன். பொதுவாக பள்ளி பற்றியும் அவள் தங்கி உள்ள இடம் பற்றியும் விசாரித்து விட்டு மீண்டும் பிள்ளைகளிடம் பேச ஆரம்பித்தான். அவனின் விவசாயம் பற்றிய விளக்கங்கள் கேட்டு கவிதா மலைத்துப் போனாள். ஆனால் அதைவிட அவளுக்கு புரியாத விஷயம் இதை ஏன் இவன் இந்த பிள்ளைகளிடம் பேசுகிறான் என்பது. சற்று நேரத்தில் அனைவரும் கிளம்பி விட தன் மனதில் இருந்த கேள்வியை அவனிடமே கேட்டாள்.

 

மெல்லிய புன்னகையோடு அவன் “விவசாயம் இந்த மண்னின் ஆணிவேர். கல்வி ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் விவசாயம். கல்வி பாடம் எடுக்கப் பள்ளிகூடமும், ஆசிரியர்களும் உள்ளீர்கள். அதனால் விவசயத்தை நான் கற்பிக்கின்றேன்” எனக்கூறி அவளிடம் இருந்து விடை பெற்றான்.

 

அன்று மாலை அவளை காண அவள் தந்தை வந்து நின்றார். கவிதா எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தாள். சற்று நேரம் அவளோடு பேசி கொண்டிருந்தவர் ‘கொஞ்சம் கார்மேகம் தம்பியை பார்த்துவிட்டு வருகிறேன் என புறப்பட்டார். அடுத்த நொடி கார்மேக கண்ணனாகவே வாசலில் காட்சி அளித்தான் அவன். ‘உங்களை பார்க்கத் தான் வந்தேன் மாமா’ என சிரித்து கொண்டே உள்ளே நுழைந்தான்.

 

இருவரும் பேசினர், பேசினர் பேசிக்கொண்டே இருந்தனார். கவிதாவுக்கு சினம் தலைக்கு ஏறியது. தந்தை தன்னைக் காண வந்து விட்டு அவனுடன் நேரத்தை செலவிடுவதை அவளாள் ஏற்க முடியவில்லை. அவனோடே இரவு உணவை முடித்து அவன் வண்டியில் பேருந்து நிலையம் சென்று விட்டார். கவிதாவின் கோபத்தை கார்மேகம் கவனித்தவாரே இருந்தான்.

 

 

அடுத்த வாரமும் தமிழ் ஆசிரியை வரவில்லை. இன்று எப்படியாவது நேரம் ஒதுக்கி பிள்ளைகளுக்கு தமிழ் பாடம் எடுக்க வேண்டும் என நினைத்து கொண்டே பள்ளிக்கு சென்றாள். அவள் நினைத்ததற்கு மாறாக அவளுக்கு ஒரு முக்கிய பணியை தலைமை ஆசிரியர் கொடுத்துவிட அந்த வேலையில் ஈடுபட்ட போது வகுப்பறையில் பிள்ளைகளுக்கு கார்மேகம் தமிழ் வகுப்பு எடுத்து கொண்டிருந்தான். திருக்குறளை அவன் விளக்கிய விதம் கேட்க கவிதாவிற்கே தமிழ் மீது தனி பற்று வந்தது.

 

வகுப்பு முடிந்து வெளியே வந்த கார்மேகம் அவளிடம் ‘உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும் என்றான். அவன் என்ன சொல்ல போகிறான் என்று யோசிக்கும் போதே ‘என்னை மன்னித்து விடு அன்று உங்கள் தந்தை மகளுக்கு இடையே நான் நந்தி போல் வந்து விட்டேன்’. என்றான். அவன் தலையில் இரண்டு கொம்பு இருப்பது போல கற்பனை செய்த அவள் களுக் என சிரித்து விட அந்த சிரிப்பையே மன்னிப்பாக எற்று விடை பெற்றான் அவன்.  

 

அன்று பள்ளியில் நுழையும் போதே கார்மேகத்தின் வண்டியை கவிதா பார்த்து விட்டாள். மனம், இனம் புரியாத மகிழ்ச்சியில் துள்ளியது. ஆனால் உள்ளே சென்றதும் அவளுக்கு தெரிவிக்க பட்ட விஷயம் தலையில் பேரிடியாக விழுந்தது. மிகுவும் குறைந்த எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை அரசாங்கம் மூட இட்ட உத்தரவு காகிதம் தலைமை ஆசிரியர் கையில் இருந்தது. பள்ளியில் உள்ள பிள்ளைகளை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்றச் சொல்லி அந்த கடிதத்தில் குறிப்பிட பட்டு இருந்தது. ஆசிரியர் பணியில் உள்ள அனைவருக்கும் விரைவில் மாற்றல் கடிதம் வரும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

 

கார்மேகத்தின் முகத்தை பார்த்தாள் கவிதா, அவன் மிக ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். பின்னர் தலைமை ஆசிரியரிடம் இருந்து அந்த கடிதத்தை வாங்கி கொண்டு புறப்பட்டான். அவன் என்ன நினைகிறான் என கவிதாவல் யூகிக்க முடியவில்லை. மனதில் பெரிய பாரம் அழுத்த முத்தாளம்மன் கோவிலுக்கு சென்று மனமுருகி வேண்டினாள்.

 

ஒரு வாரம் மேல் ஆகியும் கார்மேகத்தைப் பார்க்க முடியவில்லை. தலைமை ஆசிரியரிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. அன்று மகிழ்சியோடு பள்ளிக்குள் நுழைந்த கார்மேகத்தை பார்த்த பின் தான் கவிதாவின் முகத்தில் புன்னகைப் பிறந்தது. ஆனால் அதை கவனித்தும் கவனிக்காதவாறு அவன் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தான்.

 

தான் இந்த பள்ளியை தனது தந்தையின் பெயரில் உள்ள அறக்கட்டளையின் கீழ் நடத்த அனுமதி கேட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், நல்ல ஆசிரியர்கள் வேண்டும் என்ற விளம்பரமும் கொடுத்து உள்ளதகவும் கூறினான். சில ஆசிரியர்களிடம் இருந்து வந்துள்ள கடிதங்களையும் காண்பித்தான். தலைமை ஆசிரியருக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. அவரின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது அதற்குள் அந்த பள்ளிக்கு ஒரு  நல்ல விடிவு காலம் வந்து விடும் என்ற மகிழிச்சி அவருக்கு.

 

கண்களிள் ததும்பிய நீரை மிகவும் சிரமப்பட்டு அடக்கியவள் ஒரு நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்து விலகினாள். மனதுக்குள் வலித்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தான் அவன்.

 

கவிதாவின் கலங்கிய கண்களை பார்த்த பெரியம்மா, மெல்ல அவளிடம் பேசி அவள் வருத்தத்திற்கான காரணம் அறிந்து கொண்டார். இரவு ஏதோ உண்டேன் என பேர் பண்ணிவிட்டு அமர்ந்திருந்த அவள் அருகே வந்து அமர்ந்தாள் அந்த பெரியவள். ஒரு குழந்தைக்கு கதை சொல்வது போல் அந்த பள்ளியின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தாள்.

 

கார்மேகத்தின் தந்தை சிவகிரி அந்த காலத்தில் இந்த ஊரின் பெரிய பண்ணை. விவசாயம் செழித்து வளர்ந்த அளவுக்கு கல்வி அறிவு தன் மக்களிடம் வளரவில்லையே என பெரிதும் கவலை கொண்ட அவர் பலமுறை இந்த செங்கனல் கிராமத்தில் பள்ளி அமைத்து தருமாறு அரசாங்கத்திற்கு மனு அளித்து வந்தார். அது பயனளிக்காததால் தன் சொந்த செலவில் ஒரு கல்வி கூடம் அமைத்து விட்டார். சில ஆண்டுகளில் பள்ளிகூடம் நல்ல வள்ர்ச்சி கண்டது. அடுத்த சில ஆண்டுகளிள் வந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் தனது வாக்குறுதி படி அந்த பள்ளிக்கூடத்தை அரசாங்கமே எடுத்து நடத்த வழி செய்தார். சொல்ல போனால் கார்மேகமே அந்த பள்ளிகூடத்தில் படித்தவன் தான். விவசயத்தில் பெரிதும் அக்கறை கொண்டவன் பள்ளியில் முதல் மாணவனாக வந்த பின்னும் விவாசாயம் குறித்த படிப்பையே படித்து பட்டம் பெற்றான். தந்தை போல் தமையன், அதனாலேயே இன்று பிள்ளைகள் குறைந்து பள்ளி மூடும் நிலைக்கு வந்த போது அதை காக்க வழி செய்துள்ளான் எனக் கூறி முடித்தார்.

 

அன்று இரவு வெகு நேரம் யோசித்த கவிதா முன்று கடிதங்களை எழுதினாள். நடந்த விவரங்கள் அனைத்தையும் விளக்கி தன் தந்தைக்கு ஒரு கடிதம். தனது ராஜினாமா கடிதம், கடைசியாக. கார்மேகம் நடத்த போகும் பள்ளியில் சேர விண்ணப்பக் கடிதம்.

 

அடுத்த நாள் அவள் நீட்டிய இரண்டு கடிதங்களையும் வாங்கி படித்த கார்மேகத்தின் கண்களில் அவன் எவ்வளவோ மறைத்தும் மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. கவிதா அவன் கண்களை சந்திக்க பலம் இன்றி தரையை பார்த்தவரே, ‘இந்த பள்ளி விஷயதில் உங்களோடு நானும் கைக்கோர்த்து செயல் பட விரும்புகின்றேன்’ என மெல்லக் கூறினாள்.

 

சற்றே தலை சாய்த்து அவளை பார்த்து பள்ளி விஷயதில் மட்டும் தானா என கேட்டு சிவந்த அவள் முகத்தை மேலும் சிவக்க வைத்தான். அவர்களின் அன்பில் செங்கனல் பூமி செம்மையான பூமி ஆனது.

Kumuda selvamani..

#கும்ஸ்




WritcoStoryPrompt118
Why do we often look for someone to blame when there is a problem? Tell us in story writing what you think about it.