...

13 views

துரத்தும் காதல்








இது எண்ணுடைய முதல் காதல் கலந்த கதை...

ஒரு பெண்ணை இல்லாத பணத்துக்காக ஓட ஓட துரத்தும் கதை. பண வெரி கொண்ட கட்சி ஆளுங்களும் கண் மூடித்தனமான கட்சி ஆதரவாளர்களும் இதில் அடக்கம்.










அன்று பிபீஓவில் முதல் நாள் வேலை. பி.ஜி படித்து முடித்தவுடன் நிஷாவிற்கு கிடைத்த முதல் வேலை. இன்டக்ஷன் முடிஞ்சி ஜாய்ன் பண்ணி ஸுட்லயும் உட்காந்தாச்சு ....

எல்லாரும் இன்ட்ரடுயுஸ் பண்ணின எக்ஸைட்மேன்ட்ல நிஷா எல்லாரையும் பாத்து ஸ்மையில் பண்ணிட்டு இருந்தா.

பசங்க எல்லாரும் கங்கிராட்ஸ் பண்ணிட்டு கை குலுக்கிவிட்டு அவங்க வேலையை பாக்க போயிட்டாங்க.

அங்க இருந்த சீனியர்ஸ்ல  ஒரு பொண்ணு மட்டும் ரொம்ப வாயாடி மாதிரி தெரிந்துச்சு அது நாகலக்ஸ்மி. 


அவளும் அவ பிரண்டு தீபாவும் நல்லா கலகலப்பாவும் பேசுவாங்க. கூடவே காசிப்பும் நல்லா பேசிப்பாங்க.





அருண்குமார், கிருஷ்ணகுமார். சத்யஜித், ரெமி ஜாய், பிரீத்தி, ஷைலஜா மற்றும் டீம் லீடர் வைதேகி இவங்க எல்லாம் கொஞ்சம் காசூவல்லா பேச ஆரம்பிச்சாங்க.

அந்த மாதிரியான பிபீஒ அட்மாஸ்பியர்ல அதுதான் முதல் எக்ஸ்பிரியன்ஸ் நிஷாவிற்கு.

நிஷாவின் மனதுக்குள்...

ச்ச்ச.... என்னோட சீனியர்ஸ்லாம் அந்த  இடத்துக்கு எத்த மாதிரி பலகிட்டாங்க போல. இருபத்தி நாலு மணி நேரமும் பாட்டு. வேலை செய்யும் போது எப்படி பாட்டு கேட்டுட்டே செய்யுராங்கனு தெரிலப்பா. நமக்கெல்லா ஒழுங்கா வேல பாக்கனும்னா டிஸ்டிராக்ஷன் இருக்கவே கூடாது.


அதுல ஆடியோ காமடி வேற.... காமடி போடுறேன்டு கூட இருக்கிற பிரெண்ட்ஸ் எல்லாம் கலாய்ச்சிட்டும், வம்புக்கு இழுத்துட்டும் இருந்தாங்க.


தீபாவும் நாகலக்ஸ்மியும் சீனியர் ஆனதால வேலைகளை நியு ஜாய்னீஸ் எல்லாருக்கும்   கொஞ்சம் கொஞ்சமா கத்து கொடுக்க ஆரம்பிச்சாங்க.

ஆனா பசங்க மட்டும் பிபீஒ-ல வேலைக்கு வந்தா பொண்ணுங்கள மடக்கனும்ற எண்ணத்துல
காதல் உணர்வுகள் வர வைக்கிற  மாதிரியே பாட்டு போட்டு தூண்டி விட்டுட்டே இருந்தாங்க.

நான் இருக்கிற  டீம்ல பாட்டு போடலனா பக்கத்து டீம்ல போடுவாங்க. இல்லனா வேற டீம்ல இப்படி எதாவது ஒரு டீம்ல..... மூனு ஷிப்டுலையும் ஓடீகிட்டே தான் இருக்கும்.

எங்க டீம்ல டார்கெட் எதுவும் கிடையாது. எல்லாம் டீம் வர்க் தான். 

எனக்கு முதல் இரண்டு மாசம்  நல்லா தான் போய்ட்டு இருந்தது.

சாப்பிடும் போது மாத்தி மாத்தி கிண்டல் அடிடிச்சுட்டே இருப்போம். புது பாட்டு புளு டூத் வழியா ஷேர் பண்ணிட்டு இருக்க கிருஷ்ண குமார் ஹேல்ப் பண்ணுவான்.
அவன் எனக்கு ஒரு நல்ல ஜெனியுன் பிரேண்ட். மற்ற நேரங்கல்ல ரெமி மலையாளம் கலந்த இங்கிலிஷில் பேசுவா.
நானும் அவளும் ஒரே டைம்ல ஜாய்ன் பண்ணோம்.

பசங்க எல்லாம் டபுள் மீனிங்ல பேச ஆரம்பிச்சாங்க. இங்கதான் பிரச்சனயே ஆரம்பிச்சுது. போகப் போக ஓவராத்தான் போயிடுச்சு.


வேல செய்ய ஆரம்பிச்சி இரண்டு மாசத்துலேயே பாலிடிக்ஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. அதுல ஒரு ஆளுக்கு மட்டும் ஹீரோ மாதிரியான சப்போர்ட். அது சத்யஜித் என்ற கேரலைட்க்கு. தமிழ் ஆளுங்கலாம் சேர்ந்து அவர ரொம்ப எத்தி விட்டாங்க. அங்க ரெமியும் மலையாளி தான்.

நாகலக்ஸ்மியும் தீபாவும் எண்ணைய வம்புக்கு இளுக்கிற மாதிரி கேம் கன்டக்ட் பண்ணுவாங்க.

எண்ணைய பத்தி எல்லா நியுஸூம் எனக்கு தெரியாம என்ன சுத்தி இருக்கிறவங்களுக்கெல்லாம் போய் சேருது. எப்படிண்ணே தெரியல.

என் மனசுல ஒரே குழப்பமா போய்யிடுச்சு. வேலைல முதல்ல இருந்த கான்ஸன்டிரேசன் கொஞ்சமா கொரைஞ்சுது. நம்ம பக்கத்திலேயே நின்னுகிட்டு நம்பல பத்தி எல்லாம் பேசிட்டு வேற யாரோ பத்தி பேசுன மாதிரி போய்டுவாங்க.


திடீர்னு எல்லா பொண்ணுங்களும் பொறாமை படுற மாதிரி தெரிஞ்சது.

இப்ப என்ன நிலைமைனா அந்த கேரலைட் சத்தியஜித்த லவ் பண்ண வைக்கிறதற்கு அவர பத்தி என் முன்னாடியே நிறைய ஏத்தி பேசுனாங்க. அதோடு கூட எம்மேல கொஞ்சம் பொறாமையும் தெரிஞ்சுது. சத்தியஜித்தும் என்ன பாக்கும் போதேல்லாம் ஸ்மைல் பண்ண ஆரம்பிச்சாரு.


யாரடி நீ மோகினி, தீபாவளி படம், ஆறு படத்துல இருந்தும் மற்றும் பல எமோஷனல் லவ் ஸாங்சா போட்டூட்டு இருந்தாங்க.

அப்ப வெளி வந்த படமான அழகிய தமிழ் மகன் படத்தல இருந்து "கற்பூர கண்ணிகையே வாராய்" பாட்ட அடிக்கடி போட்டாங்க. இந்த பாட்டேல்லாம் அருண் தான் போடுவான். அவன் மதுரக்காரன். சோல வந்தான் தான் அவங்க ஊருன்னு சொன்னான்.
இந்த படத்துல இருந்து போட்ட பாட்டேல்லாம் சத்தியஜித் லவ்வுக்காக போட்ட மாதிரி காட்டிட்டு அருண் தான் போட்டான். அதெல்லாம் அருணுக்கும் சேத்து போட்ட மாதிரி இருந்தது.

இவனும் சத்தியஜித்தும் ரொம்ப பிரெட்ண்ஸ்.

மியுஸிக்கல் சேர், ஹாட் ஸீட், கிரிஸ்மா கிரிஸ்பா இதெல்லாம் விளையாடினோம்.

அவங்க எல்லாம் டபுள் மீனிங்ல பேச ஆரம்பிச்சதால நான் நிறை மத்தவங்கல பத்தி திங்க் பண்ண வேண்டியதா போயிடுச்சு. இதனால என் வேலை பாதிக்க படுதுங்கிறனால அவங்களுக்கு எப்படி என்ன பத்தி தெரியுதுங்கிரதெல்லாம் யோசிக்கல. வேலைல ஸின்ஸியரா இருக்க டிரை பண்ணேண்.

நான் சினிமா பாட்டேல்லாம் நல்லா ஞியாபகம் வச்சிருப்பேன். இவங்க எல்லாம்  திருப்பி திருப்பி லவ் ஸாங் போட்டு டபுள் மீனிங்ல பேசி என்னையும் கொஞ்ச சத்தியஜித்தோட ஹீரோயின் மாதிரி எத்தி விட்டு உணர்ச்சி எல்லாம் தூண்டி விட்டு ஒரளவுக்கு இரங்கி வர வச்சாங்க.

இந்த காதல்ல விழாம இருக்கும் போதெல்லாம் கல்லு மனசுன்னு வேற திட்டிகிட்டு இருந்தாங்க.

நான் வேலை பாக்கிறதற்கு அடுத்த ஸைட்ல என் டீம் லீடர் வைதேகி உக்காந்துட்டு இருப்பாங்க. இவரும் டீம் லீடருக்கு டிரெய்னிங் எடுக்கிறதுனால அங்கதான் உக்காந்துட்டு இருப்பாரு.

அங்க சத்தியஜித் வந்து நிண்ணுகிட்டு ரொமாண்டிக் லுக்  விட்டுட்டே இருப்பாங்க.

அந்த நேரம் பார்த்து நல்ல லவ் ஸாங்கா போட்டுட்டு சுத்தி இருக்கிறவங்க எல்லாம் கண்டும் காணாத மாதிரி உக்காந்து இருப்பாங்க.


நானும போவாங்க போவாங்க பார்த்தா போகவே இல்ல.
அதனால போக வைக்க லைட்டா பார்த்துட்டு ஸ்மைல் பண்ணி வைத்தேன்.

அப்புறம் கொஞ்ச நேரத்தில் அதே இடத்துல  உக்காந்துட்டு வேலை  சேஞ்சுகிட்டே எட்டி எட்டி பாத்துகிட்டே இருந்தாங்க. அவரு ஆக்டிங் டீம் லீடர்.

அவரு உயரம் ஆரடிக்கு மேல் இருக்கும். பால்ஸ் ஸீலிங்க (false ceiling) ஈஸியா தொட முடியும். பொதுவாக அவருக்கு குர்த்தா பைஜாமா ரொம்ப புடிக்கும். அவர பத்தி தெரிஞ்சதுல அவரு  ஆங்கிலமும் அஞ்சு இந்தியன் லாஙகுவேஜும் தெரிஞ்சு வைச்சிருக்காரு. தமிழ், மலையாளம், இந்தி, குஜராத்தி, மராத்தி, உருது.

அவரோட ஹைட் அன்டு வெயிட் பாக்கும் போது எதோ அனிமல் பாத்த மாதிரி பயம் வரூம்.

அவரு நிறைய புக்ஸ் எழுதி இருக்காரு. அவருக்கு அஞ்சு அக்கா கூட பிறந்தவுங்க.

நான் அவங்க உக்காந்த பிறகு அந்த ஸைட்டே பாக்க கூடாதுன்னு வேலைய மட்டும் பாத்துட்டு இருந்தேன்.

அடுத்த நாளும் இப்படியேதான் நடந்தது. நானும் ஒரு தடவ மட்டும் பாத்துட்டு அதேபோல் லைட்டா ஸ்மைல் பண்ணிட்டு வேலைய பாரக்க ஆரம்பிச்சேன்.

ஆனா அவங்க விடுறதா இல்ல. அவரு பாத்துட்டே நிக்கும் போது ரோம்ப எமோஷனல் லவ் ஸாங் ஓட விட்டுருவாங்க. அதுல ஒண்ணு " உயிரே என்னுயிரே என்னவோ நடக்குதடி".

நாம பாக்கும் போது முகத்த பாவமா வேற வைச்சிப்பாங்க.

நாமலும் அவங்கள பாத்து அவங்க லவ்வ ப்பீல் பண்ற வரைக்கும் விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.

இப்படியே டேய்லி போயிட்டு இருந்தது. அவரு என் டேபில் மேல வந்து உக்காந்துட்டு என் வீட்ட பத்தி கேட்க ஆரம்பிச்சாரூ. என் நம்பர் வாங்கிகிட்டாரு. அவரு நம்பர் கேட்கும் போது ப்பாஸ்டா சொல்லிட்டு என்ன திரும்ப சொல்லச் சொன்னாரு. நானும் முதல் ஐஞ்சு நம்பர் மட்டும் ஞியாபகம் வச்சிருந்தேன். மீதி ஐஞ்சு நம்பர் சொல்லிட்டு பரவால்லயே பாஸ்டா சொன்னத கவனிச்சிரூக்கிகயன்னு புகழ்ந்தாரு.

அந்த நாட்கள்ல நாங்க கிரிஸ்மா கிரிஸ்பா விளையாடிட்டு இருந்தோம். எனக்கு இந்த கேம்ம வச்சு எதாவது பெருசா விளையாடிடுவாங்கனு பயம்.

அப்ப எனக்கு பாட்டு பாடச் சொல்லி வந்தது, சில சாக்லேட்ஸ் கிப்ட்ஸா வந்தது. அப்புறம் ஸாரி கெட்டிட்டு வரச் சொல்லியும் வந்தது. எனக்கு புடிச்ச வேற யாருக்காவது கிரிஸ்மா ஆர்டர் போடச் சொல்லியும் வந்தது. நான் ரெமிக்கு பூ வச்சுட்டு வரும்படி சொல்லி இருந்தேன்.

ஆனாலும் எனக்கு ஒரு டவுட். என் பேரு ஏதோ பசங்க கைல மாட்டிருக்கனு. அப்பறம் பாத்தா அருண் தான் என்னோட கிரிஸ்பா. கிப்ட் வாங்கி கொடுக்கும் போது சைனா க்கிளே பொம்மைல கல்யாண கோலத்துல இருக்கிற மாதிரி கொடுத்தான்.

நானும் என்னோட கிரிஸ் ச்சைல்ட் ஷைலஜாவிற்கு மரத்தில் செஞ்ச கேர்ல் டால் கிப்ட் பண்ணேன்.

அப்ப சத்தியஜித்துக்கு கிரிஸ் சைல்ட் யாருன்னா ரெமி.
அவங்க ரெண்டு பேரும் என் முண்ணாடி நல்லா பழக ஆரம்பிச்சாங்க. என்னோட பொறாமையை தூண்டனும்னு ஏதோ பிளான் பண்ணியிருப்பாங்க போல.

இதுக்கு நடுவில் ப்ளோர்ல இருந்த எல்லா டீம்ல இருக்கிறவங்களுக்கும் நியுஸ் பரவிடுச்சு. மத்த டீம்ல இருந்தவங்க எல்லாம் வந்துட்டு என்ன பத்தியும் என் ப்பமிலி பத்தியும் விசாரிக்க வந்துட்டாங்க.

அதுல சுரேஷ்னு ஒருத்தரு என் டேபில்ல வந்து உக்காந்துட்டு ஜொல்லு விட்டுட்டு இருப்பாரு.


நான் சரியாவே பேசலன்னாலும் அவரும் சத்தியஜித்துக்கு போட்டியா வந்துட்டு பேசுவாரு. அவரு ஸிப்டு முடியும் போது எனக்கு ஸிப்டு தொடங்கும். அதனால வந்து பேசிட்டு போவாரு.


நாகலக்ஸ்மியும் தீபாவும் ரெமிய தூண்டிவிட்டு அவளும் சத்தியஜித்த லவ் பண்ற மாதிரி பண்ண வச்சாங்க.


சுரேஸ் ஒரு நாள் எங்கிட்ட வந்து நான் லவ் மரேஜ் பண்ணுவேனா அரேஞ்சுடு மரேஜ் பண்ணுவேனான்னுகேட்டுட்டு இருந்தாரு. எனக்கு புரிஞ்சிடுச்சி. அவரு சத்தியஜித் பத்தி கேக்கிறார்னு.

நான் எங்கவீட்ல லவ் மரேஜுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க அதுக்கு நிறைய பமிலி ரீசன் எல்லாம் சொன்னேன். எனக்கு முன்னாடி அக்கா இருக்கா. எங்க வீட்ல அப்படி எல்லாம் விட்ற மாட்டாங்க. எனக்கு லவ் மேல நம்பிக்கையும் கிடையாது. அது ஒரு கரப்டூவ் பிஸினெஸ் மாதிரின்னுலாம் சொல்லி வச்சேன்.


அப்ப பொங்கல் வந்தது. எல்லாரையும் ஸாரிலையும், வேட்டி சட்டைலயும்  வரச் சொன்னாங்க.

அன்னைக்கு டீம் மீட்டிங் வச்சாங்க. நான் ஒரு ஓரமா  நிக்கும் போது அவரு என்னையே பாத்துட்டு இருந்தாரு. 
இந்த தடவ" பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் ஸாங்க போட்டு விட்டாங்க.

நான் ஸாரி கெட்டிட்டு வந்தது அவங்களுக்குன்ற மாதிரியே ப்பில் பண்ணிட்டு இருந்தாங்க.
ஏற்கனவே கிரிஸ்பா ஆர்டர்ல கெட்டும் போதும் இப்படிதான் ப்பீல் பண்ணிட்டு இருந்தாங்க.

ரெமியும் என் பக்கத்துல வந்து நின்னா அவர பேஸ் பண்ற மாதிரி.

தீபா ஜாடமாடையா ரெமியதான் அவரு லவ் பண்றார்னு சொன்னா. அவள அவர் பக்கத்துல போய் நிக்க சொன்னாங்க. ஆனா அவ சிரிச்சுட்டே அவர பாத்தா பயமா இருக்குன்னு சொல்லிட்டா.

அப்புறம் தீபா பின்னாடி போய் ரெமி பேசிட்டு இருந்தா.

அந்த "கற்பூர கண்ணிகையே" ஸாங்ல வர்ர கடைசியா

"முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சுத்த வைப்பேன்"

வர்ர லைன் மாதிரி சில பேர் பண்றாங்கன்னு தீபாகிட்டயும் நாகலக்ஸ்மி கிட்டையும் மலையாளத்துலையும் இங்கிலிஷ்லையும் சொல்லிட்டு இருந்தா.



அப்பறம் நான் எதுவும் கண்டுக்கல.  அவங்க ஊர் ஆளுங்க எப்படி பிஹேவ் பண்ணுவாங்கனு நம்மலுக்கு தெரியாது.

அவங்க இன்னைக்கு சண்ட போடலாம். நாளைக்கு சேரலாம்.


இந்த பிரேச்சினைக்கெல்லாம் மூலக்காரணம் நாகலக்ஸ்மி தான். சத்தியஜித் பாலக்காடுன்னா நாகலக்ஸ்மி  யோட பூர்விகமும் பாலக்காடு தான். ரெமி திருச்சூர்.

நாகலக்ஸ்மி ஏற்கனவே தினேஷ்  என்ற பையனை லவ் பன்றா.

ஆனா நாகலக்ஸ்மி சும்மா ஏன் மேல பொறாமப்பட்டு ரெமிய தீபா மூலமா தூண்டிவிட்டு இப்படி எல்லாம் நடக்க வெச்சுட்டா.


ஆடுத்த நாள்ல இருந்து மறுபடியும் பக்கத்து டீமும் என் டீமும் எமோஷனல் ஸாங்குன்ற பேர்ல போட்ட பாட்டையே போட ஆரம்பிச்சாங்க.


கல்லூரி படத்துல இருந்து......

"சரியா இது தவறா சரியா இது தவறா 
சரியா இது தவறா இந்த 
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா 
வரமா இது வலயா"


இத்த பாட்ட ப்புல் டே போட்டு காதுல ஈயத்த காய்ச்சி ஊத்துன மாதிரி ஆக்கிடாடாங்க.

இப்படியே டேய்லி சினிமா பாட்ட வச்சு எண்ணைய இன்ப்புளுயன்ஸ் பண்ணிட்டே இருந்தாங்க.


இந்த மாதிரி இன்டரக்ட்டா பண்ணதுனால எல்லாரும் சேர்ந்து விளையாடுராங்களோன்னு ஒரு டவுட்டு.


இந்த சந்தேகத்த எல்லாம் எப்படியாவது தீக்கனும்மே.

நான் அதுக்கான சந்தர்பத்த தேடிகிட்டு இருந்தேன்....