...

7 views

வர்ணஜாலம்

வர்ணஜாலம்
அத்தியாயம் – 1
நாயகி அறிமுகம்:
நம் கதையின் நாயகி பெயர் நிஷாந்தினி. சுட்டித்தனமான விளையாட்டு பெண் , வயது 18. நிஷாந்தினியின் குடும்பம் சிறியது. நிஷாந்தினியின் அப்பா பெயர் கண்ணன், அரசு வேலையில் உள்ளார். நிஷாந்தினியின் அம்மாவின் பெயர் வித்யா, இல்லத்தரசி. நிஷாந்தினியின் அக்கா பெயர் உத்ரா, கலைக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறாள். நம் நாயகி பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். நிஷாந்தினிக்கு படிப்பை விட விளையாட்டில் தான் அதிக ஆர்வம். பள்ளி கூடைப்பந்து அணியில் இருக்கிறாள். ஆனால் இது நிஷாந்தினியின் வீட்டில் உத்ராவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஏனெனில் நிஷாந்தினியின் அப்பா கண்ணனுக்கு தன்னுடைய மகள் விளையாடுவது தனக்கு அவமானம் என்று நினைக்கிறார். நிஷாந்தினியின் குடும்பம் ஓர் அழகான சிறு ஊரில் வசிக்கிறார்கள்.
நாயகன் அறிமுகம் :
நம் கதையின் நாயகன் பெயர் ராம். சென்னையில் வசிக்கிறான். ராம் பார்ப்பதற்கு அழகாக இருப்பான், வயது 27. எல்லாம் விஷயங்களிலும் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பவன். ராமின் குடும்பமும் சிறியது தான். அப்பா பெயர் சிரஞ்சீவி, பெரிய தொழிலதிபர். அம்மா பெயர் கல்பனா, இல்லத்தரசி. அண்ணன் பெயர் சித்தார்த், வீட்டில் சிறு பிரச்சினை காரணமாக கோபித்து கொண்டு தனியாக இருக்கிறான். ராம் தனது அப்பாவின் நிறுவனத்தை அப்பாவுடன் சேர்ந்து கவனித்து கொண்டிருக்கிறான்.
கதை ஆரம்பம்:
ராமிற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என அவனது அம்மா கல்பனா நினைக்கிறார். அதனால் ராமிற்கு பெண் பார்க்க தொடங்குகின்றனர். அப்போது தான் ராமின் சிறு வயது தோழி அறிமுகமாகிறாள். தாரா ராமின் சிறுவயது தோழி மட்டுமல்ல வெளிநாட்டில் உள்ள பெரிய தொழிலதிபரின் மகள். இதனால் சிரஞ்சீவிக்கு தாராவை மிகவும் பிடித்து போனது. இதனால் ராமிற்கும் தாராவிற்கும் திருமணமாவது உறுதியானது. ராமும் தன் அப்பாவின் நிறுவனம் வெளிநாட்டிலும் பிரபலமாகும் என்பதற்காக திருமணத்திற்கு ஒப்பு கொள்கிறான். ஆனால் காதலித்து தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ராமின் ஆசை.இதை பலமுறை தன் நண்பர்களிடமும் சொல்லியிருக்கிறான். இருந்தாலும் தன் அப்பாவுக்காக கல்யாணத்திற்கு ஒப்பு கொள்கிறான். தாரா மாடலிங் துறையில் இருக்கிறாள். அவ்வப்போது ராமை பற்றிய செய்திகளை கேட்டு ஏற்கனவே ராமின் மீது ஆசை கொண்டவளாய் இருக்கிறாள். இதனால் தான் ராமிற்கு வரன் பார்ப்பதை முன்னரே தெரிந்து கொண்டு அதற்கான வேலைகளை செய்து இறுதியில் வெற்றி அடைகிறாள். இறுதியில் ஒரேயொரு நிபந்தனையுடன் கல்யாணப் பேச்சு முடிவடைகிறது. அந்நிபந்தனை யாதெனில் தாரா இனி மாடலிங்கை தொடரக்கூடாது என்பதே. தாரா இதற்கு ஒப்புக்கொண்டதால் ராம்-தாரா திருமண நிச்சயதார்த்த தேதி குறிக்கப்படுகிறது.
இங்கு நிஷாந்தினி சோகமாக வீட்டின் மாடியில் உட்கார்ந்து இருக்கிறாள். கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த உத்ரா நிஷாந்தினியைத் தேடி இறுதியில் நிஷாந்தினி மாடியில் இருப்பதை தெரிந்து அங்கு போகிறாள். நிஷாந்தினி சோகமாக இருப்பதைப் பார்த்து அவளிடம் சோகத்திற்கான காரணத்தினைக் கேட்கிறாள்.உடனே, நிஷாந்தினி பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிளான கூடைப்பந்து போட்டியில் தன்னுடைய பள்ளி அணி வெற்றி பெற்று மாநில அளவிளான போட்டிக்கு தகுதிப் பெற்றது எனச் சொல்கிறாள். இதைக்கேட்ட உத்ரா சந்தோஷப்பட்டு நிஷாந்தினிக்கு வாழ்த்துக்கள் சொல்கிறாள். “இதற்கு ஏன் நீ கவலைப்படுகிறாய்?” என உத்ரா கேட்க, “போட்டிகள் அனைத்தும் சென்னையில் நடக்கின்றன. அப்பாவுக்கு தெரியாமல் நான் விளையாடியது தெரிந்தாலே, அப்பா என்னை கொன்று விடுவார். இப்படி இருக்க நான் எப்படி சென்னை போக முடியும்?” என நிஷாந்தினி பதிலளிக்கிறாள்.
இதைக்கேட்ட உத்ரா நிஷாந்தினியிடம் சென்னை போக தான் உதவி செய்வதாகச் சொல்கிறாள். உடனே, நிஷாந்தினி “எப்படி எனக்கு உதவி செய்யப் போகிறாய்?” என உத்ராவிடம் கேட்க, “கொஞ்சநேரம் நான் யோசிக்க வேண்டும்” என்கிறாள். அப்போது நிஷாந்தினி “இன்று இரவே நான் சென்னை போக வேண்டும்” என்கிறாள். இதைக்கேட்டவுடன் உத்ரா பதற்றத்தடன் யோசிக்க ஆரம்பிக்கிறாள். அப்போது தான் அவளுக்கு தனது அத்தை மகள் ரம்யாவின் திருமணம் ஞாபகம் வருகிறது. உடனே நிஷாந்தினியிடம் “சென்னை போய்வர எத்தனை நாள் தேவைப்படும்?” எனக் கேட்க, “4 நாள்கள் தேவை” என்கிறாள். உடனே உத்ரா நிஷாந்தினியிடம் “சென்ற மாதம் அத்தை மாமா வீட்டுக்கு வந்து ரம்யாவின் திருமண பத்திரிகை வைக்கும் போது நம்மிடம் என்ன சொன்னார்கள் என்று ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்க, “என்ன சொன்னார்கள்?” என்று நிஷாந்தினி யோசிக்கிறாள். அப்போது உத்ரா “ரம்யாவின் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பாகவே ஊருக்கு வர வேண்டும் என்று சொன்னார்கள்” என்கிறாள். மேலும் “அதை வைத்து தான் உன்னை ஊருக்கு அனுப்பமுடியும்” எனச் சொல்கிறாள். நிஷாந்தினி உத்ராவிடம் உனது திட்டம் தான் என்ன என்று கேட்க உத்ரா தான் போட்ட திட்டத்தை பற்றி சொல்கிறாள்.
அந்த திட்டம் என்னவென்றால் உத்ராவும் நிஷாந்தினியும் ரம்யாவின் திருமணத்திற்கு போவதாக வீட்டில் சொல்லிவிட்டு முதலில் கிளம்ப வேண்டும். ஆனால் உத்ரா மட்டும் ஊருக்கு போவாள். நிஷாந்தினி விளையாட சென்னை போவாள். ரம்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அப்பாவுக்கு விடுப்பு இரண்டு நாள் தான் கிடைக்கும்.அப்பாவுக்கு விடுமுறை கிடைக்காததால் அம்மாவும் ஊருக்கு வரமாட்டார். இதனால் அம்மா அப்பா ஊருக்கு வர கண்டிப்பாக 4 நாள்கள் ஆகும் .அதற்குள் நிஷாந்தினியும் வந்து விட வேண்டும். அதுவரை ஊரில் கல்யாணத்தில் அனைவரையும் உத்ரா சமாளித்து கொள்வதாகச் சொல்கிறாள். இவ்வாறு உத்ரா தன்னுடைய திட்டத்தினையும் அதன் நிபந்தனைகளையும் சொல்கிறாள். உத்ரா தனது திட்டத்தை சொன்னவுடன் இருவரும் ஊருக்கு போவதைப் பற்றி அம்மாவிடம் சொல்ல கிளம்புகின்றனர்.
கீழே இறங்கி சென்று தங்களது அம்மாவிடம் ரம்யா கல்யாணத்திற்காக ஊருக்கு போவதைப் பற்றி சொல்கின்றனர். இதைக்கேட்ட அவர்களின் அம்மா வித்யா முதலில் சம்மதிக்கவில்லை. கொஞ்சநேரம் அம்மாவுடன் இதுபற்றி விவாதிக்கின்றனர். ஆனால் அவர்களின் அம்மா அனைவரும் ஒன்றாக ஊருக்கு போகலாம் என்று தனது முடிவினில் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு இவர்கள் மூவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது கண்ணன் வேலை முடிந்து வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு வந்தவுடன் வித்யாவிடம் “என்ன பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?” எனக் கேட்க, உத்ராவும் நிஷாந்தினியும் ஊருக்கு கிளம்புவதாக சொன்னதை சொல்கிறார். இதைக்கேட்ட கண்ணனும் உத்ரா நிஷாந்தினி ஊருக்கு போக சம்மதிக்கவில்லை. ஆனால் உத்ரா விடுவதாக இல்லை. உத்ரா கண்ணனிடம் “ ஊருக்கு இப்போது நிறைய உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களைப் பார்த்து நீண்ட நாள் ஆகிறது. நிஷாந்தினிக்கும் இப்போது விடுமுறை உள்ளது. இந்த சமயத்தை விட்டால் இனி அனைவரையும் பார்த்து சந்தோஷமாக இருப்பது கிடைக்காது. எனவே, ரம்யா கல்யாணத்திற்கு ஒருவாரம் முன்பே போக வேண்டும்” என்று கெஞ்சி கேட்கிறாள். நிஷாந்தினியும் தன் பங்குக்கு அப்பாவிடம் கெஞ்ச இறுதியில் கண்ணன் ஊருக்கு போக ஒப்புக்கொள்கிறார். மேலும் இருவரையும் ஊரில் கண்ணனே கொண்டு வந்து விடுவதாக சொல்கிறார். இதைக்கேட்ட உத்ராவும் நிஷாந்தினியும் அதிர்ச்சி அடைகிறார்கள். உடனே உத்ரா கண்ணனிடம் “அப்பா நீங்களே வேலைக்கு போய் களைப்புடன் வந்துள்ளீர்கள். ஊருக்கு எங்களுடன் வந்து விட்டுவிட்டு காலையில் தான் வீட்டுக்கு வய முடியும். இதனால் எதற்கு உங்களுக்கு அலைச்சல்? நான் மாமாவை பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்லி இருக்கிறேன். ஊருக்கு போனதும் அவர் எங்களை வீட்டுக்கு கூட்டிப்போவார். நீங்கள் ஓய்வு எடுங்கள்” என்று சொல்கிறாள். இதைக்கேட்ட கண்ணன் உத்ராவிடம் “ சரி நீங்கள் முதலில் போங்கள். நானும் வித்யாவும் கல்யாணத்திற்கு இரு நாள் முன்னால் தான் வர முடியும். ஏனெனில் மூன்று நாள் தான் எனக்கு விடுப்பு கிடைக்கும். அதுவரை கல்யாண வீட்டில் எந்த பிரச்சனையும் செய்யாமல் இருக்க வேண்டும்” என்று சொல்கிறார்.
உடனே உத்ராவும் நிஷாந்தினியும் சந்தோஷப்பட்டு அப்பாக்கு நன்றி சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்ப துணிகளை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். அப்போது கண்ணன் அவர்கள் இருவரிடம் தானே வந்து பேருந்து நிலையத்தில் ஊருக்கு போகும் பேருந்தில் ஏற்றி விட்டு வருவதாக சொல்கிறார். பின்பு இருவரும் அம்மாவிடம் சொல்லிவிட்டு பேருந்து நிலையத்திற்கு அப்பாவுடன் புறப்படுகின்றனர். கண்ணன் இருவரையும் ஊருக்கு போகும் பேருந்தில் ஏற்றி விட்டு பேருந்து கிளம்பியவுடன் வீட்டுக்கு புறப்படுகிறார். போகும்போது உத்ராவிடம் ஊருக்கு போனவுடன் தனக்கு போன் போட்டு சொல்லுமாறு சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்படுகிறார். அப்பா போனவுடன் உத்ரா பேருந்தை நிறுத்தி நிஷாந்தினியுடன் இறங்கி நிஷாந்தினியை சென்னைக்கு விளையாடப்போகும் அவளது நண்பர்கள் இருக்கும் பேருந்தில் ஏற்றிவிட்டு நிஷாந்தினிக்கு வாழ்த்துக்கள் சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டு தானும் ஊருக்கு போகும் பேருந்தில் ஏறி புறப்படுகிறாள். நிஷாந்தினியும் உத்ராவுக்கு நன்றி சொல்லிவிட்டு நண்பர்களுடன் விளையாட சென்னை கிளம்புகிறாள்.
அத்தியாயம் -1 முடிவு
அத்தியாயம் – 2
ராம் நிஷாந்தினி சந்திப்பு
ஒரு வழியாக உத்ரா ஊருக்கு போய் சேருகிறாள். ஊருக்கு போனவுடன் அப்பாக்கு போன் செய்து ஊருக்கு வந்ததை சொல்கிறாள். இதைக்கேட்ட கண்ணன் நிம்மதியாக தூங்க போகிறார். கல்யாண வீட்டில் அனைவரும் கல்யாண வேலைகளில் மும்முரமாக இருந்தால் நிஷாந்தினி வராததை யாரும் கவனிக்கவில்லை. அப்படியே யாரவது நிஷாந்தினியை பற்றி கேட்டால் உத்ரா அவர்களை சமாளித்து கொண்டு நிஷாந்தினி வராததை வந்ததாக பொய் சொல்கிறாள்.
அடுத்த நாள் காலை நிஷாந்தினி சென்னை வருகிறாள். சென்னை வந்து சேர்ந்ததை உத்ராவிடம் சொல்கிறாள். இதைக்கேட்ட உத்ரா நிஷாந்தினிக்கு வாழ்த்துக்கள் சொல்லி அம்மா அப்பா கல்யாணத்திற்கு வருவதற்குள் ஊருக்கு வந்துவிடுமாறு சொல்லிவிட்டு போனை கட் செய்கிறாள். ஊருக்கு வந்தபின் நிஷாந்தினி மற்றும் அவளுடன் விளையாடும் நண்பர்கள் அனைவரும் ராமின் அப்பா சிரஞ்சீவிக்கு சொந்தமான விடுதியில் தங்க வைக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால் சிரஞ்சீவி நிறுவனம் தான் பள்ளிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டியினை நடத்துகின்றனர். இதற்கு காரணம் என்னவெனில் சிரஞ்சீவியின் கல்வி நிறுவனங்களின் விளம்பரத்திற்காக தான். எனவே போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் சிரஞ்சீவியின் விடுதியில் தங்க வைக்கப்படுகின்றனர்.
போட்டிகள் துவங்குகின்றன. முதல்நாள் லீக் போட்டிகள், இரண்டாவது நாள் ஓய்வு நாள், மூன்றாவது நாள் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறும். முதல் நடந்த போட்டிகளில் அனைத்திலும் நிஷாந்தினியின் பள்ளி அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த விஷயத்தை நிஷாந்தினி தன்னுடைய அக்கா உத்ராவிற்கு போன் செய்து சொல்கிறாள். அதைக்கேட்டு உத்ரா நிஷாந்தினிக்கு வாழ்த்துக்கள் சொல்லி சந்தோஷப்படுகிறாள். பிறகு நிஷாந்தினியிடம் அம்மா அப்பா நாளை மறுநாள் வருகின்றனர் என்றும் அதற்குள் ஊருக்கு வந்துவிட வேண்டும் என்று இன்னொரு முறை எச்சரித்து விட்டு போனை வைக்கிறாள். நிஷாந்தினியும் அதற்கு சரி என்று சொல்லிவிட்டு தூங்க போகிறாள். ஆனால் கொஞ்சம் சோகமாக தூங்குகிறாள். ஏனெனில் இன்று நடந்த போட்டிகளில் நிஷாந்தினி நன்றாகவே விளையாடவில்லை.
அடுத்தநாள் விடிகிறது. இன்று விடுமுறை என்பதால் நிஷாந்தினி நண்பர்கள் அனைவரும் சென்னையை சுற்றிப் பார்க்க முடிவெடுக்கின்றனர். ஆனால் நிஷாந்தினி அவர்களுடன் போக ஒப்பு கொள்ளவில்லை. அவளது நண்பர்கள் அவளிடம் எவ்வளவு சொல்லி பார்த்தும் அவள் அவர்களின் பேச்சை கேட்கவில்லை. தன்னுடைய முடிவான நாளைய போட்டிகளுக்கான பயிற்சி எடுக்கப்போவதாக சொல்கிறாள். இறுதியில் அவளை மட்டும் விட்டு விட்டு அனைவரும் சென்னையை சுற்றிப்பார்க்க போகின்றனர். அவர்கள் சென்றபின் நிஷாந்தினியும் பயிற்சி எடுக்க மைதானத்திற்கு புறப்படுகிறாள். மைதானத்தில் தனியாக பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறாள்.
ராம் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது வழக்கமாக கொண்டவன். சுவரஸ்யமான விஷயம் என்னவெனில் ராம் உடற்பயிற்சி செய்யவரும் மைதானமும் நிஷாந்தினி பயிற்சி எடுக்கும் மைதானமும் ஒன்று தான். வழக்கம்போல் ராம் மைதானத்திற்கு உடற்பயிற்சி செய்ய வருகிறான். அப்போது மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சி எடுக்கும் நிஷாந்தினியைப் பார்க்கிறான். பார்த்த உடனே அவள் மீது காதல் கொள்கிறான். ராம் நினைத்த அழகுடன் நிஷாந்தினி இருந்ததால் கண்டவுடன் காதல் கொள்கிறான். உடனே, நிஷாந்தினியை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் எழுந்ததால் அங்கு இருந்த மைதானத்தின் பராமரிப்பாளரிடம் நிஷாந்தினியைப் பற்றி கேட்கிறான். அதற்கு அவர் “நம் நிறுவனம் நடத்தும் மாநில அளவிலானகூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்க வந்த ஏதவதொரு பள்ளியின் மாணவி” என்று சொல்கிறார். அதைக்கேட்டவுடன் ராம் நிஷாந்தினி விளையாடும் அழகைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறான். ரொம்ப நேரமாக ஒரு ஆண் தான் விளையாடுவதைப் பார்ப்பதை உணர்ந்த நிஷாந்தினி ராமிடம் காரணம் கேட்க போகிறாள்.
நிஷாந்தினி ராமிடம் வந்து “இதற்கு முன் பெண் விளையாடுவதை பார்த்ததே இல்லையா?” என்று கேட்க, ராம் நிஷாந்தினியிடம் “நான் உன்னை காதலிக்கிறேன். அதனால் தான் உன் அழகை ரசித்துக்கொண்டு இருக்கிறேன்” என பதிலளிக்கிறான். இதைக்கேட்டவுடனே நிஷாந்தினி அதிர்ச்சி அடைகிறாள். உடனே ராமிடம் “காதலா? நீ என்ன பைத்தியமா? நான் இதுவரை உன்னை பார்த்தது கூட இல்லை.அப்புறம் எப்படி என்னை காதலிப்பதாக சொல்கிறாய்?” எனக் கேட்க, ராம் அவளிடம் “இதற்குமுன் உன்னை பார்த்தது இல்லை இன்று தான் உன்னை பார்த்தேன் பார்த்தவுடன் பிடித்து விட்டது. அதனால் I Love U” எனச் சொல்கிறான். இதைக்கேட்ட நிஷாந்தினி ராமின் கன்னத்தில் அறைகிறாள். பின்பு ராமிடம் “ பார்த்தால் படித்தவன் போல இருக்கிறாய். ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அநாகரீகமாக பேசுகிறாய்?. இனி என் பின்னால் உன்னைப் பார்த்தால் நடப்பதே வேறு” என்று சொல்லிவிட்டு வேகமாக தன்னுடைய ரூமிற்கு போகிறாள். தனக்கு பேச கூட வாய்ப்பு கொடுக்காமல் வேகமாக பேசிவிட்டு போகும் நிஷாந்தினியை பார்த்து சிரித்து கொண்டு நிற்கும் போது சிரஞ்சீவி ராமுக்கு போன் செய்து “கம்பெனியில் மீட்டிங் இருக்கிறது சீக்கிரம் கிளம்பி கம்பெனிக்கு வா” என்று சொல்ல உடனே கம்பெனிக்கு கிளம்ப புறப்படுகிறான்.
தன்னுடைய ரூமிற்கு சென்றவுடன் நிஷாந்தினி உத்ராவிற்கு போன் செய்து மைதானத்தில் நடந்தவற்றை சொல்கிறாள். இதைக்கேட்ட உத்ரா ராமை திட்டித் தீர்க்கிறாள். மேலும் நிஷாந்தினியிடம் புது ஊரில் கவனமாக இருக்க சொல்லிவிட்டு போனை வைக்கிறாள். நிஷாந்தினி மீண்டும் மைதானத்திற்கு போகவில்லை. நடந்தவற்றை நினைத்து சோகமாக உட்கார்ந்து இருக்கிறாள். அப்போது உத்ரா நிஷாந்தினிக்கு போன் செய்து அப்பா நாளை மறுநாள் காலையிலே ஊருக்கு வருவதாக சொல்கிறாள். இதைக்கேட்ட நிஷாந்தினி திடுக்கிடுகிறாள். ஏனெனில் சென்னையில் இருந்து ரம்யாவின் ஊருக்கு போக ஆறு மணி நேரம் ஆகும். ஊருக்கு பேருந்து பத்து மணிக்கு மேல் பேருந்து கிடையாது. இதனால் உத்ரா நிஷாந்தினியிடம் நாளை மதியமே சென்னையில் இருந்து புறப்பட சொல்கிறாள். இதைக்கேட்ட நிஷாந்தினி “நாளைய போட்டிகள் அனைத்தும் மாலை நான்கு மணிக்கு தான் துவங்குகின்றன.போட்டிகள் முடிய இரவு பத்து மணி ஆகிவிடும். இதனால் நாளை மதியம் என்னால் புறப்படமுடியாது” என்கிறாள். உடனே உத்ரா “சரி போட்டி முடிந்தவுடன் புறப்படு. அதுவரை அப்பாவை நான் முடிந்தவரை சமாளிக்கிறேன்” எனச் சொல்ல “அந்த சிரமத்தை உனக்கு தரமாட்டேன்” என்று சொல்லி போனை வைக்கிறாள். உத்ரா மீண்டும் நிஷாந்தினிக்கு போன் செய்தும் அவள் எடுக்கவில்லை. நிஷாந்தினி தன் மனதில் ஒரு முடிவை எடுக்கிறாள்.
மாலை ஆகிறது சென்னையை சற்றிப்பார்க்க போன நிஷாந்தினியின் நண்பர்கள் ரூமிற்கு வருகின்றனர். நிஷாந்தினி சோகமாக உட்கார்ந்து இருப்பதைப் பார்த்த அவளது நெருங்கிய தோழி நந்தினி அவளிடம் சோகத்திற்கான காரணத்தை கேட்க, நிஷாந்தினி மதியம் உத்ராவுடன் போனில் பேசியதையும், தான் எடுக்கப் போகும் முடிவினைப் பற்றியும் சொல்கிறாள். நிஷாந்தினி எடுத்த முடவு என்னவென்றால் நாளைப் போட்டிகளில் பங்கேற்காமல் ஊருக்கு புறப்படுவது என்பது தான். நிஷாந்தினி சொல்வதைக் கேட்ட நந்தினி அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். மேலும் நிஷாந்தினியின் முடிவினை கைவிடுமாறு கட்டாயப்படுத்துகிறாள். நந்தினி நிஷாந்தினியிடம் “நாளை நடக்கும் கூடைப்பந்து இறுதியில் வெல்வது தான் நம் அனைவரின் கனவே நாளை போட்டியில் நீ பங்கேற்கவில்லையெனில் இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் எல்லாம் வீண்” என்றெல்லாம் சொல்லி நிஷாந்தினியை சம்மதிக்க வைக்கிறாள். நிஷாந்தினியும் அப்பா ரம்யாவின் திருமணத்திற்கு வருவதற்கு முன் நான் ஊருக்கு போய்விடுவேன் என்று உறுதியாக சொல்கிறாள். இறுதியில் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட சந்தோஷ்த்தில் இருவரும் தூங்க போகிறார்கள்.
இங்கு ராம் அவனது நண்பர்கள் சுரேஷ் மற்றும் கவின் உடன் தன் வீட்டின் மாடியில் பேசிக்கொண்டு இருக்கிறான். அப்போது ராம் காலையில் நிஷாந்தினியை மைதானத்தில் சந்தித்தைப் பற்றியும், அவளிடம் காதல் சொன்னதைப் பற்றியும் அதன் பின் நடந்தவற்றையும் தனது நண்பர்களிடம் சொல்கிறான். இதைக்கேட்ட கவின் நிஷாந்தினியின் பெயர் மற்றும் அவளது விவரங்களை பற்றி கேட்கிறான். அதற்கு ராம் கவினிடம் “ எங்கள் கம்பெனி நடத்தும் கூடைப்பந்து போட்டியில் அவள் விளையாடுகிறாள் என்பதை தவிர எதுவும் தெரியாது” என்கிறான். இதைக்கேட்ட சுரேஷ் ராமிடம் “இன்னும் கொஞ்ச நாளில் தாராவை கல்யாணம் செய்யப் போகிறாய். இப்போது வேறு பெண்ணை காதலிக்கிறேன் என்கிறாய். இதெல்லாம் தவறு” என்று சொல்ல ராம் “ காதலித்து திருமணம் செய்து கொள்வது தான் என்னுடைய ஆசை. ஆனால் நேற்றுவரை என் மனதுக்கு பிடித்த பெண்ணை பார்க்கவில்லை. இன்று மைதானத்தில் அந்த பெண்ணை பார்த்தவுடன் எனக்கு பிடித்து விட்டது. இதிலென்ன தவறு. அதுமட்டுமில்லாமல் தாராவை என் அப்பாவின் பிஸினஸ் முன்னேறுவதற்காக மட்டும்தான் கல்யாணம் செய்ய ஒப்புக் கொண்டேன். விரும்பி அல்ல” என்று சொல்கிறான். இதைக்கேட்ட சுரேஷ் அமைதியாகிறான். கவின் ராமிடம் “இனி என்ன செய்ய போவதாக இருக்கிறாய்?” என்றுக் கேட்க, “நாளை முதல் வேளையாக போட்டி நடக்கும் இடத்திற்கு போய் அவளுடைய விவரங்களை தெரிந்து கொண்டு முறையாக அவளது வீட்டில் பேசலாம்” எனச் சொல்கிறான். அப்போது ராமின் அம்மா கல்பனா மாடிக்கு வந்து ராமிடம் “நாளை நிச்சயதார்த்த புடவை எடுக்க போகவேண்டும். சீக்கிரம் தூங்கு” என்று சொல்லிவிட்டு போகிறார். நாளை வேறு வேலை செய்யலாம் என்று திட்டம் போட்டிருந்த ராமிற்கு இது அதிர்ச்சியாய் இருந்தது.
அப்போது கவின் ராமிடம் “நாளை கல்யாணப்புடவை எடுக்கப் போனால் உன் காதலியைப் பற்றிய விவரத்தை எப்படி தெரிந்து கொள்வது?” எனக் கேட்க, ராம் “ எப்படியும் போட்டிகள் தொடங்க மாலை ஆகும். அதற்குள் நாம் மைதானத்திற்குள் போய்விடுவோம்.” என்று மன உறுதியுடன் சொல்கிறான். இதைக்கேட்ட சுரேஷ் “ஒருவேளை அந்த பெண் உன்னை திருமணம் செய்ய ஒத்து கொண்டால் தாராவையும் வீட்டில் இருப்பவர்களையும் எப்படி சமாளிப்பாய்?” என ராமிடம் கேட்க, “முதலில் அவள் என்னை ஏற்றுக்கொள்ளட்டும். அதன்பின் எல்லாம் பார்த்து கொள்ளலாம்” என்று ராம் பதிலளிக்கிறான். இறுதியில் ராம் தூங்குவதற்கு தனது அறைக்கு போகிறான். கவினும், சுரேஷும் வீட்டிற்கு புறப்படுகின்றனர்.
ராம் நிஷாந்தினியைப் பார்க்க போவானா? நிஷாந்தினி ராமின் காதலை ஏற்பாளா? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
அத்தியாயம் – 2 முடிவு

© mr.story