...

18 views

பணம்
நான் காகிதத்தால் உருவாக்கப்பட்டு பலவிதங்களில் மக்களுக்கு பயன்படுகின்றேன். உலகிலேயே மிகவும் அசுத்தமான பொருட்களில் நானும் ஒன்று தான். ஆனாலும், மக்கள் என்னைத் தொடுவதற்கும் பயன்படுத்துவதற்கும் தயங்கவில்லை. ஏனென்றால், நான் அவ்வளவு முக்கியமாக திகழ்கின்றேன். மேலும், என்னை ஜாதி, மதம் இனம் பாகுபாடின்றி பயன்படுத்துகிறார்கள்.

சிலர் என்னைச் சரியான முறையில் பயன்படுத்துகின்றனர். ஆனால், சிலரோ என்னை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அப்படி என்னை பயன்படுத்தி, கடன் வாங்கி, அதைத் திரும்ப செலுத்த முடியாமல் சிக்கிக்கொள்கிறார்கள் இதனால், பலர் தற்கொலை கூட செய்கின்றனர்.

நீங்கள் என்னை வைத்து எதையும் வாங்கலாம். ஆனால், உண்மையான அன்பையும் சந்தோஷத்தையும் உங்களால் வாங்க முடியாது. அதற்கு விலை மதிப்பு இல்லை. என்னை குறைந்த அளவில் வைத்திருப்பவர்கள் கூட ஆனந்தமாக இருக்கிறார்கள். நான் உங்களுக்கு அவசியமானதாக இருந்தாலும் நிரந்தரமானது இல்லை.
நீங்கள் உலகில் வாழும் வரை தான் நான் உங்களுக்குப் பயன்படுவேன். நான் பணமாக இருந்தாலும் பிணம்வரை மட்டும் தான். நன்றி.

-தனலெட்சுமி-
© Dana Hephzibah