...

4 views

வர வேண்டாம் " கொரோனா"
பணக்கார வீட்டு பெண்னை காதலித்த காரணமாய் வினய் யை தீர்த்து கட்ட பெண்ணின் தந்தை கூலி படை அடியாட்களை ஏவி விடுகிறார்,
வினய் வேலை முடித்து கொண்டு வீடு திரும்பும்நேரம், நேரம் சுமார் ஒன்பது இருக்கும், ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் வினய் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறான், அடியாட்கள் தாயார் நிலையில் காத்துக் கொண்டுயுள்ளனர்,
வினய் அருகே வந்ததும் பைக்கை நிறுத்தி தாக்க முறையிட வினய் யாருடா நீங்க கேட்க, அதற்கு அடியாட்கள் உனக்கு பணக்கார வீட்டு பொண்ணு கேட்குதோ என்று சொல்ல, வினய் சற்று சுதாரித்துக் கொண்டு தூரமாய் ஓடி போயி அடியாட்களை பார்த்து தயவு செய்து என்கிட்டே வர வேண்டாம், சொன்ன கேளுங்க கிட்டே வர வேண்டாம், அடியாட்கள் அதற்கு டேய் நில்லுடா சும்மா ஓடி கிட்டே இருக்கே, உன்னை கை கால் மட்டும் வெட்ட வந்தோம் ஆனா இப்போ உன் உயிர் யே எடுத்துறோம்,
சொன்ன கேளுங்க எனக்கு கோரானா ஒமிக்கிரான் வந்திருக்கு, சொன்ன கேளுங்க, ஓடி வந்தவர்கள் அதிர்ந்தாற் போல் நின்று ஒருவர்க்கு ஒருவர் முகத்தை பார்த்து கொள்கின்றனர், இவ்வாறு நிமிடம் கழிகிறது, வினய் கூட நின்று பார்த்து கொண்டு இருகிறான், ஒன்றும் புரியாமல் அடியாட்களில் ஒருவன் மாச்சான் நீ போய் கொலை செய்ய போ, அதற்கு இல்லே மச்சான் நீ போ மச்சான் என்று அடியாட்கள் நிதானமாக பேசி கொண்டதை கவனித்த வினய் வாங்கடா அடிக்க வாங்கடா என்று முன்னோக்கி நடக்க, ரவுடிகள் பின்னோக்கி நடக்கின்றனர், டேய் வராதே கிட்டே வராதே அங்கே இருடா,மேலும் ரவுடிகள் பின்னோக்கி நட கின்றனர், வினய் மேன்மேலும் கொரோனா இருக்கு வாங்கடா என்றதுமே அடியாட்கள் ஓடியே விடுகின்றனர்,
அப்படா வினய் ஒரு பொய்யை சொல்லி தப்பித்தோம் நினைத்து கொண்டு வீட்டுக்கு புறப்படுகிறான்.......

© G.V.KALASRIYANAND