...

9 views

காதலில் வெள்வேனா...! (பகுதி 1)
அப்பொழுது நான் , 7 ஆம் வகுப்பு படிக்கிறேன் , என் சொந்த ஊரான உடுமலையில் . நான் படித்த பள்ளியின் பெயர் சீனிவாசா பப்ளிக் பள்ளி அதுவும் நான் இந்த பள்ளிக்குப் புதிது (new admission). நான் 7 ஆம் வகுப்பு 'அ' பிரிவில் படிக்கிறேன் . முதல் நாள் அன்று ( ஜுன் 11 ) , பள்ளி முலுநாள் இருக்கும் ( அதாவது 4:30 pm மணிக்கு தான் பள்ளி முடியும் ) என்ற தகவல் கிடைத்தது . எனக்கு கொதித்தது .

"எப்பொழுதும் முதல் நாள் என்றால் 1/2 நாள் மட்டுமே பள்ளிகள் நடைபெறும் , ஆனால் இங்கு என்ன கொடுமைடா சாமி. எப்படி நாளை ஓட்டுவது",
என்று யோசித்துக்கொன்டிருந்தேன் .

அப்பொழுது எனக்கு ஒத்தாசைக்காக மற்றொருவனும் வ்ந்தான் (new admission) அவன் பெயர் 'பாலவிக்னேஷ்'. மணியோ 9:00 am நெருங்கியது . வகுப்பறைக்குள் நுழைந்தார் ஆசிரியை 'தேவி'. ஆசிரியை 9:10 am-ற்குள் மாணவர்களின் வருகையை பதிவுசெய்து , புதிதாக சேர்ந்த மாணவர்களை அழைத்தார் (new admission students ) . நானும் பலர் இருப்பார்கள் என்று நினைத்தேன் , பார்த்தால் மொத்தம் நால்வர் மட்டுமே எழுந்தோம் .

"நால்வரும் அவர் அவர் முகவரியைக் கூறுங்கள்" என்று ஆசிரியை கேட்டார் .

இருவர் முடித்து விட்டனர் , முடித்த இருவரும் பெண்கள் . அடுத்து மீதம் உள்ளது இருவர் . அடுத்தது நான் . இருக்கையிலிருந்து
எழுந்தேன் அப்பொழுது மணி 9:20 am-ஐக் கடந்தது.
அச்சமையும் ஒரு சத்தம் ( may I come in mam ) அனைவரின் கவனமும் வெளியே திரும்பியது .
அழகான ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள் , அவளே என் காதலி.

"முதல் நாளே தாமதமா . ஏன் தாமதம் ? " என்று அப்பெண்ணிடம் கேட்டார் ஆசிரியை .
(இவ்வாறு ஒரு உரையாடல் நடக்க)
நான் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன் . பின் "இன்று முதல் நாள் ஆகையால் உன்னை உள்ளே செல்ல அனுமதிக்கிறேன்", என்றார் ஆசிரியை .

இப்பொழுது நான் என் முகவரியைக் கூறத் தொடங்கினேன்.
(பெயர் முதல் ஏன் இப்பள்ளியில் சேர்ந்தேன் வரை)
அப்பொழுது நான் இருந்த வீடு போடிபட்டி கார்ப்ரேஷன் வங்கியின் முன் இருந்தது . எப்படியோ ஒரு வளியாக முதல் நாள் ஒரு நண்பனுடன் முடிந்தது .

அடுத்த நாள் பள்ளிக்கு நான் வேனில் பயனிக்கிறேன் . ஒரு பானையை முலுமையாய் விலுங்கியவன் போல் ஒருவன் (6ஆம் வகுப்பு) , மூன்று குட்டித் தங்கச்சிகள் (இருவர் 1 ஆம் வகுப்பு மற்றும் ஒருவர் 4 ஆம் வகுப்பு) , மூன்று குட்டித் தம்பிகள் (மூவரும் 1 ஆம் வகுப்பு) ,
ஒருவன் சதுரங்க விளையாட்டைக் கரைத்துக் குடித்தவன் (6 ஆம் வகுப்பு) , மற்றும் கணிணி பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியை - பெயர் : காவிரி , நான் . பின் பள்ளியை அடைந்தோம் . அன்று பல நண்பர்கள் கிடைத்தனர் . இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள் . ஏனென்றால் எனக்கு 'சத்தியன்' என்ற தோழன் கிடைத்தான் . இப்படியே ஒரு வாரம் கடந்தது . எப்பொழுதும் போல் நாள் சென்றது ஆனால் ஒரு மாற்றம் . பள்ளி முடிந்த பின் திண்பன்டங்கள் வழங்கப்படும் என்றனர் . பிறகு 4:20pm தான்டியது பொழுது .

"கொண்டுவரும் திண்பன்டங்களை வகுப்பு தோழர்களுக்குப் பரிமாற இருவர் முன் வரவேண்டும்.வாரம் வாரம் இருவர் மாற்றுவோம்.",என்றார் ஆசிரியை. இருவர் முன் சென்றனர் இருவரும் பெண்கள்.

இவ்வாறு மென்மையாக சென்றுகொண்டிருந்தது .
அப்பொழுது ஆரம்பித்தது காலாண்டுத் தேர்வு . எனக்கு சுத்தாமாக வராதது மனப்பாடம் செய்தல் என்ற ஒரே காரணத்தினால் இந்த பள்ளியில் சேர்ந்தேன் . ஆனால் இதுவும் தலகீலாய் மாறியது . தேர்வு முடிவும் வந்தது . அனைத்திலும் 10ற்கு கீழ் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிற. தமிழில் முதல் மதிப்பென் எடுத்ததால் ஆசிரியையிடம் நல்ல பெயர் இருந்நதது. அப்பொழுது வகுப்பு விருப்பு வெறுப்புடன் இருந்தது . இப்படியே மூன்று மாதங்கள் கடந்தது . அப்பொழது பள்ளியின் முதல்வர் , பள்ளி மாணவர்களின் நலன் கருதி தேர்தல் ஒன்றை அருவித்தார். இத்தேர்தலில் நால்வர் போட்டியிட்டனர். என் நண்பனும் கூட. இங்கும் அரசியல் நடந்தது. அஜய் என்பவன் வெற்றி அடைந்தான். அடுத்து அறையாண்டுத் தேர்வு வந்தது. இத்தேர்வு என்னை தலைதூக்கியது அனைத்து பாடங்களிளும் 20ற்கு மேல் . இவ்வாறு நாட்கள் கடந்தது .

விளையாட்டு விழாவிற்கு நாள் நெருங்கியது . நான்கு குரூப் (ruby , sapphire , emerold , gopal) இருந்தது . நான் சஃபையரைச் சார்ந்தவன். நாங்கள் தான் அப்பள்ளியிள் மூத்தவர்கள். அவள் (என் காதலி) தான் இதை வளிநடத்தும் பெண். நான் கிரிக்கெட் விளையாட்டில் பவ்லர் என்பதால் என்னை இந்த குரூப்பில் விளையாட அழைத்தால். அன்று தான் அவளிடம் முதன் முதளிள் பேசினேன். அன்றே என் மனதில் ஒரு திருப்பம். ஆனால் என் வீட்டில் விடவில்லை. ஏனெனில், அப்பொழுது எங்கள் வீடு கட்டும் பணி தொடங்கியது. ஆனால் முட்டி மோதி வீட்டில் அனுமதி வாங்கி விளையாட சென்றேன். நான் 8ஆம் இடத்தில் விளையாடுபவன். மொத்தம் 6 மேட்சுகள் விளையாடி 4 வெற்றி 2 தோல்வி என்ற நிலையில் 2ஆம் இடத்தில் அரைஇறுதிப் போட்டிக்குள் உள்ளே நுளைந்தோம். அந்த 6 மேட்சுகளிள் 2 நான் ஆட வில்லை ( ஒன்று வெற்றி மற்றொன்று தோல்வி)
அரைஇறுதியில் முதல் மேட்ச் தோற்று மற்றோன்றில் வென்று இறுதிப்போட்டியில் ரூபி அனியை சந்தித்தோம் . இந்த அணியிடம் இது வரை 3 மேட்சுகள் விளையாடியதில் 1 மேட்ச் மட்டுமே வெற்றி. விளையாடத்தொடங்கினோம். அவர்களை பத்து ஓவர்களிள் 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் மட்டுமே இளந்தனர். அதே நாங்கள் 7 அவர்களுக்கு 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இளந்துவிட்டோம். இனி பவ்லர்கள் மட்டுமே , ரன்களைக் குவிக்க யாரும் இல்லை. ப்ரேக் கொடுத்தார்கள். அவள் என்னிடமும் எனக்கு பின்னால் விளையாட இருப்பவர்களிடமும் உங்களால் முடியும் என்று கூறினால் . ஆனால் எனக்கு அவள் என்னிடம் உன்னால் மட்டுமே முடியும் என்று கூறியது போல் இருந்தது. மேட்சில் திடீர் திருப்பம் .
8 அவர்களுக்கு 45 ரன்கள் அடித்த நிலையில் மீண்டும் ஒரு பரிதாபம் 1 விக்கெட் இழந்தோம். இப்பொழுது நான் ஆட வேண்டும். என் நேரம் சுழல் பந்து வீச்சாளர் வந்தார் , முதல் பந்தே 6 .
இந்த ஒரு ஓவரில் மட்டும்
19 ரன்கள் (6 0 6 0 6 1). மீண்டும் நானே. கடைசி ஓவர் வேகப்பந்து வீச்சாலர் , தேவைப்படும் ரன்களோ ஏழு. எப்படியோ வெற்றி.இந்த ஓவரில் (2 0 3 1 w 0wd ). கடைசியில் ஒரு பாராட்டு அவளிடம். மனதில் ஒரு உர்ச்சாகம் மற்றும் அவள் மேல் ஒரு அன்பு. விளையாட்டு விழாவில் ஒரு பரிசு பெற்றேன்.

பின் அவளிடம் நேராய் சென்றேன்,"நன்றி" என்றேன்.
அதற்கு அவள் ,"எதற்கு ?"
என்றாள்.
"நீ கூப்பிட்டதால்தான் நான் இப்போட்டியில் கலந்து கொண்டேன் மற்றும் நீ நம்பிக்கை அழித்தால்தான் என்னால் வெற்றிபெறமுடிந்தது. அதற்கு நன்றி" எனக் கூறினேன்.
அதற்கு அவள் புன்னகைத்துச் சென்றால்.

இது முடிந்தவுடன் பிப்ரவரி மாதம் கடைசியில் உணவு விழா நடந்தது அதில் மொத்தம்
6 கிளப்ஸ் (english , maths , science , etc...) இருந்தன.
நான் ஆங்கில கிளப்பைச் சேர்ந்தவன்.
அவள் அறிவியல் கிளப்பில் இருந்தால். இந்த விழாவில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் விதவிதமான உணவுகளைக் கொண்டுவரவேண்டும். அந்த நாளும் வந்தது. விழாவில் கலந்துகொண்டோர் அனைவரும் கீழே அந்தந்த கிளேப்பிர்க்கான கூடாரங்களிள் இருந்தார்கள். அன்று வகுப்பில் நாங்கள் ஒரு 10 பேர் இருந்தும். அழகாய் விலையாடிவிட்டு. அன்று ஒரு பகையும் வளர்ந்தது.
இன்றும் அது இருக்கிறது. அதுவும் அவளுடைய சொந்தக்காரன் அவன். ஆனால் அவனை அவளிற்கும் பிடிக்காது. மற்றொரு பகையும் இருந்தது. அவளை ஒரு தலையாய்க் காதலிப்பவனிடம். அவர்களை சமாளிக்க என் நண்பர்கள் உதவினர். நான் இப்பொழுது அவள் கொண்டுவந்த உணவை சுவைக்கச் சென்றேன். அப்பொழுது தான் நான் அறிந்தேன் நான் கொண்டுவந்த ₹100-க் காணவில்லை என்று. உடனே,

"டேய் கவின், ஒரு ₹60 இருக்காடா ? இறுந்தா கொடுடா நாளைக்கு தந்துடுறேன்" என்று கேட்டேன்.அவனும் "இந்தாடா" என்று கொடுக்க , நான் நேராகச் சென்று டோக்கனை வாங்கி உள்ளே சென்றால் அவளது உணவு முடிந்தது. பின் இரு சப்பாத்திகளை வாங்கி சாப்பிட்டு விட்டு வெளியே வந்தேன், அவள் மற்றொரு பாக்ஸ்சை எடுத்து வந்து "இந்த" என்று கொடுத்தால். அப்பொழுது வரை அவளை நான் பார்க்கவில்லை. அவள் அன்று அவள் அழகிய மயில் போல் தோன்றினால். "எப்பவும் இருக்குறத விட இன்றைக்கு நல்ல இருக்க" என்று கூறினேன். அவள் "அப்டியா. நன்றி."என்று கூறினாள். அன்று காதலில் விளுந்தவன் இன்றுவரை...!

பிறகு ஆண்டு விழா , அதில் நான் எதிலும் பங்கெடுக்கவில்லை.
அவள் பரதம் சிறப்பாய் ஆடுவாள். அப்பொழுது முதலில் இசை பின் பரதநாட்டியம். அன்று அவள் மோனோலிசா ஓவியம் போல் காட்சி அளித்தால். இது காதலா இல்லை அன்பா என்று சிறிதும் தெரியவில்லை.

கடைசியில்...

-தொடரும்

© மோ.கோகுல் ஆனந்த்