...

0 views

பசிக்குது சோறு போடுமா.

சோறு போடுமா....!

மனிதன் சாப்பிட்ட மூக்காலங்கள்
தாத்தா: உயிர்வாழ // உழவு செய்ய.
அப்பா: பசிக்காக // படிப்பற்காக.
பேரன்: ருசிக்காகவும்//ரீசார்ஜ் செய்யவுமா?

அப்பொழுது , எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
நெற்கதிரை(நெல்+கதிர்) கதிரடிக்க வாசலில் கட்டு கட்டாக மலை போல் குவித்து வைத்து இருந்தார்கள். நான் அதன் மேல் ஏறி என் அழகான ஊரையும் ஏரிக்கரையும் எருமை மாடுகளையும் பார்த்து ரசித்ததும், கையில் குச்சியுடன் மேலே நின்று ஊருக்கே நான் ராஜா போல் ஆனந்தமாக நின்றது ஞாபகம். அப்பொழுது என் தாத்தா கதிரடிக்க, ஆயா அதை தூற்றி நெல்லைப் பிரித்தவுடன். அதை அனைத்தும் முத்து மணியைப்போல் பார்த்து பார்த்து மூட்டையில் அள்ளி எடுத்து வைத்தார்.

நான் : சிதரிய நெல்லை எடுத்து வந்து மூட்டையில் போட்டேன்.

தாத்தா : குச்சிய கீழ போடு , அதை நான் அள்ளிக்கிறன் நீ போய் விளையாடு .

நான் : ஏன் தாத்தா நான் எடுக்க கூடாதா?

தாத்தா : நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும். இதெல்லாம் என்னோடு போகட்டும்.

தொலைவில் புல்லட் சத்தம் கேட்டவுடன் தாத்தாவிடம் சொல்லிவிட்டு , ஒடிப்போய் அப்பாவைப் பார்த்தேன்.என் கையில் இருக்கும் குச்சியை பிடிங்கி எரிந்துவிட்டு சிரித்தபடியே என் கண்ணத்தில் முத்தமிட்டு கையில் இருக்கும் தின்பண்டங்களைக் கொடுத்து இந்தா நீயும் உன் தம்பியும் சாப்பிடுங்க என்றார். அப்பா தாத்தாவை அமர வைத்துவிட்டு அவர் வேலையைச் செய்ய தொடங்கினார். அப்பாவிடம் நான்

நான்: அப்பா இந்த நெல்லை அள்ளக்கூடாதா? தாத்தா சொன்னார்.

அப்பா : சிரித்தபடி , அள்ளலாம். ஆனால் எல்லா நேரமும் அள்ள முடியாது. நீ போய் விளையாடு என்றார்.

மனதில் பதிந்து விட்டது ....


சில வருடங்களுக்கு பின்பு:

எல்லா நேரமும் அள்ள முடியாது
அம்மா கூறிய பின்பு தான் நான் உணர்கிறேன் அப்பா ஏன் அப்படி சொன்னார் என்று.

அம்மா கூறியது: அவர் உன்னை கஷ்ட படக்கூடாதுனு சொல்லியிருப்பார். விவசாயம் செய்வது மிக எளிதல்ல. குழந்தையைப்போல் பெற்று எடுக்க வேண்டும். அதற்கு சூரியனின் ஆசிர்வாதம், நீர் நிலை , நம் மாடுகள் துணையால் காட்டை உழுது ,நீர் தேக்கி, விதை தூவி , நாத்து நட்டு , வளர்ந்து வரும் வரை பாசன நீர் அளவு எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.சரியாக விளைந்து பின்பு தான் அறுவடை செய்வார்கள். இப்பொழுது ஏறி விளையாடுகிறாய நெற்கதிர் அப்படி தான் வந்தது.அதன்பின் நெல்லை அவித்து காயவைத்து அரைத்த பின் அரிசி தனி உமி
தனியாக வந்துவிடும்.

நான் : இந்த வேலை எல்லாரும் செய்யலாமே. அப்பாவிற்கு தாத்தா சொல்லி கொடுத்தார் . எனக்கு அப்பா இதைப்பற்றி சொல்லவே இல்லை.

அம்மா :விவசாயத்தைக் கற்றுக்கொண்டு செய்யலாம் தான்.ஆனால் எல்லா நேரமும் மழை , காற்று , வெயில் , பணம் இவையால் சூழ்நிலைகளால் மாறும். மாறினால் , பின்விளைவுகள் வலிகள் மிகுந்தவை. பயிர்கள் கருகிப்போகும், நெல் கிடைக்காது. நெல் கிடைக்கவில்லை என்றால் பணம் நேரம் உழைப்பு அனைத்தும் வீண். யோசித்து பார் உன் வயதில் உன் அப்பா காலை சாணி அள்ளிவிட்டு , பழைய நீச்சத்தண்ணீக் குடித்து விட்டு மாலை வந்தும் மேய்கின்ற மாட்டை கட்டிவிட்டு படிப்பார், வீட்டு வேலை சமைக்க உன் அத்தைகள் செய்து வைப்பார்கள்.ஆயா தாத்தா கூலி வேலைக்கும் போவார்கள். கல்லூரி பருவத்தில் நம் ஊரில் இருந்து 35km சைக்கிளில் சேலம் கலைக் கல்லூரிக்குச் செல்வார். வார இறுதியில் கிணறு வெட்டச் செல்வார். பசிக் கண்ணை கட்டும். ஒருவேளை கூழ் மட்டுமே கிடைக்கும். நம் ஆயா கூலிவேளை செய்தும் , கால் கொலுசு கொடுத்து தான் படிக்க வைத்தார். இருநூறு ரூபாய் இல்லாமல் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. இருந்தும் அவர் படித்த BA (co-op)க்கு இரண்டு வேலை வந்தது வங்கியிலும், காவல்துறையிலும். காவல்துறையில் சேர்ந்தார் உன் அப்பா. வறுமை, பசி, விடுமுறை இல்லை, கடினமான கல்லூரி இன்னும் பல....

அதனால் தான் உன் கையில் குச்சியை பார்த்தால் தூக்கி எரிவார்.அந்த வலி வறுமை பசி இந்த கொடிய நிலமை உனக்கு வரக்கூடாது. நீ தாத்தாவிற்காக விவசாயமும் அப்பாவிற்காக வேளாண்மையும் படிக்க ஆசைபடுகிறேன்.

நான் : சரிமா நான் படிக்கிறேன் இப்ப பசிக்குது
சோறு போடுமா.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
உயர்வுக்கு படிப்பு // உணவுக்கு விவசாயம் .

குறிப்பு:
பஞ்சம் - உணவுப் பற்றாக்குறை
👇
பசி - உணர்வு ( உணவு தேவை )
👇
பட்டினி - பலநாள் பசியின் நிலை
👇
பட்டினிச் சாவு
இது எதும் வராமல் நாம் அனைவரும் பட்டினி இல்லாத பயணிப்போம்.

குறள்:
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்"
பொருள்:
யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே யாவர்

உழவர்களுக்கு
மாடுகளுக்கு
நீருக்கு
மண்ணிற்கு
காற்றுக்கு
இவை அனைத்தும் பரிசளித்த
உணவிற்கு
என் நன்றியை தெரிவுத்துக் கொள்கிறன்.

© hmkpadi