...

18 views

அவள் தான் வேண்டும்!


டேய் நித்தீஸ் ...முழுசா முப்பது வயசு முடிஞ்சாச்சு....இன்னும் இப்படியே இருந்தா எப்படிடா...??_ நீர் கோதிய விழிகளோடு அவன் நாடியை பிடித்துத் தன் பக்கமாய்த் திருப்பினாள் தாய் ஸ்டெல்லா.

ஏறிட்டுப் பாராமலே இமைகளைக்
கவிழ்த்தப்படி ,உதட்டில் வெற்றுப் புன்னகையைக் காட்டினான் ... ! அதனூடே அவன் இதயம் கனத்துத் துடிப்பதை உணர முடிந்தது அவளால்...!

ஏண்டா...உனக்கு நான் எத்தனை முறை சொல்லிட்டேன்....எவளையாவது மனசில வச்சிரிக்கியா....? சொல்லுடா....?_ தோளில் கை வைத்து உலுக்கினாள்.

அது....வந்து....அப்படில்லாம் இல்லமா...._
ஏதோ இருக்குமா என்று கேட்டது அவ்வார்த்தைகள் அவளுக்கு.

இங்கப் பாருடா.. ...முப்பத்தைந்து வருசத்திற்கு முன்பே உங்கப்பாவும் நானும் சாதியையோ மதத்தையோ பார்க்காம காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்....
யாருக்கும் அது பிடிக்கல .
எங்க அம்மா தற்கொலை பண்ணிக்குவேன்னு கத்தினாங்க.......! அவுங்க அப்பா ...அதான் என் மாமனார் என்னை நேரிலேயே வந்து கொன்னுடுவேன்னு ரொம்பவே மெரட்டிட்டுப் போனாரு ....!
அதைப் பற்றியெல்லாம் நாங்க கவலையே படல....

யாருக்கும் தெரியாம சென்னைக்கு வந்து...உன்னையும் பெத்து....நாங்க நல்லா வாழலையா என்ன..?_

சொல்லுடா உன் மனசில காதல் இருக்குன்னு எனக்குத் தெரியுது... அது யாராக இருந்தாலும் பரவாயில்ல. சொல்லு ...இன்னைக்கே போய் கேட்டு முடித்திடுவோம்....
அவுங்க வீட்ல தர மறுத்தா கூட்டிட்டு வாடா....நாம மகளா பார்த்துக்குவோம்...._ அன்பு தெரித்தது அமைதியான அந்த வார்த்தைகளில் இருந்த...