...

11 views

சோழத்து நாயகன்
அம்மா அம்மா மா மா மா . என்ன பாப்பா. சும்மா நச நச னு பண்ணுற அதுக்கு தான் உன்ன எங்கையும் கூட்டிட்டு வரதுயில்ல. என்ன மா நீ. நீ தானா
சொன்னா பாட்டி வீட்டுக்கு போறப்பா பெரிய கோவிலுக்கு கூட்டிட்டு போறேனு. இப்ப தானா வந்த இருக்கோம். நாளைக்கு போகலாம்.. பிளஸ் மா.. பாட்டி சொல்லு பாட்டி.. கூட்டிட்டு போமா... சரி கிளம்பு.
   ப்பா எவ்வளவு பெரிய கோவில்.. வா மா சீக்கிரம் உள்ள போகலாம்.. இரு பிரியா.... ஹே ஏன் பின்னாடி போற என் height கு கோவில் full ah தெரில மா.... ப்பா.. அவ்வளவு height.. யாரு மா கட்டினா இந்த கோவில.. யாரு கட்டினா னு தெரியமா தான் போகனும் போகனும் னு குதிச்சியா..
இராஜராஜன் சோழன் கட்டினர்.. அவர் எப்படி இருப்பாரு. எங்க இருப்பாரு இப்ப. அவரு செத்து எத்தன வருசம் ஆச்சே யாருக்கு தெரியும். பேசமா வா.. இல்லான வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன்..
         குழந்தாய் என்னை அழைத்தாயா?
அவளின் சின்ன கண்களை அகால விரித்து அந்த ஆறடி உருவத்தை உற்று நோக்கினாள்.. நீங்க யாரு... 23 ஆம் புலிகேசி மாறி இருக்கீங்க.. புலிகேசியா,யார் அவர்.. அவர தெரியாத. புலிகேசி உங்கள மாறி பெரிய கத்தி, வாள் உங்கள மாறி செயின் எல்லாம் போட்டு இருப்பாரு ஆனா மீசை u மாறி வலைஞ்சு இருக்கும்..
  நீ யாரை சொல்கிறாய் என்று தெரியவில்லை குழந்தாய்.
      நான் இக்கோவிலை கட்ட முன்மொழிந்தவன். அருண்மொழிவர்மன்
என்கிற இராஜராஜசோழன்.
நீங்க பேய் தானா அப்ப.. நீ தானா குழந்தாய் என்னை அழைத்தாய். யார் அங்கே குதிரையை வண்டியில் புட்டுங்கள். நம் படை கிளம்பட்டும்.. அய்யோ சொல்லிட்டு போங்க தாத்தா.. அக்கயல் விழி கண்களால் கொஞ்சினாள்..
   Hahaha பெரு குழந்தை சொல்லுகிறேன். இந்த கோவில் ரொம்ப பெருசுல. ஆமா.. சூப்பர் தாத்தா கொஞ்சம் குனிங்க. ஏன்? சொல்றேன் குனிங்க.. அக்குழந்தை மன்னரின் கன்னத்தில் முத்தம் கொடுத்தது. இந்த கோவில கட்டுனதுக்கு என் gift. மன்னரின் கண்கள் கலங்கியது ஏன் தாத்தா அழுகுறீங்க.. ஒன்னுமில்லை உன்னை பார்த்தால் என் மகள் நினைவுகள் வந்துவிட்டது..
     என் கையை பிடித்து கொள் கோவிலை பற்றி சொல்கிறேன். ஏய் பிரியா எங்க போற இருங்க மா வரேன். பாத்து போ. வீரர்களே யாரும் என் பின்னால் வரவேண்டாம். என் கோவிலுக்குள்ள எனக்கு ஏன் பாதுகாப்பு. எல்லாரும் சிவனை தரிசனம் செய்யுங்கள்.. தென்னாடுடைய சிவனே போற்றி..
     இவ்வளவு உயரம்.. 7பனை மரம்.. ஒரு பனை மரம் னா என்ன height. இருங்க தாத்தா கூகிள் பண்ணிக்கிறேன்... கூகிள் அப்படினா. இதுல தேடுனா எல்லாம் கிடைக்கும்... ஆத்தி என்ன height ப்பா... இப்படி இத கட்டுனீங்க... இரு சொல்கிறேன். இந்த இடத்தில் ஒரு யானை இறந்து விட்டது.. யானையா எங்க வந்து ஏன் செத்துச்சு. இது சேர தேசத்து யானை. சேர தேசத்து அந்தணன் ரவிதாஸ்சனின் மகன் ஏவி விட்ட யானை.. அதனால் தான் இரண்டாம் கோபுரத்திற்கும், முதல் கோபுரத்திற்கும் அவ்வளவு இடைவெளி. யாரு ரவிதாஸ்சன் தாத்தா. உனக்கு கோவிலை பற்றி தெரிய வேண்டுமா அல்ல. ரவிதாஸ்சனை பற்றி தெரிய வேண்டுமா... கோவிலை பத்தி தான்..16000 அடிமை வீரர்கள் நான்கு பக்கத்திலும் வரவழைக்கப்பட்டு,பெருத்தச்சர்கள்,தேவரடியர்கள்,அந்தணர்கள்,காவல் வீரர்கள்,கருமார்கள் என்று ஒட்டுமெத்த சோழ தேசமே கட்டுய கோவில்... நா வேறும் வழிகாட்டி... அந்த அந்த மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு சீரமைப்பு செய்து கொண்டானர்.
      அவ்வளவு உயரம் தாத்தா.. 7 பனை மர உயரம். அப்ப அஸ்திவாரம் strong அஹ போடனுமே தாத்தா. உனக்கு எப்படி அது எல்லாம் தெரியும்... எங்க அப்பா சிவில் engineer.. அப்படி னா.. உங்கள மாறி வீடு கட்ட மேற்பார்வை பாக்குறவங்க... சரி கேளு.
     அரை பனை மரம் ஆழத்துக்கு அஸ்திவாரம். என்னது அரை பனை மரம் தானா. ஆம் அவ்வளவு தான். மூன்று உள்ளங்கை அகலமும்,ஒரு உள்ளங்கை உயரமுள்ள செங்கற்களால் கட்டப்பட்ட 3 மாளிகை வைத்து கொள் உதரணத்திற்கு. மாளிகைக்கு நடுவே பிரம்மஸ்தானத்தில் திறந்த முற்றம் அமைத்து முற்றத்திற்கு நடுவே பீடம். பீடத்திற்கு மேல் ஆவுடையார். ஆவுடையார் னா என்ன தாத்தா. சிவலிங்கம். ப்பா சுப்பர்.
      இத எல்லாம் எப்படி கட்டுனீங்க.. எல்லாம் சிவனின் மகிமை. இது என்ன கல்லு கிரானைட் அஹ.. எப்படினா???எல்லாம் கருங்கற்கள். இது கற்றளி கோவில். எவ்வளவு வருசம் ஆச்சு தாத்தா. 7 வருசம்.. 7பனை மரம் உயரம் னு சொல்றீங்க எப்படி கல்ல மேல தூக்கிட்டு போனீங்க கிரேன் வச்சியா. அப்படினா. யானைகள் வைத்து மேலே கொண்டு சொல்லப்பட்டது. சோழத் யானைகள் அவ்வளவு வலிமையுடையது கர்வத்துடன் மீசையை திருத்திக்கொண்டார்.. செம்ம தாத்தா...
          எவ்வளவு பெருட்செலவு, எவ்வளவு உயிர் பலி, எத்தனை வீரர்களின் உழைப்பு ஆனால் இந்த கோவில் ராசி இல்லை என்றும். இங்கு வந்தால் தலைவர்கள் பதிவி போயி விடுகிறது என்று சொல்கிறார்கள். நீயே சொல் குழந்தாய்.
அவர்கள் ஏதே தவறு செய்ததுதனால் தானே சிவன் தண்டனை குடுத்துயுள்ளார்.. அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று யாருக்கு தெரியும். ஆனால் பழி என் மீதும் என் கோவில் மீதும்...
       பிரியா வா போலாம். சரி தாத்தா.. உங்க கிட்ட நிறைய பேசனும் உங்க what's app நம்பர் குடுங்க.. அப்படி என்றால்.. நீ என்னை காண வேண்டுமென்றால் பிரம்மராயரிடம் சொல்லு இல்லாவிட்டால் அரண்மனைக்கு வந்துவிடு உனக்கு சோழத்தின் அழகையும், சோழத்தின் அருமையும் எடுத்துரைக்கிறேன்.
    OK I try my level best தாத்தா அம்மா திட்டுவாங்க. இது என்ன மொழி சமஸ்கிருதம் மா? இல்ல English.. பிரியா..... வா.... வந்துட்டேன் மா.. வரேன் தாத்தா..
குழந்தாய் Feb 2020 கும்பாபிஷேகம் வந்துவிடு.. சரி தாத்தா..
     தென்னாடுடைய சிவனே போற்றி.சோழம் சோழம் சோழம்..


(பெரிய கோவிலை பற்றி குறிப்புகள் உண்மை.. பாலகுமாரன் எழுதிய உடையார் இக்கதையின் தாக்கம்)