...

9 views

கொழுக்குமலை ரகசியம் [எ] நீலிமாவின் வேட்டை - விண்மீன் ரசிகன்
21+ Adult content novel.
எளிய மனம் படைத்தவர்கள் இக்கதையை வாசிக்க வேண்டாம்...
Tamizh Erotic Adventure novel...

கொழுக்குமலை ரகசியம் : நீலியின் வேட்டை

அத்தியாயம் 1 :  நீலிமாவின் வேட்டை ஆரம்பம் !
2023 டிசம்பர் 30,

அதிகாலை 7 மணி....
போடிநாயக்கனூர்....

போடிநாயக்கனூரில் இருந்து
போடி மெட்டு   செல்லும் சாலையில் 
வெள்ளைநிறத்து  Luxury
கார் ஒன்று சூரியநெல்லி கிராம பஞ்சாயித்து பகுதிநோக்கி சீறிபாய்ந்து சென்று கொண்டிருந்தது.....


மேற்கு தொடர்ச்சி
மலைப் பிரதேசத்தின் வனப்பு அதீதமாய் குளிர்ந்து,
பனிப்பொழிவினாலும்
மழைச்சாரலினாலும் சில்லிட்டு இருந்தது...


வளைவு நெளிவாய் சென்ற சாலையெங்கும் நீர்தடாகங்களின் சுவடுகள், சிறுச்சிறு பள்ளங்களில் தேங்கிய வண்ணம் அணிவகுத்து தொடர்ந்து இருந்ததை   வாகனங்களில்  வந்தவர்கள் ரசித்த வண்ணம் கடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

காலை நேரக்குளிருக்கு இதமாக தேநீர் அருந்த வேண்டும் என்ற மனநிலையில் அனைவரும் இருந்தனர்..


காருக்குள் மொத்தம் அறுவர் இருந்தனர்..

காரினில் இருந்து மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட குழுவினர் இறங்கினார்கள்..
அவர்களது கார் போடிமெட்டின் எல்லைப் பகுதியினில்  இருந்த டீக்கடையின் முன்பு  வந்து நின்றிருந்தது.



ஆறு பேரும் கேசுவல்ஸ் ட்ரெஸ் கோட் உடன் ஸ்வெட்டர் சகிதம் ஆக   கருப்பு நிறத்தினில் கூலிங் கிளாஸ் அணிந்து காண்போரை கவரும் வண்ணத்தில் இருந்தனர்..



காரை  ஸ்டைலாக   ஓட்டி வந்து கடை முன்பு பார்க் செய்தவனின்  பெயர் தமிழ்வாணன்.
வயது 31 , இன்னமும் திருமணம்  ஆகவில்லை..
பார்ப்பதற்கு காவல் துறை அதிகாரிக்கான உடல்வாகுடன் ஆளுமையுடன் இருப்பவன்...
மெக்கானிக்கல் இன்ஞ்சினியர்..
டிகிரிக்கு பின்னே கிரிமினாலஜி முடித்து விட்டு  சொந்தமாக சென்னையில்
"Behind the secret " எனும் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருகின்றான்..

இதுவரை 50 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வினை நோக்கி நகர்ந்து மக்களின் நன்மதிப்பினை பெற்றிருப்பவன்..
அவனுடன் முன்  சீட்டில் அமர்ந்து வந்தவள்  ராதிகா !
 வயது 27
மாநிறத்தழகி ...
காண்போரை ரெண்டு நிமிடம் உற்று பார்க்க வைத்து ரசிக்க செய்யும் அழகி..
" WanderLust Radhika " என்கிற
You tube channel ன் நிறுவன அதிகாரியாக இருக்கின்றாள்.
மாதத்திற்கு 20 லவ் புரோப்போஸல்கள் வந்தாலும்  அதனை கண்டு கொள்ளாமல் தனது போக்கில் இயங்குபவள்..

மற்ற இரு சோடிகள் பெயர் முறையே வினையன்,  சரிதா மற்றும் குமரேசன் , மோகனப்பிரியா ..


வினையன் : கோயம்புத்தூரில் Visualcon  நிறுவனத்தின் dth service டீலர்சிப் எடுத்து நடத்தி வருகின்றான்..
வயது 29..
தமிழ் நடிகர் ஜீவாவின் சாயலில் வசிகரமாக பேசக்கூடியவன்..
காண்போரிடம் எல்லாம் தான் ஒரு பிளைபாய் என்பதை பதியவைக்க அதிகமாக மெனக்கெடுபவன்..

சரிதா : வயது 28
பரிபூரணமான பெண்...
ஏற்கனவே திருமணமாகி பின்பு நிகழ்ந்த பிரிவிற்கு பின்பு தனியாக வாழ்பவள்...
எவர் ஒருவரையும் சார்ந்திருக்காமல் சுயமாக வாழ விரும்பும் மனதிடம் உடையவள்..
பயங்கர Chubby..
பூசினாற்போலே ரசிக்கவைக்கும் அழகி..


குமரேசன் :  வயது 30 
மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் ஆக சென்னையில் உள்ள பிரபல பெய்ண்ட் கம்பெனியில் பணிபுரிபவன்..
பார்ப்பதற்கு அமுல்பேபி போலே குண்டாக இருப்பதால் அனைவருமே அவனுடைய கண்ணத்தை கிள்ளி கொஞ்சி சிறுவயதிலேயே கிண்டல் செய்தது இன்றளவும் தொடர்கின்றது...

மோகனப்பிரியா : 
வயது 34,
பெண்ணுக்கு பெண்ணே பேராசைக்கொள்ளும் அழகியென செந்தமிழ் தேன்மொழியாளாக வலம் வருபவள்..
பெண்களே  நேரினில் பார்த்தால் கட்டி அணைத்து முத்தம் கொடுக்க விரும்பும் வண்ணம் ஈர்க்கவைக்கும் தேகவனப்புடையவள்..
கடைசி வரைக்கும் திருமணம் புரிய மாட்டேன் . எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து தீர்ப்பேன் என்று கங்கனம் கட்டாத கொறையாக வாழ்பவள்...

  

சென்னை ,  கோயம்புத்தூர் என வெவ்வேறு பகுதியினை சேர்ந்த இவர்கள் தமிழகமெங்கும் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சுற்றுலா குழுவினரால் நடத்தப்படும் மலையேற்றப்பயணங்களில் கலந்துகொண்டுஅதில் ஏற்பட்ட சந்திப்பின் மூலம் நட்பானவர்கள்..

அனைவருக்குள்ளும் நிறைய வேற்றுமைகள் இருந்தாலும் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தது இயற்கைதான்.
ஐந்ததினை பிரதேச நிலங்களின் மீதான பேரன்பின் காரணமாய்  ஒருகுடையின் கீழே இணைந்திருப்பதால் யாவரும் ஒற்றுமையாய் பயணிக்கின்றனர்..

தேநீர் கடையின் முன்னே,
தற்போதைய சூழலில் ....

"ஷ்ஷ்ஷ்ப்ப்ப்ப்பாபா ...,
வண்டி ஓட்டாம பின்னால உட்காந்து   வந்ததுக்கே இவ்ளோ கண்ண கட்டுதே ...

எப்டிரா அசால்ட்டா இம்புட்டு தூரம்  மலைப்பாதைல வண்டியை ஓட்டிட்டு வர்றீங்க " என்று  தனது நண்பன்
தமிழ் வாணனிடம் கேட்டாள்...


"மேடம் எப்படி ஒரே ஸ்ட்ரெச்ல சென்னை டூ பாண்டிச்சேரி போனீங்களோ அதே மாதிரி தானுங்க நாங்களும் வண்டி ஓட்டுறோம் " என்று கூலாக கிண்டல் செய்தான் வாணன்.

சரிதாவும்,  மோகனப்பிரியா உள்ளிட்ட அனைவரும்
தங்களுக்கு காபி ,Ligh tea ,Lemon tea என ஆடர் கொடுத்து விட்டு தண்ணீர் பாட்டிலில் இருந்து ஒரு மிடறு நீர் அருந்தி,
தங்கள் வாயை கொப்பளித்து கொண்டு இருந்தனர்.


சரிதாவின் தன் முகம் கழுவி கொண்டிருக்கும் போது,
முகத்தினில் இருந்த தண்ணீர் துளிகளை அவள் கர்சீப் கொண்டு துடைக்க முனைகையில்,  வினையன் அவள் காதருகே வந்து சொன்ன சேதி கேட்டு குறும்பாக அவனை முதுகினில் சடாரென்று  அடித்து "பொறுக்கி" என செல்லமாக திட்டினாள்..


மோகனப்பிரியா "அப்டி என்னடி  சொன்னான் உங்கிட்ட" என்று ஆர்வமிகுதியில்  கேட்டாள்..


சரிதா அவள் காதருகே வந்து 

"உன் முகமெல்லாம் இருக்குற தண்ணீர் துளியை சாரி பனித்துளியை கர்ச்சீஃபால துடைக்க வேணாமே.  எனக்கு தாகமா இருக்கு.  நா முத்தம் கொடுத்து தேன் துளிகளை சுவைத்து கொள்ளவா  ன்னு அநியாயத்துக்கு உருட்டுறான்டி,  அதான் காண்டாகிட்டேன்" என கூறினாள்.


இவர்கள் தங்களுக்கு தேவையான ஸ்நாக்ஸ்களை வாங்கி வைத்து கொண்டு கிளம்ப தயாராக இருக்கும் சூழலில், 


குமரேசன்  மட்டும் வண்டியை நிறுத்தி விட்டு டீக்கடைக்கு பின்னே இருக்கும் ரெஸ்ட் ரூம் பக்கம் போய் தனது அலைப்பேசியினில் " holy Evil" எனும் பெயரில் சேவ் செய்ப்பட்டிருந்த எண்ணுக்கு அழைத்து பேச துவங்கினான்...

"தலைவியே   நாங்க  எல்லாருமே இப்ப தா போடி மெட்டு வந்துசேந்தோம்..  
இன்னும் ஒரு மணி நேரத்தில  பாப்பாத்திச்சோலை ரீச் ஆகிருவோம்..


அங்க இருந்து நீலிமா மாளிகைக்கு ரீச் ஆகிருவோம்.

அடிக்கடி  இன்பர்மேசன் அப்டேட் பண்றேன் " என கூறினான் ..

எதிர்முனையில்,  " சொன்னது ஞாபகம் இருக்கட்டும். கவனமா இருடா " என்று இனிமையான மயக்கும் பெண்ணின் குரல் கேட்டது. 


மனசெல்லாம் ஒரு  வித மகிழ்ச்சி நிரம்பி இருக்க, முகத்தினில் தேஜசோடு மீண்டும் தனது வாகனத்தருகே வந்தான் குமரேசன் ...

அவர்கள் இருந்த பகுதியில் காகங்கள் அதிகமாக சத்தம் கொடுத்த வண்ணம் பறந்து கொண்டே இருந்தன.....
கார்மேகங்கள் சூழ்ந்து மழையும் அற்ற வெயிலும் அற்ற ஒரு வித அமானுசிய சூழலை அங்கே விதைத்திருந்தது..


ரகசியம் தொடரும்...
#விண்மீன் ரசிகன்..
© sathyasanjeevi