...

5 views

பரம்பரை சொத்து !
ஒரு பெரிய
மனிதருக்கு இரண்டு
பிள்ளைகள் !

ஒருவனை ,
மிலிட்டரிக்கு
அனுப்பிவிட்டார் !

ஒருத்திக்கு ,
திருமணம் முடித்து விட்டார் !

அவரோ ,

வீடுவீடாக ஓட்டுக் கேட்ப்பவர்களோடு சேர்ந்து ,

ஓட்டு கேட்டு ,
பொழுதுபோக்கினார் !


காலம் கடந்தது !


லீவுக்கு மிலிட்டரி பையன் ,வீட்டுக்கு வந்தான் !

பெண்ணும் ,

வயிற்றில் குழந்தையோடு பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்தாள் !

அவரோ ,

பையனுக்குப் பெண் பார்த்துத் திருமணம்

முடித்துக் கையோடு காலமாகிவிட்டார் !


சில காலம் போனது !


மிலிட்டரி அப்பாவாகி விட்டான் !

அவன் தங்கையோ ,

என் பொண்ணுக்கு , உன் பையனைக் கல்யாணம் பண்ணிக் கொடு ,
என்றாள் !

இளசுகளுக்கு இது முற்றிலும்
பிடிக்கவில்லை !

எனவே ,

அவரவர் பணிகளை செய்து கொண்டிருந்தனர் !

ஒரு நாள் ,

வேலை செய்யும் இடத்தில் ,

ஒருவன் தன்னை தொந்தரவு செய்வதாக ,

தாய்மாமன் மிலிட்டரியின் பையனை , உதவிக்கு அழைத்தாள் !

அவனும் தன் அத்தை மகளைத் , தொந்தரவு

செய்தவனைக் கண்டு ,கண்டித்தான் !

பிறகு ,

அவள் உதவி கேட்டதும் ,

இவன் உதவுவதுமாக ,

நாட்கள் நகர்ந்தது !

இது ,

காதலில் முடிந்து விட ,
இருவரும் திருமண

பந்தத்தில்
இணைந்தார்கள் !

இவர்களுக்கு ஒரு மகன்
பிறந்தான் !

அவன் ,

அவனுடைய தாத்தாவுடைய
அப்பாவைப் போலவே ,

ஓட்டு கேட்ப்பவர்களோடு பொழுது கழிக்கத்
தொடங்கி ,

முன்னோர் செய்த

புண்ணியத்தால் ,

ஒரு ,

பிரபலமானக் கட்சியின்
சார்பில் ,

போட்டியிட்டு வென்று ,

சட்டசபைக்கு போனான் !

முதல் நாள்,

முதல் கோப்பில் ,


---- புண்ணியக் கோடி-என

முதல் கையெழுத்தை
இட்டான் !

வாழ்க்கையை வாழ காசோ புகழோ தேவையில்லை !

குணமும் ,

நான்கு நல்ல சனமும் இருந்தால் ,

போதும் !

இதோடு கதையை-முடிக்கிறேன் !

© s lucas