...

0 views

01) காதல் கரை சேர்த்தது💝
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக


என்று அவ்வீட்டில் இருந்து மென்மையான குரல் ஒன்று பாடவும், இதை தாலாட்டு போல் கேட்டுக் கொண்டு உறங்கி கொண்டிருந்தாள் நம் நாயகி 'அக்ஷரா'. வயது 27. பிடிவாதம் அதிகம். ஆனால், இப்போதெல்லாம் அவ்வளவாக பிடிவாதம் பிடிப்பதில்லை. ஏற்கனவே அவளது பிடிவாதத்தினால் ஒரு உயிர் பிரிந்து விட்டதே என்ற கவலை அவளுக்கு. Cardiologist ஆக பணிபுரிகிறாள். ஒரு உயிரை இழந்தவர்களுக்கு மட்டுமே உயிரின் அருமை புரியும்.. தனது உயிர் தோழியின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருப்பவள். அதனால் தான் இவள் மருத்துவத்தை தேர்ந்தெடுத்ததே.. ஒரு உயிரை காக்க தன் உயிரை கூட இழக்க துனிபவள்...




கந்த சஷ்டி கவசம் இவளது உறக்கத்தை மேலும் அதிகப்படுத்தியதே தவிற குறைக்கவில்ல. நிம்மதியான உறக்கத்தை தழுவி இருந்தாள்.


பக்கத்து அறையில் இருந்து "அம்மாஆஆஆஆஆஆஆ" என்ற சத்தம் காதை கிழிக்க, கந்த சஷ்டிக்கு எழாதவள், இப்போது எழுந்தமர்ந்தாள்.



அக்ஷரா : என்ன டா வேணும் உனக்கு?? என்று சலித்துக் கொண்டு இவள் கேட்கவும், பக்கத்து அறையில் கத்தியவன் "ஆருஉஉஉஉ.. இங்க வாயேன்... இங்க ஒரு விசித்திர ஜந்து இருக்கு" என்று கத்தினான்..



அவனால் ஆரு என்று அழைக்கப்பட்ட அக்ஷரா அவனது அறைக்கு சென்று பார்த்தாள். அங்கு, இவன் கத்தியது கூட கேட்காமல் உறங்கி கொண்டிருந்தாள் 'Bella'. அவ்வளவு தான்.. அக்ஷரா பத்திரகாளி ஆகி விட்டாள்.



அக்ஷரா : என்ன தைரியம் இருந்தா, என்னோட Bellaவ நீ விசித்திர ஜந்துன்னு சொல்லுவ?? என்று கேட்டவள், அவனை போட்டு புரட்டி எடுக்க, அண்ணனுக்கும் தங்கைக்கும் குடுமி பிடி சண்டை நடக்க ஆரம்பித்தது.



இவர்களின் சண்டைக்கு காரணமான Bella எனும் நாய், இருவரையும் பார்த்து குரைத்தது..


அக்ஷரா Bellaவை திரும்பி பார்க்க, அதுவோ இவளை வந்து அனைத்துக் கொண்டது... ஆக, அவள் சண்டையிட்டது இந்த நாய்க்காக தான்.


ரோஷன் (ஆரு அண்ணா) : இந்த சுண்டக்காகாகவா என்னோட முடிய எல்லாம் பிச்சு போட்ட..


அக்ஷரா : இதுக்கு பேர் Bella.. வேற எதாச்சும் சொல்லி கூப்ட.. நான் கடுப்பாயிருவேன் பாத்துக்கோ.. என்று திட்டு விட்டு, Bellaவை தூக்கி கொண்டு செல்ல, Bella ரோஷனை கேவலமான லுக் விட்டு சென்றது..



அவனது அறையை விட்டு வெளியே வந்து பார்த்தால், ஒட்டு மொத்த குடும்பமும் வெளியே தான் நின்று கொண்டிருந்தது.


ஆரு : ஹிஹிஹி.. நான் இல்ல.. அவன் தான்.. என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.


அக்ஷயா (ஆருவோட twin sister) : இத செஞ்சது ரோஷனா???? என்று கேட்டவள், அவளது phoneஐ எடுத்து காண்பித்தாள்.


ஆரு : இதுவா.. நான் உன்னோட room க்கு வந்தேனா.. அங்க ஒரு towel பாக்க அழகா இருந்துச்சு. அதான் எடுத்து பாத்தேன். அப்போ தான் உன்னோட phone கீழ விழுந்திருச்சு.. அசடு வழிய கூறினாள்...



அச்சு (அக்ஷயாவை சுறுக்கி அச்சு) : ப்ச்ச்ச்.. ஆரு... உன்ன‌அஅஅஅ... இந்த phoneஅ எதுக்கு டி ஒடச்ச?? கடுப்பாகி கத்தினாள்.


ஆரு : நான் என்ன வேணும்னேவா ஒடச்சேன்‌. தெரியாம கீழ விழுந்துருச்சு டி..



அச்சு : தெரியாம கீழ விழுந்துருச்சுன்னு சொல்லி, உன்னோட scootyஅ ஒடச்சா நீ ஒத்துப்பியா??


ஆரு : அதெப்டி.. scootyஅ தொட்ட.. நீ கெட்ட..


அச்சு : உனக்கு எப்டி உன்னோட scootyஓ.. அதே மாதிரி தான் எனக்கு என்னோட phone. எதுக்கு டி ஒடச்ச??


ரோஷன் : காலங்காத்தால எதுக்கு தொல்ல பண்றிங்க. நசநசன்னு.. மனுஷன் நிம்மதியா தூங்க முடியுதா இந்த வீட்டுல.. என்று சலித்துக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான்.


ஆரு : பாரு டா.. நான் இவளோட phoneஅ ஒடச்சுட்டேன்னு என்ன திட்றா.. என்று ரோஷனிடம் புகார் வாசித்தாள்.


ரோஷன் 'அச்சச்சோ.. அவளோட phoneஅ நாம தான ஒடச்சோம். இவ ஒடச்சதா சொல்றா.. ஆடு தானா வந்து தலைய நீட்டுதே... இப்போ நாம தான் அவளோட phoneஅ ஒடச்சோம்னு தெரிஞ்சா அண்ணன்னு கூட பாக்க பாட்டா.. இவளையே மாட்ட வச்சுர வேண்டியது தான்..' என்று மனதினுள் நினைத்துக் கொண்டான்.


ஆரு : என்ன டா யோசிக்குற??


அச்சு : ஆமா.. அம்மா, அப்பா எங்க?? என்று, அங்கு நின்று நின்று கொண்டிருந்தவர்களை தேடிக் கொண்டே கேட்டாள்.


ஆரு : அவங்க அப்பவே போய்ட்டாங்க..



அச்சு : டேய்.. எனக்கு ஒரு ஞாயத்த சொல்லு.. என்று ரோஷனை பிடித்து உலுக்கினாள்.


ரோஷன் : என்ன ஆரு குட்டி.. அவளோட phoneஅ ஒடச்சது தப்புல்ல.. சமத்து புள்ளையா sorry கேட்ரு பாக்கலாம்..


ஆரு : நான் தெரியாம தான் டா ஒடச்சேன்..


அச்சு : இந்த சாரி பூயிலாம் எனக்கு வேண்டாம்.


ஆரு : அப்போ ஓகே.. நான் போறேன்.. என்று செல்ல போணவளை தடுத்தாள் அச்சு.. "எங்க டி போர???"



ஆரு : நீ தான சாரி வேண்டாம்னு சொன்ன.. அதான் நான் என்னோட roomக்கு போறேன்..


அச்சு : ஒழுங்கு மரியாதையா எனக்கு இன்னொரு phone வாங்கி குடுக்குற..



ஆரு : போடி..‌ அதெல்லாம் வாங்கி குடுக்க முடியாது..



அச்சு : எங்க.. அத என்ன பாத்து சொல்லு.. என்னோட கண்ண பாத்து சொல்லு...


ஆரு : உன்னையே பாக்க முடியாது.. இதுல உன்னோட கண்ண வேற பாக்கனுமா.. போடி அங்குட்டு.. வந்துட்டா comedy பண்ண.. நீ வா Bellu குட்டி.. நம்ம போய் dora buji பாக்கலாம்.. இதுங்க எல்லாம் waste.. என்று அச்சுவிடம் ஆரம்பித்து Bellaவிடம் முடித்து விட்டு, தன்னறைக்குள நூழைந்தாள்.



இதை பார்த்த மற்ற இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.




*



காலை பத்து மணி..


தான் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, அந்த மிகப்பெரிய கட்டிடத்துக்குள் நுழைந்தாள் ஒரு இளம் பெண். இருபத்தி ஐந்தில் இருந்து இருபத்தி எட்டிற்குள் இருக்கும். அவள் கழுத்தில் தாளி இல்லையென்பதால், அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். மெதுவாக அடி மேல் அடி வைத்து உள்ளே நுழைந்தவளுக்கு சிறு பதற்றம் இருந்தது. அதே பதற்றத்துடன் receptionistஇடம் சென்று, ஏதோ விசாரித்து விட்டு மின்தூக்கியை (lift) நோக்கி நடந்தாள்.


மின்தூக்கியில் ஏற்கனவே பலர் இருக்க, அவர்களுடன் இவளும் சேர்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில், அவள் வர வேண்டிய தளத்திற்கு வந்ததும் வெளியேறியவள் மலைத்து தான் போனாள். அங்கு முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கோப்புகளை வைத்துக் கொண்டிருக்க, அதை பார்த்தவளுக்கு பதற்றம் இன்னும் அதிகமானது.


"Excuse me mam.. chairல போய் உக்காருங்க.. கூப்டுவாங்க." என்று ஒரு பெண் வந்து கூறவும், இவளும் "Thank you" என்று கூறி விட்டு, ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.



அதே சமயம் இங்கு ஒரு வாலிபன் இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளம் பெண் அலுவலகத்துக்குள் நுழைந்தது முதல் அனைத்தையும் பார்த்தவனின் இதழ்கள் மலர்ந்தது.


"எப்டியும் இந்த பொண்ண தான் select பண்ண போற. அப்றம் எதுக்கு interview?" என்று கேட்டான் இவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவன்.



"டேய் மச்சி, இவள நான் interview வச்சு தான் select பண்ணுவேன். ஏன்னா, இவ அதுக்கு தகுதியானவ தான்.." என்றான் மெச்சுதலாக..



"அதையும் பாக்க தான போறோம்.." என்றவன் கேலியாக சிரித்தான்.



இங்கு இந்த பெண்ணுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை. மனம் அடித்துக் கொண்டே இருந்தது. அவள் எதிர்பார்த்தது போலவே சிறிது நேரத்தில் interview ஆரம்பிக்க, இவள் பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள்.



உள்ளே சென்றவர்கள் அனைவரும் வெற்றி சிரிப்புடன் வெளியே வந்தனர்.
'என்னடா இது.. எல்லாரும் select ஆன மாதிரியே build up குடுக்குறாங்க..' என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.


"இங்க சமீரான்றவங்க யாரு.." என்று ஒரு பெண் வந்து கேட்கவும், இந்த பெண் எழுந்து சென்றாள்.


(எப்டியோ.. 3rd heroine பேரு சொல்லிட்டுன். இவ தான் நம்ம மூனாவது heroine.)



"இந்த room தான்" என்று ஒரு அறையை காட்டி விட்டு அவர் சென்று விட, சமீரா அந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கு இரு ஆண்கள் கம்பீரத்துடன் வீற்றிருக்க, அவர்கள் முன், 'ஆத்விக்' மற்றும் 'ஆதித்யா' என்று பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை இருந்தது.



ஆதித்யா : சமீரா right.. என்று கேட்கவும், இவள் "Yes sir" என்றாள்..


ஆதித்யா : I'm Adhithya.. Take your seat.. என்க, இவளும் அமர்ந்தாள்.



சமீரா : என்னோட file sir.. என்று கூறி, அவள் கையில் இருந்ததை கொடுக்க, அதை வாங்கி table மீது வீசியவன் "Look சமீரா.. நீங்க என்ன படிச்சிருக்கீங்கன்றது கூட தெரியாம நாங்க இங்க உக்காந்துட்டு இல்ல.." என்றான் நக்கலாக..


சமீரா : அப்றம் எதுக்கு sir இந்த interview?? அப்டியே select பண்ணிருக்கலாமே?? என்று கேட்கவும், ஆதித்யாவிற்கு அருகில் அமர்ந்திருந்த ஆத்விக் புன்னகைத்தான்..


ஆதித்யா : 1st testல நீங்க பாஸ் பண்ணிட்டிங்க.. 2nd test போலாமா??


சமீரா தான் திருதிருவென விழித்தாள். இருந்தும் அவனிடம் "ok sir"


ஆதித்யா : நீங்க எதுக்காக interview வந்துருக்கிங்கன்னு தெரியுமா??


சமீரா : தெரியும் sir.. P.A க்கு தான?


ஆதித்யா : ஆமா சமீரா.‌‌.. இவன் தான் உங்களோட MD. என்று ஆத்விக்கை காண்பித்து கூறியவன், தொடர்ந்தான்.. "இவன் ஒரு பக்கம் இருக்கான்.. இன்னொரு பக்கம் office staffs இருக்காங்க. நீங்க ஒருத்தர தான் காப்பாத்த முடியும்னா.. யார காப்பாத்துவிங்க??" என்று கேட்டான்.



சமீரா சிறிது நேரம் யோசித்தாள்.. பிறகு "Sir.. எனக்கு ஒரு doubt.. இத்தன நேரமா யோசிச்சும் ans கிடைக்கல.." என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினாள்.


ஆதித்யா : என்ன doubt சமீரா...


சமீரா : நீங்க, மொத்தமா ஒருத்தர மட்டும் தான் காப்பாத்த முடியும்னு சொன்னிங்களா?? இல்ல A or B காப்பாத்த முடியும்னு சொன்னிங்களா?? என்று கேட்டவளை ஆச்சரியமாக பார்த்தான் ஆதி.


ஆத்விக் : Good சமீரா. You are selected.. என்க, சமீரா அவனை பார்த்து திருதிருவென விழித்தாள்.



ஆதி : நீங்க வெளிய wait பண்ணுங்க சமீரா.. என்று கூறவும், இவள் ஏதோ சந்தேகத்துடன் எழுந்து வெளியே சென்றாள்.



அவள் சென்றதும் ஆதி "எப்டி அவ்ளோ confident ஆ இருந்த?" என்று கேட்டான்.


ஆத்விக் : அவள பத்தி தெரிஞ்சதால தான் அவ்ளோ confident ஆ இருந்தேன்..



ஆதி : அந்த பொண்ண பத்தி உனக்கு என்ன தெரியும்?


ஆத்விக் : அவளுக்கு கேள்வி கேக்குறதுன்றது அல்வா சாப்புட்ர மாதிரி. ஒன்னு சொன்னா, அதுல இருந்து எத்தன கேள்வி கேக்கலாம்னு யோசிக்குற‌ ஒரு அறிவாளி ஜீவன் தான் அவ.. என்றான் புன்னகையுடன்.


ஆதி : வித்தியாசமான உயிரினம் போல..‌ என்றான் நக்கலாக..


ஆத்விக் ஒரு அழைத்து, சமீராவை வர சொன்னான். சமீராவும் உள்ளே நுழைய, ஆதி : you are selected.. என்று கூறவும் "sir.. நான் இன்னும் answer சொல்லவே இல்லையே.." என்றாள் கேட்டாள் சந்தேகத்துடன்.



ஆதி : அதெல்லாம் அப்டி தான். வெள்ளில இருந்து join பண்ணிக்கோங்க.. என்று கூறவும், சமீரா அதே சந்தேகத்துடன்‌ எழுந்து வெளியேறினாள்..


*





© Ashwini