...

0 views

04) வஞ்சம் தீர்க்க வருகிறாள்.
( 04 )

" பேபி " ஜெனி .

" என்ன டி " நிலா .

" உனக்கு ஒ.கே வா டி " ஜெனி .

" ஓ.கே வா னா . எதுக்கு ஓ.கே வா " நிலா .

" அந்த மூனு பேர் கூட போக " ஜெனி .

" ஓகே தான் " நிலா .

" ஓஓஓஓஓ " ஜெனி .

" ஏன் . உனக்கு ஓகே இல்லையா " நிலா .

" அப்டி சொல்ல முடியாது . பட் ஏதோ ஒரு மாதிரி இருக்கு " ஜெனி .

" உனக்கு இருக்கும் " நிலா .

" சொல்றத கேளு பேபி " ஜெனி நிலா பின்னாலையே வந்தாள் .

" என்ன கேளு பேபி . நமக்கு இந்த டைம் மிஷின் செய்யனும் " நிலா .

" நமக்கு இல்ல உனக்கு " ஜெனி .

" ஓ.கே.. எனக்கு " நிலா .


அப்போது உள்ளே நுழைந்தாள் வினிதா .

" என்ன மேடம் . என்ன பேசுறிங்க " வினு .


" எதுவும் பேசல . வா போலாம் "  நிலா .

" பாருடா . மேடம்க்கு கோவம்லாம் வருது " என்ற வினு அவள் பினால் சென்றாள் .

அங்கு நமது நாயகர்கள் மூவரும் நின்றிருந்தனர் . " என்ன ரெடியா மூனு பேரும் " ஜான் .

" ஆங் ரெடி தான் . உங்க பேர சொன்னா நல்லாருக்கும் " ஜெனி .

" ஜான் . "

" சூர்யா "

" விஷ்வா "

"ஓஓஓஓஓ . ஓகே . கெளம்பலாம் . பட் எதுல போறோம் " நிலா .

" உங்க பேர இன்னும் சொல்லல " ஜான் .

" நான் நிலா , இவ ஜெனி , எனும் ஜெனிஃபர் , இவ வினிதா " நிலா .

" ம்ம்ம் ஓகே " சூர்யா .

" நம்ம இப்போ ஒரு வினோதமான வண்டில தான் போக போறோம் " விஷ்வா .

" வினோதமான வண்டியா . அப்டி என்னது அது " வினு .

" அது இது தான் " என்று ஒரு காரை காட்டினான் ஜான் . ( அடப்பாவிகளா . கார் வினோதமான வண்டியாடா உங்களுக்கு ........ 😳😳😳😳😳😳😳 . இது உங்குளுக்கே ஓவரா இல்ல )

" இது என்ன வண்டி " நிலா .

"இதுக்கு பேர் தான் காராம் . " சூர்யா .

" என்னது காராமா " வினு .

" காராமா இல்ல அது கார் " விஷ்வா .

" அதக்கூடவா ஓழுங்கா சொல்லல . " நிலா .

" நாங்களும் உங்க கூட தான் இருக்கோம் . அன்ட் இது அந்த காலத்து வண்டி . இதல தான் நம்ம தாத்தாவோட தாத்தாலாம் போயிருப்பாங்க " ஜான் .


" ஓகே ஓகே " வினு .

ஆறு பேரும் அந்த காரினுள் அமர்ந்தனர் . " இப்போ நம்ம எந்த ஊருக்கு போக போரோம் " வினு .


" தெரியாது " சூர்யா .

" தெரியாதுன்லாமா ஊர் இருக்கு . இன்ட்ரெஸ்டிங் " என்று நிலா கேட்கவும் முறைத்தான் விஷ்வா .

" அப்றம் என்ன . எந்த ஊருக்கு போரோம்னு கேட்டா சொல்லனும் . இது கூடவா தெருஞ்சு வச்சுக்க மாட்டிங்க " நிலா .


" நீ முதல்ல அமைதியா வா " சூர்யா .

" ஏன் . நா ஏன் அமைதியா வரனும் . நா பேசிட்டு தான் வருவேன் " நிலா .

" ரைட்டு மேடமுக்கு பைத்தியம் முத்திடுச்சு " ஜெனி .

" வாட் . இவ பைத்தியமா " விஷ்வா .

" எக்ஸ்க்யூஸ்மீ " நிலா .

" எஸ் . எதாவது வேணுமா " விஷ்வா .

" நா ஒன்னும் பைத்தியம் இல்ல " நிலா .

" அன்ட் நா சும்மா சொன்னேன் " ஜெனி .

" சேம் நிலா . சும்மா தான் சொன்னேன் . டோன்ட் டேக் இட் சீரியஸ் " விஷ்வா .

" ஓகே ஓகே " நிலா .

★★★★★★★★

நிசப்தமான காடு . அந்த காட்டில் உள்ள இலைகள் அங்கும் இங்கும் அசைந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது . கிட்ட தட்ட 100 ஏக்கர் காடு . அந்த காட்டின் நடுவில் ஒரு வீடு . வீடு என்று கூறுவதை விட பங்க்ளா என்றே கூறலாம் . அந்த அளவு பெரியதாக இருந்தது . அப்போது சடசடவென மழை . இப்போது மழை பெய்யும் என்று யாரும் யூகித்திருக்க மாட்டார்கள் . அப்படியொரு மழை . அந்த மழையில் புதைக்கப்பட்டிருந்த அந்த பழைய நகை வெளியே வந்தது . அன்று புதைக்கும் போது எப்படி இருந்ததோ , இப்பொழுதும் அப்படியே தான் இருக்கிறது . அது மட்டுமின்றி உலகத்தை தவிர இந்த காடு மட்டும் இயற்கையாக இருக்கிறது . இதில் மட்டும் தான் இயற்கையான சூரியன் , நிலவு என அனைத்தும் இருக்கிறது . இதை மட்டும் எவராலும் கட்டுப் படுத்த முடியவில்லை . அந்த காட்டின் நடுவில் ஒரு பெரிய வீடு . வீடு என்று கூறுவதை விட பெரிய பங்க்ளா என்று கூறலாம் . பார்க்க பேய் வீடு போல் தான் இருந்தது . அதை பார்த்தாலே தெரிந்தது அந்த வீட்டில் எவரும் இல்லை என்று . அந்த வீட்டின் வெளியே தூசி படிந்து இருந்தது .  அங்குமிங்கும் மரம் வளர்ந்து இருந்தது . அவ்வீட்டின் வாசற்படிக்கு கீழே தான் பழைய நகை புதைக்க பட்டிருந்தது . அதிலுள்ள ஆத்மா ஒருவளின் வரவிற்கு காத்துக் கொண்டிருக்கிறது . யார் அவள் . பார்ப்போம் .



★★★★★★★★★★

" நம்மல அழிக்க அவ வருவாளா அப்பா " ஜீவா .

" தெரியல டா . நம்ம வீட்டு வாரிசுல ஒரு பொண்ணோட ரத்தம் ஒரு துளி அந்த நகைல பட்டாலும் அவ வந்துடுவா " மகேஷ்வரன் .

" அப்பா , என்ன இருந்தாலும் அவர் செஞ்சது தப்புப்பா " ஜீவா .

" தப்புன்னு நம்லுக்கு தெரியுது . ஆனா அவங்களுக்கு தெரியலையே . " மகேஷ்வரன் .

" அப்பா , எனக்கு தான் தங்கச்சியே இல்லையே . அப்போ அவளோட ரத்தம் அந்த நகை மேல படாது இல்ல " ஜீவா .

" இல்லப்பா " மகேஷ்வரன் சிறிது கவளையுடன் கூறினார் .

" என்ன இல்லப்பா " ஜீவா .

" இல்ல டா . உனக்கு ஒரு தங்கச்சி இருக்கா . அவள நாங்க தத்து குடுத்துட்டோம் " மகேஷ்வரன் .

" என்னப்பா சொல்றிங்க . எனக்கு தங்கச்சியா . இது மோசம் . அவள நா பாக்கனும் " ஜீவா .

" இல்ல டா . அவ நம்ம கூட இருந்தா எப்படியும் அவளுக்கு அவள பத்தி தெரிஞ்சுரும் . " மகேஷ்வரன் .

" ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம " என்ற ஜீவா தன்னறைக்குள் நுழைந்து கொண்டான் .


★★★★★★★★

அனைவரும் அவர்கள் வரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர் . " இது தான் நம்ம வர வேண்டிய இடமா " நிலா .

" ஆமா " சூர்யா .

ஆறு பேரும் அந்த காட்டை ஆராய்ந்தனர் . ( ஆமாங்க . அது அந்த நகை புதைக்க பட்ட இடம் தான்  . )  ஆறு பேரின் காலடி அந்த காட்டில் பட்டதும் காற்று பலமாக வீசியது . முன்பே மழை பேய்ந்து ஓய்ந்து இருந்தது . இப்போது மீண்டும் ஆரம்பமாகி விட்டது . கருமேகங்கள் கூட்டமாகியது . மதியமாக இருந்தாலும் இரவு போல் இருட்டி இருந்தது . நிலா சற்றே பயந்து போனாள் . " என்ன பேபி . பயமா இருக்கா . இது நம்ம கவர்ன்மென்டோட வேல தான் . டேக் இட் ஈசி " ஜெனி . ( அவங்களுக்கு தெரியாது . இது அவங்களோட கன்ட்ரோல்ல இல்லன்னு . )

" சரி வாங்க போலாம் " விஷ்வா .

அனைவரும் அந்த பழைய பங்க்ளாவில் தங்கலாம் என்று முடிவு செய்தனர் .

★★★★★★★★★★★★★★



© Ashwini