...

3 views

தணிக்கை


நான் எனது நண்பரது வீட்டு விழாவிற்கு சென்றிருந்தபோது ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார்.

அவரது வேடிக்கையானபேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது.

நானும் அருகில் சென்று கவனித்தேன்.

அவர் சொன்னசெய்திகளையே இங்கு தருகிறேன்.

எங்க புரஃபெஷன் ஒரு பவர்புல்லானது. எங்களால்ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். வேடிக்கைக்காகஎங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன்
கேளுங்கள்.

ராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக்கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற
சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரும்படிக்கு அனுமன் பணிக்கப்
படுகிறான். அனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடித் தேடிசலித்துப்
போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்கொண்டு வருகிறான். லட்சுமணன் பிழைத்துக் கொள்கிறான்.
யுத்தம் முடிகிறது. அனைவரும் அயோத்திக்கு திரும்புகின்றனர்.

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையைகொண்டு வந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார்.

ஆனால் அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது.காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம்:

1. அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு
முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.

2. அனுமன் ஒரு 4th Grade Officer. எனவே அவருக்குவான் வழிப்பயணம் அனுமதி இல்லை.

3. அனுமன் சஞ்சீவ பர்வதத்துடன்
அனுமன் வந்தது excess luggage.
Excess luggage is not allowed.

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப்படுகிறது என்று எழுதிய ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப்படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச்சொல்கிறார்.

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார்.
“எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணித்தேன்.
அதற்குக்கூட பயணப்படி கிடையாதா,’ எனப் புலம்பிய அனுமனைதேற்றிய ராமன், கோப்பில் ‘please re examine ‘ என எழுதிஅரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்கு திருப்பி அனுப்புகிறார்.

கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை
சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.

கவலையுடன் சென்ற அனுமன் ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று
பேசிப்பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை. இறுதியில்
அனுமன்,” இதோ பார் இந்த பயணப்படியை நீ எனக்கு கிடைக்கும்படி
செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்”
எனச் சொன்னவுடன் சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி
உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது.

அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின் பயணப்படி sanctionஆகி அவருக்கு கிடைத்தது. ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் கோப்பைபார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார்.

அந்த clarifications :

1. அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப்பெறா விட்டாலும் தற்போதைய மன்னனாகிய ராமனின் அனுமதியைப்பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது.

2. அனுமன் 4TH GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம் காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கானஅனுமதி அளிக்கப் படுகிறது.

3. அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும்
எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியானபயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப்படுகிறது…”

என்று கதையை நண்பர் சொல்லிக் கொண்டு செல்லகூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.

இது நகைச்சுவையாக இருந்தாலும்
அரசு அலுவலகங்களில், தனியார் நிறுவனங்களிலும் இது நிதர்சனம்.
Company rules தேவைக்கு தகுந்தவாறு வளையும்.





பார்த்ததில் படித்தது
படித்ததில் பிடித்தது
பிடித்ததில் பகிர்ந்தது