...

8 views

மென் காதல் கதை ((2))




மலர் யாருங்க போஸ்ட் வந்திருக்கு
வந்து கையெழுத்து போட்டு
வாங்கிக்கங்க வாங்க
என்றார் போஸ்ட் மேன்.....

மலர் என்று அழைத்ததும்
ஓடி வந்தாள்....
மூச்சுக் காற்று தீண்டத்
தீண்ட வாங்கிக் கொண்டாள்
அழைப்பிதழை.....

பிரித்துப் பார்த்ததும்
அவளது விழிகள் தேடியது
அவனின் பெயரை மட்டும்
தான்.....
ஆமாம் அதில் இருந்தான்
அன்பு அண்ணன் சுடர் என்று....

முத்தமிட்டு மார்போடு
அணைத்தாள்... அணைந்தும்
போனால்...

பெண்ணின் ஏக்கம் அல்லவோ
கொஞ்சம் ஈரம் கோர்த்தெடுத்து
நின்றது .....

என்று எப்போது எங்கே
எப்படி என்று எல்லாம் பார்த்து
முடித்து மடித்து வைத்து காத்திருந்தாள்...

அந்த பொன்னான
நாளுக்காக.....

விரல் விட்டு எண்ண வில்லை அவள்
விழியின்
உதவியால் மனக் கணக்கு
போட்டுக் கொண்டிருந்தாள்....

தீர்ந்து போன நாட்கள்
நின்ற தினமாய் விடிந்தது..
அந்த காலை நேரத்து சூரியனும்
அவளைக் காதல் செய்திட
அழைப்பதை போன்று
புள்ளி மான் போலே ஓடி ஆடி
கிளம்பி முடித்தால்......

பரிசுப் பொருளாக ஓர் வெள்ளிக்
குங்குமச் சிமிழையும்
ஒரு மோதிரமும் வாங்கி
வைத்துக் கொண்டால்.....

அழகான முகம்
அதற்கு நேர்த்தியாய் ஒரு
மஞ்சள் நிற காட்டன் சேலை
சூழ்ந்த பொம்மையாக இருந்தால்....

கொஞ்சம் தூரப் பயணம் என்ற போதும்
களைப்புகள் இல்லா
அழகுடன் திகழ்ந்தது அவள்
உளம்......

பேருந்து நிறுத்தம் வந்து விட்டது
இறங்கியதும் ஆட்டோ அழைத்தால்...

அங்கு போக வேண்டும் இவ்வளவு
பைசா ஆகும் என்று கேட்டு
ஏறி அமர்ந்து கொண்டாள்....
20 நிமிடத்தில் வந்து விட்டது திருமண
மண்டபம்.....

மண்டபத்தின் முகப்பில்
தோழிகளின் புகைப்படம்
பார்த்து ரசித்துக் கொண்டே
உள்ளே சென்றாள்......

வரவேற்பில்
வாங்க வாங்க என்று
வரவேற்பு அளிக்கப்பட்டது
அவளுக்கு....
தலையாட்டி உள்ளே
சென்றாள்

பாட்டுச் சத்தம் நடனம்
என்று கொண்டாட்டத்தில்
இருந்தார்கள் எல்லோரும்....

எப்போதும் போல் அமைதியாக
ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்...

பின் வந்து யாரோ
கண்களை மூடிக் கொண்டு
மலர் என்று
அழைக்க....

துள்ளி எழுந்தால்
ஐயோ அம்மா யார் என்று....
அது ஆணின் குரல் என்றதும்
பயம் ஒட்டிக் கொண்டது.......

அது சுடர் என்று புரிந்து கொண்டால்
அவனின் குரல்
அவளின் இதயப் பேழைக்குள்
என்பதால்......

அவனைப் பார்த்ததும் அழுது
துடித்து போனால்.....
அணைக்க ஆசை இருந்தும்
தள்ளி நின்று கொண்டு ஏன்
இப்படி எல்லாம்....கொஞ்சம்
பயந்து விட்டேன் என்றால்.......

சரி sorry மலர் என்று சொல்லி
அறிமுகம் செய்து வைத்தான்
அவனது அப்பா அம்மா வை....
அம்மா இது ப்ரியாவின் தோழி
மற்றும் எனக்கு பிடித்த பெண்ணும்
கூட என்று......
அம்மா முகத்தில் சிறு சந்தோசம்
தன் மகனின் சொல்லைக் கேட்டு.....

ஆமாம் அவன் முதன் முதலாக
எனக்குப் பிடித்த பெண் என்று
சொன்னதால்....

பல முறை திருமணம் பற்றி
பேசும் போதெல்லாம்
வேண்டாம் விட்டு விடுங்கள்
என்று சொன்னவன்
முதன் முறையாக இப்படி
சொன்னது.....

அம்மாவின் அகம் இருவரின்
முகத்தையும் சேர்த்து வைத்துப்
பார்த்துக் கொண்டிருக்க
சட்டென்று மலர் என்று அழைத்தான்
சுடர்....
சொல்லுங்க சுடர் என்றாள் மலர்...
வாங்க இப்ரியாவை பார்த்து விட்டு
வரலாம் என்று கூறினான்....
சரி போகலாம் என்று சொல்லி
அம்மா நான் பார்த்து வருகின்றேன்
அப்பா கொஞ்ச நேரம் என்று
மலர் போலே மெல்ல மலர்ந்தால்
இருவருக்கும் அவளை மிகவும்
பிடித்து போனது.....
சரி மா போயிட்டு வா என்றார்கள்...

இருவரும்
மேடை நோக்கி சென்றார்கள்....
வரிசையில் நின்று பார்த்துக் கொண்டே
இருந்தார்கள்....
பிரியா மலரைப் பார்த்ததும்
கட்டிப் பிடித்துக் கொண்டாள்...
கொஞ்சம் வெட்கம் கொண்டு
அவளது துணைவனிடம் அறிமுகம்
செய்தால்....
இது மலர் என் தோழி என்று
வணக்கம் சொல்லி வாழ்த்து
கூறினாள்
ஹேப்பி married' life என்று...
சட்டென்று சுடர் photo கிராஃபெரிடம்
boss click pls என்றான்...
அவர் சேர்த்து நில்லுங்கள் கொஞ்சம்
ஒட்டி நில்லுங்கள் என்று சொல்லி
படம் எடுத்து முடித்து ok done sir
என்று சொன்னார்....

மலர் போகலாமா என்றதும் கொஞ்சம்
பொறுங்கள் என்று சொல்லி
வெள்ளிக் குங்கும சிமிழை
பரிசாக கொடுத்தாள்....
மீண்டும் ஒரு புகைப்படம் எடுக்கப்
பட்டது....

மேடை விட்டு கீழே வந்ததும் சரி
சாப்ட்டாச்ச என்று கேட்டதும்
திகைத்து போனாள்....

அவளது அப்பாவின்
பேச்சுத் தோரணம்
இப்படித்தான் இருக்கும்....
இப்பா இன்னும் இல்லை என்று
மனதில் பதில் சொல்லிக் கொண்டு
விழித்தால்

என்ன ஆச்சு என்று சுடர் கேட்டதும்
ஒன்றுமில்லை என்று
சமாளிப்பு செய்தால்....

ம் அப்புறம் வேறென்ன விஷயம்
சொல்லுங்க என்று பேச ஆரம்பித்தான்
சுடர்.....

ஒரு விஷயமும் இல்லை
என்று சொன்னால்.... ஒன்றும்மே இல்லையா
என்று அவன் கேட்டதும்
சொல்லுங்க நீங்க எப்டி இருக்கிங்க
How is your life going என்று வினா
எழுப்பினால்....

Yeah....
I am fine malar endru சொல்லி
சிரித்து கடைக்கண் பார்வை
வீசினான்.....

அழகா இருக்கு என்றான்...
என்னது என்று அவள் கேட்க
பொட்டும் பொட்டு வைத்துக்
😍கொன்ற முகமும் என்றான்.....

மெல்லச் சிரித்து பதில் சொன்னால்
அது அன்று
நீங்கள் கொடுத்தது தான் என்று....

அப்பாவும் அம்மாவும்
கவனித்துக் கொண்டே இருந்தார்கள்
இருவரையும்....

ஆமாம் மலரை அவர்களுக்குப்
பிடித்து விட்டது....
ஈன்றவளுக்கு மட்டும் தானே
தெரியும் தான் பிள்ளையின்
தேவை இது தான் என்று.....

படைத்தவனுக்கு மட்டும்
தானே உயிர் காதலின்
சூத்திரங்கள் விளங்கும்....

இவளுக்கு இவள் இவன்
தான் துணை வினை
பகுதி தொகுதி மீதி என்றும்...

காதல் என்பது இந்த
நொடியில் தான் பூக்கும்
என்று அறிய இயலாது .....

அது சாக வரம் பெற்ற
சக்கர வாகனம் ஆகும்.......

இதயத்தில் ஒட்டிக்
கொண்டான் மலரை

உயிருக்குள் புதைத்துக்
கொண்டால் அவனின்
முகத்தை....

வாங்கிக் கொண்டு
வந்த மோதிரத்தை
சுடருக்கு மலர் கொடுக்க

அவனோ அப் பொட்டின் மேலே
ஓர் இதழ் முத்தம் பதித்து
விருப்பத்தை சொல்லி.........


கொஞ்சம் பிழைகள்
இருக்கும்.....
அவைகள் யாவும் மை கொஞ்சும்
விழிகளுக்கு சொந்தம்😂





© All Rights Reserved