...

4 Reads

ஆயிரம் என்ன
பல்லாயிரம் பல‌ கோடி
ஆசைகள் உண்டு...
அப்படி இருக்கும் கோடி ஆசைகளில்
இவளின் பேராசை ஒன்று......!
கவிஞையாகி விட வேண்டும் என்பது....
ஆம் அடுத்தவர்களின்
புத்தகம் பார்க்கும் போதெல்லாம்
தன் புத்தகம் குறித்த ஓரு கற்பனை அவளுக்கு....!
அதிலும் அப்புத்தகத்தின்
பின்பக்க அட்டையோடு
ஒரு மடித்த இணைப்பு அட்டை இருந்தால்
இன்னும் அழகாக இருக்கும் என எண்ணுகிறாள்....!
அதை விட முக்கியம்
இவளின் எல்லா ஆசைகளைப் போலவும்
எல்லாக் கனவுகளைப் போலவே இதுவும்
வெறும் கனவாகவும் ஆசையாகவும் மட்டும்
காலத்தில் கரைந்து போய் விடக்கூடாது என்று எண்ணி
ஒரு கணம் பெருமூச்சு விட்டுக் கொள்கிறாள்....!

_- தமிழ்நிழல்✍🏾

13/10/23
வெள்ளி
இரவு 10.47 மணி

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #தமிழ்நிழல் #கவிதை #வாழ்க்கை #இன்பம் #மகிழ்ச்சி

இதோ ஒரு கவிதை புத்தகத்தின் இணைப்பட்டை......!☺️