...

8 Reads

தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் கல் மேல் இலங்கு மலை நாட!-மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு.

ஒலி நீர்

214

இனிய ஒலியினையுடைய அருவிநீர் கற்பாறைமேல் இழியா நின்று விளங்கும் மலைநாடனே! பழைய நூல்களில் மாட்சிமைப்பட்ட துணிவு ஒரு சிறிதும் இல்லாதவர்கள் நலங்களில் மாட்சிமைப்பட்ட பொருளினை முயன்று உடையராதல் மாமரமானது காய்ப்புற்று அதனால் தன்மேல் பிறரெறியும் கல்லை ஏற்றுக்கொள்ளுதல் போலும்.

கருத்து: அறிவிலார் பெற்ற செல்வம் அவர்க்கே துன்பத்தினை விளைக்கும்.