...

14 Reads

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம்,-தழங்கு அருவி
வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப!-அது அன்றோ,
நாய் பெற்ற தெங்கம்பழம்.216


முழங்குகின்ற அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்துக்களைக்கொட்டுகின்ற மலையை யுடையவனே!பிறர்க்கீதலும் தான் அடைதலும் முதலியன அறியாதான் கொண்டிருக்கின்ற முழக்குகின்ற முரசினை உடைய செல்வம் நாய்பெற்ற தேங்காயை அஃது ஒக்குமல்லவா?

கருத்து: ஈதல் துய்த்தல் இல்லாதான் பெற்ற மிகுந்த செல்வம் பயனின்றிக் கழியும்