...

14 Reads

காதல் டைரி...!

நீ குளித்த ஈரம்
வியர்வை சொட்ட
கூந்தலில் துவட்டிக் கொள்வேனா!

மை பூசி
கண் வைத்து பேசும்
உந் தன் பார்வை கிடைக்காதா!

வணங்கிச் சுருளும்
நெற்றிமுடியில்
காலை காதல் முத்தம் வைப்பேனா!

குடிலும் நெடிலுமாய்
நீ வைக்கும் பொட்டு
குறியிட்டு குறி வைக்குமோ!

உனது கன்னம் உரசி
கவிதை கொஞ்சும்
காதணியாய் ஆவேனா!

உன் கழுத்துச் சங்கிலி ஏன்
கை தட்டி தள்ளுகிறது
நெஞ்சத்தில் முத்தாட!

மருதாணி பட்டு சிவந்த
இடமெல்லாம்
மறுபடியும் வருடித் தின்பேனா!

உன்னிடை அழகில்
சறுக்கி வீழ்ந்து
இளைப்பாறி அடிபடுவேனா!

என்னோடு கட்டித் தீர பல
கூடைச் சேலை
அடுக்கி கொண்டே சிரிப்பேனா!

என் மீசையில்
உன் வாசம் கதை சொல்லி
முடிவுரை முடிவு நீளாதா!

காதல் டைரி...!