...

10 Reads

தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி, நிகராகச் சென்றாரும் அல்லர்;-இவர் திரை நீத்த நீர்த் தண் சேர்ப்ப!-செய்தது உவவாதார்க்கு

ஈத்ததை எல்லாம் இழவு.

226

பரந்த அலைகள் வெள்ளம்போல் பரக்கும் நீரையுடைய குளிர்ந்த கடல் நாடனே! தம்முடைய சுற்றத்தாராலும் தம்மாலும் ஒருவருக்கு ஓரிடர் வந்து பொருந்தியவிடத்து ஒரு பொருளுதவி அவர் மனமொப்ப ஒழுகினாருமல்லர். (அதுவன்றி) செய்ததைக்கொண்டு மனம் மகிழாதவர்களுக்கு கொடுத்த பொருள்கள் எல்லாம் இழந்த பொருள்களேயாம்.

கருத்து: பெற்றதைக்கொண்டு மனம் உவவாதார்க்குப் பொருள்கொடுத்தல் ஆகாது.