...

8 Reads

காதலில்
காத்திருப்புக்தள் தானே பொதுவாக
காப்பியங்கள் ஆகியது காதலில்
மங்கையர்க்கரசி கருனாகரனுக்கு
தமயந்தி நளனுக்கு சீதை ராமனுக்கு
கண்ணகி கோவலனுக்கு ,ராதை கண்ணணுக்கு
வாசுகி வள்ளுவனுக்கு என காத்திருப்புக்கள்
நீண்டது காதலில் ...
காத்திருக்கும் வரைதான் காதலும்
அழகாக இருந்தது இணைந்த பின்னர்
காதல் பிணைப்பை விடுத்து  பிரிவைத்தானே
தேடியது சீதைக்கு இராவணன்
கண்ணகிக்கு மாதவி
மங்கையர்க்கரசிக்கு மார்த்தாண்டன்
என காதலில் பிரிவுகள் நீண்டது..
காதல் எப்போதும் தொலைவில் தான்
அழகு போலும் அருகில் அதுவும்
வேதனையின்  பிறவடிவம் தான்..
ஆனால் உணர்வுகளை தூண்டி விட்டு
காதல் வென்று விடுகிறது  காதலர்கள்
தான் தோற்று விடுகின்றார்கள்..