...

9 Reads

மரம்போல் வலிய மனத்தாரை முன் நின்று இரந்தார் பெறுவது ஒன்று இல்லை;-குரங்கு ஊசல் வள்ளியின் ஆடும் மலை நாட!-அஃது அன்றோ,

பள்ளியுள் ஐயம் புகல்.

224

குரங்கு வள்ளியில் ஊசல் ஆடும் மலைநாட குரங்குகள் வள்ளிக்கொடியின்கணிருந்து ஊசலாடுகின்ற மலைநாட்டை உடையவனே! மரத்தைப்போல வலிய கன்னெஞ் சுடையாரை. அவர்முன்பு நின்று இரப்பவர் பெறக்கடவதொரு பொருளுமில்லை; அஃது - அவர் முன்பு நின்று இரத்தல் சமணப் பள்ளியுள் இரக்கப்புகுதலை யொக்கும்.

கருத்து: இரக்க முடையாரிடத்துஇரப்பாயாக.