15 Reads
பாரதியார் பிறந்த நாள்...
தமிழ் கவி என்றாலே
இவர் பெயர் தான் நினைவில் வரும்,
அடுப்படி மட்டும் பெண்களுக்கு
அடிமை இல்லை என்று அகிலத்திற்கு
புரிய வைத்து, புதுமை பெண் என்ற
பெயரில் பெண்களை வலம்வர
வைத்த பெருமைக்குரியவர்,
ரௌத்திரம் பழகு என்ற
வார்த்தைகள் மூலம் வீரத்தை
வரவழைத்தவர்,
பட்டங்கள் ஆள்வதும்,சட்டங்கள்
செய்வதும் பாரினில் பெண்கள்
நடத்த வந்தோம் என்றும்,
அச்சமில்லை அச்சமில்லை என்ற
பாடலும், காணி நிலம் வேண்டும்
என்ற பாடலும்,
முண்டாசு கவிஞர் என்ற பெயர்
பெற்று, விழிகளில் கவி வரிகளை
வடித்தெடுத்து வழிகாட்டிய
பாரதியின் பெயரும் புகழும்
நிலைத்திருப்பதால் அவர்
பிறந்தநாளில் அவரின் பரந்த
கருத்துகள் பாரெங்கும்
பறைசாற்றி பெருமை படுகிறது,
@KaviSnehidan
#KaviSnehidan
#WritcoQuote
#bharathiar
Related Quotes
11 Likes
0
Comments
11 Likes
0
Comments