...

11 views

நீ போதும்
சுவாசிக்க எதற்கடி சுதந்திரம்
என் சுவாசம் நீயானா போது

கருவிழிக்குள் எதற்கடி புகைப்படம்
கண்ணெதிரே நீ தோன்றும் போது

மௌனத்திற்கு எதற்கடி மொழிகள்
இரு கண்கள் காதல்கொள்ளும் போது

அன்புக்கு எதற்கடி சங்கிலி
பாதுகாக்க என் இதயம் துடிக்கும் போது

உனக்கு எதற்கடி கைத்தடி
உன்னைத் தாங்க நான் இருக்கும் போது

கண்ணுக்குள் எதற்கடி வியர்வை
என் நெஞ்சத்தில் உதிரம் கொட்டும் போது

எனக்கு எதற்கடி முதுமை
காதலிக்க நேரம் இல்லை என்று நீ தனிமையில் கல்லறையில் உறங்கும் போது...


© கிருபாகரன்