7 views
எற்பாடு வானம்
அலைகள் சிதறி பெருங்கப்பல் நோக்குவதைக் கண்டேன்,
அவ்வலையின் நீர்த்துளிகளின் ஆடலைக் கண்டேன்,
இமயத்தையே வர்ணிக்கும் கார் வெண்மையைக் கண்டேன்,
நீர்வீழ்ச்சியின் பால் மேகங்களைக் கண்டேன்,
இத்தனையும் ஓரண்டத்தின் விளிம்பில் கண்டேன்,
அவை அதன் மையசுழலினுள் புகக் கண்டேன்,
யாவையும் பொன்னிற கரு வெண்மையின் அழகுடைய நீலத்தில் கண்டேன்,
மெதுவாக அசைந்து பாயும் அலைகடலின் தோற்றம் கண்டேன்,
அவற்றுள் சொர்க்கத்தின் வழியையும் கண்டேன்,
நோக்குவது போல் அரியதைக்கண்டு வான்கீழ் மலைப்பாதையைக் கண்டேன்.
© TheSun
Related Stories
6 Likes
0
Comments
6 Likes
0
Comments