...

4 views

வேளாண்மை
கண்ணை தேய்த்து விட்டு கருக்கலில்கரிய இருட்டில் எழும்பி வெள்ளேன வெள்ளாவி வேட்டியை மடித்து கட்டிய படி தலையில் முண்டாசு முடிச்சிட்டு தோளில் தூக்கி போட்டபடி மண் வெட்டி யோடு நடைபோட கூதல் கூவிட்டு இலைகளின் சலசலப்பு கூடிடும் கலகல களுக்கென்று ஓடும் ஓடையில் ஒயிலாய் தவழும் மீன்களும் துள்ளிடும் சத்தமும் நெருங்கி குட்டி குட்டி புற்களின் மேலே மகுடமாய் மொக்குகளும் மீது பனித்துவி வயலில் வரப்பு வெட்டிவிட்டு தோதாக தண்ணீர் பாய்ந்தது பயணம் முடிவுக்கு வந்தது,
வளைந்த பாதைகளில் நெசவு,
சில நேரங்களில் தனியாக, பெரும்பாலும் ஒரு நண்பருடன் தொடரும்...
வணக்கம் 🌼🙏
© Ash(ஈசன் )