...

23 views

எழுத்து
என்
எழுத்து பேசத் தொடங்கியதும்
நான்
அமைதியாகிவிட்டேன்.

அர்த்தமற்ற உளறல்கள்
தேவையில்லை தானே... !

என்
அமைதிக்குள்
எழுத்து பிறக்கிறது...
என்
எழுத்துக்குள்
அமைதி பிறக்கிறது..

இரண்டும்
ஒன்றையொன்று
பிரசவித்துக்கொள்கிறது...

இந்த
அமைதி உலகில்
அர்த்தங்கள்
சொற்களை எறிந்துவிட்டு
நடனமிடுகின்றன....

அதில் நான்
ஆழ்ந்துவிட்டேன்...
கரைந்துவிட்டேன்...

பிறகு எதற்கு
என் தேவையற்ற உளறல்?

© Ilanthamizh ilavarasi
#இளந்தமிழ்இளவரசி #ilanthamizhilavarasi
#poem #WritcoQuote #tamilpost