...

3 views

கண்ணா வருவாயா

ராதையின் காதல் உள்ளம்
கண்ணனுக்குள் வாழுது
மீராவின் காதல் உள்ளம்
பக்தியில் சேருது
கோதையின் காதல் உள்ளம்
மாலையில் இணைந்தது
சீதையின் காதல் உள்ளம்
பார்வையில் கலந்தது
பேதையின் காதல் உள்ளம்
கண்ணனிடம் சேருமோ
கண்ணனைச் சேராமல்
மண்ணுக்குள் மறையுமோ
உணர்வினில் உயிரினில்
உறைந்த கண்ணனோ
உள்ளத்தில் இடமளிக்க மறுப்பதேனோ
கீதையின் நாயகனே
புல்லும் உன் புகழ் பேசுது
உன் நினைவொன்றில் தானே
என் ஜீவன் வாழுது
பல யுகம் கடந்தாலும்
உன் தாரமாவேன்
உன் நாமம் உச்சரித்து
என் ஜீவன் வளர்ப்பேன்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
நீ எந்தன் பதியே
உன்னில் கலந்திருக்கும் என்
ஜீவ நதியே...







© சரவிபி ரோசிசந்திரா