...

2 views

நெற்கதிரவன் குரல்!
தைத்திருநாள் ஆம்!
தை முதல்நாள்
தைத்திருநாள்..
உடலையும் உணர்வுகளையும்
எனுக்காக வருத்தியவனின்
திருநாள்...
மகளின் வளர்ச்சியைச் சற்றும்
இரசித்திடாமல்....என்னையே
இரசித்தவளின் திருநாள்...

நாற்றுவிட்ட நாள்முதல்
திங்கள் எண்ணி எண்ணி...
பசுமை பருவம் வந்ததும் ...
எம்பசுமையில்
பசிமறந்தவரின் திருநாள் !

நான் செம்மையாகி சிலருக்கு !
நான் வெறும் கதிராகி சிலருக்கு!
வறுமை வெறுமை எல்லாம்
எந்தன்
ஒற்றை வளர்ச்சியில் !
வளமை செம்மை எல்லாம்
எந்தன்
ஒற்றை வளர்ச்சியில்!

தைத்திருநாள் திருநாள் தான்
மற்றவரிடத்தில்...
இரசித்தவனிடத்தில்
வளர்த்தவனிடத்தில் ....இலவச அரிசியில் !

(நெற்கதிரவன் கதறிஅழுகிறான்)
எம்மை இரசித்துவளர்த்தவன்
வளர்த்திட மட்டுமே கற்றானோ ?
எம்மை இருசித்திட மறந்தானோ ?
மறக்கவைத்தாரோ ?

© Nuradhaag
#உங்களின்குரல்#மனதின்குரல்
#வரிகளில் வலிகள்