...

9 views

அவன் ஒரு ஆச்சரியக்குறி ❗
ஆண்மகனில் இவன்
ஆச்சரியக்குறி!

அன்பினால் அவளின்
ஆசைகளை அடைக்காமல்
அன்பினால் அவளின்
ஆசைகளை திறப்பவன் !
ஏனெனில்

அவன் ஒரு ஆச்சரியக்குறி!

தலைகுனிந்த அவளின்
அன்னநடை நகைத்து ...

தலைநிமிர்ந்து நில்
உந்தன் கர்வம்!
எந்தன் கவசம் என்பவன்!
ஏனெனில்

அவன் ஒரு ஆச்சரியக்குறி!

புடவை வாங்கி தருபவர்
மத்தியில்.....
புத்தகம் வாங்கி தருபவன்!
ஏனெனில்

அவன் ஒரு ஆச்சரியக்குறி!

முதலிரவுக்கு காத்திருப்பவர்
மத்தியில்... அவளின்
முதல்கனவுக்காக காத்திருப்பவன் !
ஏனெனில்

அவன் ஒரு ஆச்சரியக்குறி!

பிறந்தநாள் மறந்தவன் ஆனால் அவளின்
தேர்வுநாள் மறக்காதவன் !
தேர்வுநாள் வாழ்த்துக்களே!
தேற்றும் வார்த்தைகள்!

ஏனெனில்
அவன் ஒரு ஆச்சரியக்குறி!

வாரம் ஒரு முறை
மட்டும் அல்ல!
மாதம் மூன்றுநாள்
விடுமுறை எடுப்பவன் !

ஏனெனில்
அவன் ஒரு ஆச்சரியக்குறி!

இரவில் அவனின்
பிள்ளையாய் அவள்!
பகலில் அவளின்
பிள்ளையாய் அவன்!
ஏனெனில்

அவன் ஒரு ஆச்சரியக்குறி!

பிள்ளை இரண்டு
ஆனபோதும் அவனின்
மூத்த பிள்ளை
இவள் என்பவன் !

ஏனெனில்
அவன் ஒரு ஆச்சரியக்குறி!

கட்டிலிலும் மட்டும் அல்ல
கனவிலும் அவளின்
பாதி அவன் !
ஏனெனில்

அவன் ஒரு ஆச்சரியக்குறி!

பூமி பார்த்து பேசியவளை
புத்தகம் பார்த்து பேசசொல்லி
இரசிப்பவன் !
ஏனெனில்
அவன் ஒரு ஆச்சரியக்குறி!


£££££££££££££££££

விழியை நேசித்து
விழியோடு பேசி
விழிகள் விரிந்து சிரித்தாள்!
அவனால் அவள்
கனவுகள் நனவானபோது !

#தமிழ்கவி#தமிழ்பக்கம்#தமிழ்வரிகள்#writco
© Nuradhaag