...

10 views

E = mc2
காற்று கதவை மூடுவது
எந்த கைகளை கொண்டு?

இரவையும் பகலையும் வட்டமாய்
காலம் திருப்புவது ஏன்?

அவளும் இவளுமாய்
வந்து போவதால்தான்
வந்து போகிறதா காதல்?

அன்றும் இன்றுமாய்
இருக்கும் என்னிடம்
நாளையும் நேற்றுமாய் அவனா?

வாசலை திறந்து போவது
எந்த உள்ளில் இருந்து
எந்த வெளியை நோக்கி?

எப்படி காணும் வானம்
பறவையின் சிறிய கண்களை?

சிற்பத்தில் மேய்ந்தபடி பேசிக்கொண்டிருக்கும்
எறும்புகளுக்கு யார் சொல்வர்
ஐன்ஸ்டென் சமன்பாடு?

ஓடி ஓடி விழும் அருவிக்குள்
புகையால் கோலமிடுவது யார்?


© sparisan