...

8 views

விடியலின் கனவில்

இரவின் மடியில்
எந்தன் மார்பில்
மழலையாய் உறங்கும்
பதுமையின் முகம்தனில் விழித்து
புதிய விடியலை கண்டேன்..!

முழுமதி முகம்தனில்
என்னவளின்
துயில் களையாமல் எழுகிறேன்

விடியலை
அவள் காணும் முன்னே
மிதமான சூட்டில் தேனீர் எடுத்து
அவளின் உச்சிவகிடில்
சிகை வருடி
செல்லமாய் ஓர் முத்தமிட்டு

எந்தன் செல்லகுழந்தையின் இதழ்களை விரல்களால் வருடி
சிணுங்களில் செல்லமாய் அணைத்து

அவள் துயில் களைத்து
தேனிருடன் அவள் இதழ்களை ருசித்து

அன்புகுறையாமல் அள்ளியெடுத்து
குழந்தையாக மாற்றி

அவளுக்கு தாய்மையாக
அனைத்து பணிவிடைகளும் செய்து

இனியவள் சமைக்கும் அமுதினை
அன்பின் பறிமாற்றத்தில்
அழகாய் சுவைத்து
விடைபெறும் நேரம்
நீங்கா பிரிவினில்

இதயம் படபடக்க
இதழ்கள் துடிதுடிக்க

விழிநீர் கசிவினை மறைத்து
எனக்கு விடைத்தரும்
அன்புமனைவியை கட்டிதூக்கி
உச்சி வகிடிலும் கன்னகுழியிலும்
முத்தமழை பொழிந்து
அன்பு விதையினை
முத்தமாக புதைத்து
காதல் மனைவியின்
காதலில் தொலைகிறேன்
நித்தம் நித்தம்
அழியாத கனவின்
ஆனந்தத்தில்..!

என் காதல் ராட்சசி..!

(இன்னும் சற்று நேரம்
விழிக்காமல் இருந்திருக்கலாம்)
© Manis✒️தனிமைகாதலன்