...

12 views

என் ஏ"காந்தன்
என்னடி நீ
இப்படிச்
செய்கிறாய்
என்று நீ கேட்கும்
அளவில்
உன்னைக்
காதலித்து விழுங்க
வேண்டும் நான்!!!

சந்திர சூரிய
கிரகணம் போலே!!!

என்னடி
உன் கன்னத்தில்
காயம் என்று
நீ கேட்கும்
அளவில் உன்னிடம்
முத்தங்களும்
கடிகளும்,காயங்களும்
வாங்கிக் கொண்டு
சிவக்க வேண்டும் நான்!!!

இரவு நேரத்து பனிப்
பூக்களின் மீது பூத்துக்
கிடக்கும் காதல் பணிகளின்
பாசுரங்"கள் போலே!!!

என்னடி உன்
ரசனை என்று
நீ கேட்கும் அழகில்
உன் மீசை, மற்றும்
நெஞ்சுக் கூந்தலில்
ஓர் கணையாழி செய்து
என் மார்பிலே
அணிந்து வாழ வேண்டும்
நான்!!!

என் மார்புக்கு மத்தியில்
நின் மோக முள்ளின்
சினுங்கள்கள் என்று!!!

என்னடி;!?
எதற்கடி என் காலின்
கட்டை விரலை கேட்கிறாய்
என்று நீ வினவ
கண்ணடித்து
உன் காலின் கட்டை விரலை
என் கன்னங்களில்
உதக்கிக் கொண்டு
ஊற வைத்து
சுவைத்து சொல்ல வேண்டும்!!!

எந்தன்
காதலின் பசியும்
காமத்தின் ருசியும்
நீயல்லவோ என்
"கண்"ணா" என்று!!!

என்னடி
இன்னும் கொஞ்சம்
கொஞ்சடி ....

என்னடி இன்னும்
கெஞ்சல் கொடுக்காதெடி
என்று நீ
கேட்கும் முன்னே
நின் ப(பா)தம் பார்த்து
நான் கொடுத்திட வேண்டும்!!!

என் மச்சங்களின்
புள்ளிகளை!!!

அந்தகாரதில்
சிக்கிக் கொண்டு
தவிக்கும் சிறு
வெளிச்ச கீற்றின்
கீதம் போலே!!!!

நான் சுவைதிட
வேண்டும் நின்
உயிர் நீரின்
சுவைகளையும்!!!!

பாலில்
கலந்திருக்கும்
நீரிணை பிரித்து எடுக்கும்
அன்னம் போலே
நின் காமத்தின்
ருசிக்குள் இருக்கும்
காதல் நான் என்று!!!!

இப் பொல்லாத
காதலால்!!!

பொறுக்க
முடியாத ஆசையால்!!!

பெற்று எடுத்துக்
கொண்ட
உன் பெயரின்
ஓசையால்!!!

தத்தெடுத்த
நம் இதயத்தின்
இசையால்
மட்டுமல்ல

என் விழிகளின்
❤️ ஏ"காந்தன் ❤️ நீ என்பதால்
என்றும் என்றென்றும்!!!!!