...

8 views

இதயம்
இதமான பல
இடிந்த சில
காலம் கொல்லும்
காகிதங்கள் நனையும்
நினைவுகள் பேசும்
உன் சுவாசம் வீசும்
வயதாக கூடும்
இதயம் உன்னை தேடும்
உலகம் மறந்து காதலித்தேன்
என்னை மறந்து
பேதலித்தேன்
பொக்கிஷமாய் உன்னை நினைந்தேன்
பொசுக்கி விட்டு போய்விட்டாய்
கருகி இன்று நானிருக்க
காணாமல் போய்விட்டாய்
காலம் எனும் கடைவிழியில்
வழிகள் இன்றி நிற்கிறேன்
நிற்கதியாய்😔
© கவிஞர் செந்தமிழினி