...

0 views

மாந்தரை மாந்தராய்....
மாந்தரை மாந்தராய்
மதித்திட வேண்டும்
மாற்றான் உணர்வுக்கும்
மதிப்பளித்திட வேண்டும்

வளமான வாழ்க்கை
வறியவருக்கும் வேண்டும்
வறுமையெனும் நோயை
விரட்டியடித்திட வேண்டும்

பாமரன் பசித்தீர
உணவு வேண்டும்
பாரினில் வேற்றுமை
வேரறுத்திட வேண்டும்

சமூகத்தில் சமத்துவம்
நிலைத்திட வேண்டும்
சகோதரத்துவம் ஒன்றிணைந்து
சாதிக்க வேண்டும்

சாதியெனும் தீயை
அணைத்திட வேண்டும்
சாத்திரத்தில் அன்பினை
சரித்திரமாக்கிட வேண்டும்

சகிப்புத்தன்மையில் இளையபாரதம்
இணைந்திட வேண்டும்
சமரசத்தில் தேசம்
சங்கமிக்க வேண்டும்


© சரவிபி ரோசிசந்திரா