...

6 views

மரத்தடியில் நின்ற சுகம்
இனிய வசந்த நினைவுகளை
பழைய நாட்குறிப்பில்..தேட
பழகிய நட்பும்..
பள்ளிக்கூட நாட்களும்
மழைநேரத்து மரத்தினடியில்
நனைந்த சுகமாய்..
தமிழாசிரியர் பாராட்டிய
முதல்கவிதை..
நண்பனிடம் பகிர்ந்த
காதல்...
ஆண்டுவிழா நாடகத்தில்
பெண்வேடத்தில் நடித்தது..!
இன்னும் எவ்வளவோ..
மறக்கமுடியாத..மலரும்
நினைவுகள்..



© SrinivasRaghu