...

17 views

என் ஆளுமையே

என் வரிகளில் உள்ள
வார்த்தைகளுக்கும்
உணர்வுண்டென
உணர்ந்தேன்
என் காதல் சொன்னபோது
உன் முகம் மலர்ந்ததை கண்டு…

என் அன்பு மொழி கேட்டு நீ
ஆனந்தத்தில் துள்ளியதை கண்டு….

உன் முகவாட்டம் கண்டு
நான் ஆறுதல் சொல்கையில்
உன் உள்ளம் தெளிந்து நீ
என்னை அணைத்ததில் இருந்து….

நம் சிறு பிரிவால் நீ
தவித்திருக்கையில் என்
குரல் கேட்டு நீ துள்ளியதில்
இருந்து உணர்ந்தேன் உனக்கு
என் மீதான அன்பை….

நீ துவண்டு நிற்கையில்
நம்பிக்கை வார்த்தைகள்
கூறி உனை தேற்றியபோது….

இவை எல்லாவற்றையும் விட
கோவத்தில் நான் கத்தியதில்
நீ துடித்தபோது……

உணர்ந்தேன் வார்த்தைகளுக்கு
உணர்வு உண்டென…..

என்  விழிகள் உறங்கிட
மறுக்கும் போதெல்லாம்
உறங்க வைக்கிறாய்
முத்த சத்தத்தில்
தாலாட்டி….

ஜன்னலை தீண்டும்
தென்றலாய் மனதை தீண்டி
உயிர் புள்ளிவரை சென்று
எனை ஆள்கிறாய்  என் அன்பே….

உறங்க போகிறேன்
தேடாதே என்கிறாய்
உன் கனவே நான்தான்
என்பதை மறந்து…..

உன் விழிகள் பேசும்
மொழியில் சொல்லிழந்து
செயலிழந்து நிற்கிறேன்
எனை ஆளும் என்
ஆளுமையே…..

நீயின்றி நானில்லையடி….
இன்பமாய் தொலைகிறேன்
உன் அன்பில் ஒவ்வொரு
நாளும் பொழுதும்…..❤️❤️❤️🌹🌹