...

3 views

இனிமேல்....
எனக்காக இரங்குபவர்களே....
போதும் உங்கள் கழிவிரக்கத்தின் பலனாக
நான் பெற்ற பலனெல்லாம்

இனியொருவரும் என்னை
இரங்கி இரங்கிப் பார்க்காதீர்கள்.....
அது ஒன்றுக்கும் உதவாத குப்பை....

இனி எனக்கு உதவ நினைத்தால்
என்னைப் பெருங்கோபத்தோடும்
பெரிய விமர்சனத்தோடும் அணுகுங்கள்...
இதுவே நீங்கள் எனக்குத் தரும் அன்பாகவும்
இருக்கும்....

உங்களின் ஐயோ பாவத்தைத்
தூக்கித் தூர வையுங்கள்.....
அது என்னை வீட்டின் மூலையில்
அமர்த்திவிட்டது...!

என் மீது உங்கள் இரங்கற்பா
வாசிப்பதை இனியேனும் நிறுத்துங்கள்
விழித்துக் கொண்டேன் நான்....

என் பாரத்தை என்னால்
சுமக்க முடிகிற போது
எனக்காக நீங்கள் ஏன் பாரம் சுமக்கிறீர்கள்....!?

உங்களின் பாசத்திற்குத் தலைவணங்குகிறேன்
ஆனால் அதுவே எனக்குத் தளையாகி
விட்டதை அறிவீர்களா ...... நீங்கள்..?

உன்னால் முடியாது விட்டுவிடு
விட்டுவிடு என்று சொல்லாதீர்கள்....

உங்களைப் போல் என்னால்
செய்ய முடியாதுதான்
எல்லாம் செய்ய முடியாதுதான்
ஆனால் எனக்கென்ன முடியுமோ
என்னால் எப்படி முடியுமோ அப்படி
என்னால் அதை அதைச் செய்ய முடியும்....

இங்கு அவனவனுக்கு என்றொரு வாழ்க்கை உள்ளது....

இரண்டு காலால் எழுந்து
தான் நடக்க வேண்டும்...

கையால் தான் ஓவியத்திற்கு வண்ணம் தீட்ட வேண்டும்...
கண்ணால் தான் பார்க்க வேண்டும் என
சுதந்திர இந்தியாவினுடைய அரசியலமைச் சட்டத்தில் அம்பேத்கர் சொல்கிறாரா ....? என்ன...?
இல்லை சட்டப்படி தான் அனைத்தும் நடக்கிறதா என்ன இங்கு ...?

_- தமிழ்நிழல் ✍🏾❤️

#பேசாத_பேச்செல்லாம்
#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை
#தமிழ்நிழல்
© தமிழ்நிழல்