...

16 views

என்னவள்💚💕
நான் தேர்ந்தெடுத்த என் முழு நீள முதல் கவிதை தான் அவள்

ஒவ்வொரு வரியிலும் உணர்வுகளின் ஓசையானாள்

அவளின் சிறு பிழை கூட அழகானது

அடிக்கடி தோன்றும் சினுங்கல்களும் கூட இனிய இசையானது

காது நுனியில் ஒட்டி வந்த மச்சமும்
அதோடு ஆடி அலப்பறை செய்யும் ஜிமிக்கியும் கண்களுக்கு இறையானது

இப்படி படிக்க படிக்க
அடுத்த அடுத்த பத்தியின்
மத்தியில் வரும் சுவாரஸ்யமே
அவளை மெய் திறந்து
மனம் கண்டு படிக்க தூண்டுகிறது

இதோ கையில் காபி கோப்பையுடன்
நாட்கள் முழுதும் அவளது பக்கங்களில்
வாசம் செய்ய நானும் என் நினைவுகளுள் அவளும்..
#அவள்
© narma