...

4 views

எனவே இதனை வாசி !
வட்டு பார்த்து உயர்த்திக்

கட்டிய சுவர் !

அதில்,

சட்டமாய் விட்டவன் எவன்?


வியர்வை விட்டு சிறுக சேர்த்த-

காசு கட்டுக் கரைய-

பார்த்துப் பார்த்துக் கட்டிய

சுவர் !

அதில் ,

பட்டா போட்டது எவன்?


உனக்கு ,

வந்தால் வந்து நின்றுப் பண்ண

என் வீட்டுச் சுவ-ரென்ன

உன் வீட்டுப் புறக்கடையா?

..........x.........

பொறுத்துக் கொள் !

அல்லது ,

அரசைக் கேள் !

...........x.........

அவசரத்திற்க்கு

அடுத்தவன் சுவற்றில்

அசிங்கம் பண்ண

அவிழ்க்கும் போதுக்

குட்டாத மானம் எதற்க்கடா

உதவும் ?

???

முகத்தைத் திருப்பிக்

கொண்டு-

மூக்கைப் பொத்திக் கொண்டு

ஊரார் நடக்கலாம் !

கண்டு கொள்ளாமல் போகலாம் !

ஆனால்,

கதவை மூடிக் கொண்டு

கடையைச் சாத்திக் கொண்டு

நாற்றம் தாளாமல்-

கழுவியும் மாளாமல்-

-வீட்டைவிட்டு

ஓடவா ?


நான்-

அரும்பாடுபட்டுக் கட்டினேன்?


அடேய்,

ஒழுக்கங்கெட்ட ஓட்டைகளா !

உங்களை,

ஆட்டைப் போலப் போட்டு

விடுவான் எமன் !

அதைத் தடுப்பவன் எவன்?


© s lucas