...

3 views

தீராது இந்த நாட்கள்

எவ்வளவோ சூழ்நிலைகளை கண்ட பின்னும் நாட்கள் தரும் வலிகள் நாளொடு நாளாய் குறையவில்லை.எவ்வளவு புன்னகையை கொட்டினாலும் இறுதியில் மனநிலை சரியாய் வந்து வேதனைக்குள் குதித்துக் கொள்கிறது.
மனம் ஒரு மாயாஜாலம் அல்லவா!
எத்தனை முறை விழுந்தாலும் அத்தனை முறையும் ஒரு உத்வேகம் கொடுத்து எழ செய்கிறது. எழுந்தாலும் வலிகளை கொடுத்து விழ செய்கிறது. கனவுகளை யாரிடத்தில் கொட்டி புலம்புவது? கொட்டி புலம்ப இது ஒன்றும் வழக்கமான எதிர் வீட்டுச் சண்டை அல்லவே.....
எவ்வளவோ உடைந்து நொருங்கினாலும் மீண்டும் திடமாய் எழுவதும் ஒரு இன்பம் தானே...
நம்பிக்கை எனும் ஒரு சொல்லில் நம்மை நிலைக்க செய்வதும் ஒரு அதிசயம் தான்......

"எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூப்பூக்கும்...... "



© kavi Seelan