...

1 views

அச்சம் தவிர்


தோல்வி அடைந்தால்
துவண்டு விடாதே!

வெற்றி கிடைக்கும்
விம்மி அழாதே!

வெறுமை கண்டு
விசும்பி நிற்காதே!

விடாமுயற்சி வாழ்க்கையில்
என்றும் பொய்க்காதே!

சோதனையில் வந்தால்
கண்கள் கலங்காதே!

காலம் மாறும்
நம்பிக்கை இழக்காதே!

அதிகார ஆளுமையில்
அடங்கிப் போகாதே

மாயை உலகில்
மனதைக் கெடுக்காதே!

அச்சம் கொண்டால்
வாழ முடியாதே!

துணிவு பெற்றால்
துயரம் கிடையாதே!


© சரவிபி ரோசிசந்திரா