...

9 views

பூலோக ராதை
ராதாவாக இருப்பின் கஷ்டம் கண்டு தானே ஆக வேண்டும் கிருஷ்ணன் வருவான் என்ன இல்லை இந்த பூலோகம் ராதாவும் சீதாவும் தானே விளையாட்டு பொருள் இங்கே இவள் கண்ணம்மா என்ன கூறினாலும். இவள் போராளி அல்லவா தனிமை இரவை நான் கடக்க போராடும் பொழுதும் இவள் கடப்பது என்னையும் வியக்க வைக்கிறது
என்னில் இல்லா மன தைரியம் இவள் இடத்தில் காண்கின்றேன்
இவளிடம் கேட்பது பெருமை தான் இங்கே பெண்ணவள் இல்லை என்னில் ஆடவன் யார் இங்கே மௌனம் சாதித்த பெண்கள் நடுவில் இவள் மௌனம் கூட அழகாய் தெரிய என்ன காரணம் இவள் தான் பூலோக ராதை ஆயிற்றே அந்த வானமும் இவள் வாசம் அந்த நிலவும் இவள் வாசம் அனைத்தும் இவள் வசம்
நானும் இவளிடம் தான் தொலைந்து விட்டேன் அழகா இல்லையே காலம் சென்றால் காணாமல் போகுமே
பெண்ணவள் அழகாய் இருந்தாலும் அவள் மனது என்னும் ஆழி அரியவே வாழ்க்கை வேண்டுமே மனம். புரிய ஆசை கொண்டு இறுதி காலம் வரை அதை ஆராயாமல் ஏற்று கொள்ள கொள்ளை ஆசை கிடைக்குமா வாரம் அந்த ராதையிடம் வேண்டுகோள்
© அருள்மொழி வேந்தன்